செய்திகள் :

தலிபான் வெளியுறவு அமைச்சர் இந்தியா வருவது உறுதி!

post image

ஆப்கானிஸ்தான் தலிபான் அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் அமிர் கான் முத்தாகி இந்தியா வருவகிறார் என்பதை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் தலைமையிலான ஆட்சி அமைந்தது 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், சர்வதேச நாடுகளின் அங்கீகாரத்தை அவர்கள் கோரி வருகின்றனர். இதனிடையில், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான உறவுகள் கடந்த சில மாதங்களாக மேம்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தலிபான் அரசின் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முத்தாகி, வரும் அக்டோபர் 9 ஆம் தேதி முதல் அக்டோபர் 16 ஆம் தேதி வரை இந்தியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி, செய்தியாளர்களுடன் பேசிய மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு ஆணையம் தலிபான் அமைச்சர் முத்தாகி பயணம் செய்ய விதித்திருந்த தடையானது நீக்கப்பட்டதால் அவர் இந்தியாவுக்கு வருகிறார் எனக் கூறியுள்ளார்.

இந்தப் பயணத்தில், அவர் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்து உரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, தலிபான் அமைச்சர் அமிர் கான் முத்தாகி கடந்த ஆக்ஸ்ட் மாதம் இந்தியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால், ஐ.நா. பாதுகாப்பு ஆணையம் அவர் பயணம் செய்ய தடை விதித்திருந்ததால் அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: சைபர் தாக்குதல் எதிரொலி: ஜப்பானில் ‘பீர்’ தட்டுப்பாடு!

The Union Ministry of External Affairs has confirmed the arrival of Amir Khan Muttaqi, the Foreign Minister of the Taliban government of Afghanistan, in India.

இத்தாலியில் சாலை விபத்தில் 2 இந்தியர்கள் பலி

இத்தாலியில் நிகழ்ந்த சாலை விபத்தில் 2 இந்தியர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியின் க்ராசிட்டோவில் உள்ள ஆரேலியா மாநில சாலையில் ஆசிய சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற வேனும் மினி பேருந... மேலும் பார்க்க

சைபர் தாக்குதல் எதிரொலி: ஜப்பானில் ‘பீர்’ தட்டுப்பாடு!

ஜப்பானின் பழம்பெருமை வாய்ந்த பீர் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான ‘ஆசாஹி’ மீது இணையவழி(சைபர்) தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதால் அந்நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும்(வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

இந்திய படங்களைத் திரையிட மறுக்கும் கனடாவின் திரையரங்குகள்! ஏன்?

கனடாவில் பல்வேறு திரையரங்குகள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, முன்னணி நிறுவனங்கள் இந்திய படங்கள் திரையிடுவதை நிறுத்தியுள்ளன.கனடாவின் டொராண்டோ நகரத்தில் உள்ள ஃபிலிம்.சிஏ சினிமாஸ் நிறுவனத்தின் திரையரங்... மேலும் பார்க்க

தாக்குதல் தொடர்கிறது! காஸாவுக்கான உதவிகளையும் தடுத்து நிறுத்தும் இஸ்ரேல்!!

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போரை நிறுத்த பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் அதற்கிடையே காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்து வருகிறது.இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற... மேலும் பார்க்க

மியான்மரில் 2வது நாளாக இன்றும் நிலநடுக்கம்!

மியான்மரில் இரண்டாவது நாளாக இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நிலஅதிர்வு மைய அறிக்கையின்படி, இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 09.54 மணிக்கு நிலநடுக... மேலும் பார்க்க

அமெரிக்காவின் அவமதிப்பை இந்தியர்கள் ஏற்க மாட்டார்கள்! புதின்

அமெரிக்காவின் அவமதிப்பை இந்திய மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்துள்ளார்.ரஷியாவின் சோச்சி நகரில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ... மேலும் பார்க்க