செய்திகள் :

ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பெண்: உயிரைப் பணயம் வைத்து மீட்ட ரயில்வே காவலர்

post image

ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பெண் பயணியை ரயில்வே பாதுகாப்பு படை காவலர் பத்திரமாக மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து சிசிடிவி காட்சியும் வெளியாகியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சாமே தேவி (50). வேலூரில் தங்கியுள்ள இவர் தனது சொந்த ஊருக்குச் செல்வதற்காக நேற்று (02.10.2025) காட்பாடி இரயில் நிலையத்துக்கு சென்றுள்ளார்.

அப்போது கோவையில் இருந்து சென்னை செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரயில் புறப்படும் நேரத்தில் தனது மகன் உதவியுடன் ஏற முயன்றுள்ளார். ஆனால் அவர் ஓடும் இரயிலுக்கும் - நடைமேடைக்கும் இடையில் விழும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனை கண்ட ரயில்வே பாதுகாப்பு படை காவலர் ஆதித்யா குமார் விரைவாக செயல்பட்டு அந்தப் பெண் கீழே விழாமல் சிறிது தூரம் அந்த பெண்ணை பிடித்தபடி ஓடிச் சென்று மீட்டுள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக காவலர் ஆதித்யா குமார் ரயில் பெட்டிக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கி உள்ளார்.

இதனைக் கண்ட பயணிகள் அபாய சங்கிலியைப் பிடித்து ரயிலை நிறுத்திய நிலையில் சக ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் மற்றும் பயணிகளின் உதவியோடு காவலர் மீட்கப்பட்டுள்ளார். இதில் பெண் பயணி மற்றும் காவலருக்கு சிறிய காயம் ஏற்பட்டதோடு இருவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

கைதாகிறாரா ஆனந்த்? முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலர் புஸ்ஸி என். ஆனந்த்தின் முன் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.Is Anand being arrested? Anticipatory bail plea rejected! மேலும் பார்க்க

அக்.6-ல் காட்டாங்குளத்தூரில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு மின்சார ரயில்கள்

காலாண்டு விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக காட்டாங்குளத்தூரில் இருந்து சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆயுத பூஜை மற்றும் காலாண்டு விடுமுறைக்காக சென்னையில் இருந்து மக்கள், கூட்... மேலும் பார்க்க

விஜய் மீது வழக்குப் பதிவு செய்யாதது வருத்தமளிக்கிறது! - சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது வழக்குப் பதிவு செய்யாதது வருத்தமளிக்கிறது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.கரூரில் விஜய் பிரசாரத்தின் போது 41 பேர் பலியான நிலையில... மேலும் பார்க்க

காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை குறைந்த நிலையில் தற்போது ரூ.480 உயர்ந்துள்ளது. அதன்படி தங்கம் கிராமிற்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,900க்கும் ஒரு சவரன் ரூ.87,200க்கும் விற்பனை செய்யப... மேலும் பார்க்க

அவிநாசி: பட்டா வழங்கிய இடத்தில் உரிய அளவீடு செய்து தரக் கோரி போராட்டம்

பெருமாநல்லூர் அருகே காளிபாளையத்தில் பட்டா வழங்கிய இடத்தில் உரிய முறையில் அளவீடு செய்து தரக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் ஒன்றியம், அவிநாசி வட்டம் காளிபாளையம் ... மேலும் பார்க்க

'நான் பொறுப்பேற்க முடியாது' - நீதிமன்றத்தில் புஸ்ஸி ஆனந்த் தரப்பு வாதம்

கரூர் நெரிசல் பலி விவகாரத்தில் தவெகவைச் சேர்ந்த புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் கோரிய முன்ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.கரூர் வேலுச்சாமிபுரத்தில், கடந்த செப்.27 ஆம் தேதி இரவு தவெக... மேலும் பார்க்க