செய்திகள் :

இந்திய படங்களைத் திரையிட மறுக்கும் கனடாவின் திரையரங்குகள்! ஏன்?

post image

கனடாவில் பல்வேறு திரையரங்குகள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, முன்னணி நிறுவனங்கள் இந்திய படங்கள் திரையிடுவதை நிறுத்தியுள்ளன.

கனடாவின் டொராண்டோ நகரத்தில் உள்ள ஃபிலிம்.சிஏ சினிமாஸ் நிறுவனத்தின் திரையரங்கின் மீது, கடந்த வாரம் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தீ வைத்ததுடன், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர்.

மேலும், ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள பிரபல திரையரங்கின் மீதும் நேற்று (அக். 2) இரவு அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில், நல்வாய்ப்பாக எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

பெரும்பாலும், இரவுகளில் மட்டுமே நடைபெறும் இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் கனடாவின் பல்வேறு முக்கிய நகரங்களில், இந்திய திரைப்படங்களைத் திரையிடும் திரையரங்குகளைக் குறிவைத்தே நடத்தப்படுதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கனடாவின் முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பிற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்த அறிவிப்பு வரும் வரையில் இந்திய திரைப்படங்களைத் திரையிடப்போவதில்லை என அறிவித்துள்ளன.

இதுபற்றி, கனடாவில் செயல்படும் தென்னிந்திய திரைப்பட விநியோகஸ்தர்கள் கூறுகையில், கனடா திரையரங்கு நிறுவனங்களில் திரையிடப்படும் பிரபல திரைப்படங்களை நிறுத்துவதற்கு சிலர் பிரசாரம் மேற்கொண்டு வருவதாகக் கூறியுள்ளனர்.

இதையும் படிக்க:சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் மல்லிகார்ஜுன கார்கே!

Following attacks on various cinemas in Canada, screenings of Indian films have been suspended in cinemas run by leading companies.

இத்தாலியில் சாலை விபத்தில் 2 இந்தியர்கள் பலி

இத்தாலியில் நிகழ்ந்த சாலை விபத்தில் 2 இந்தியர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியின் க்ராசிட்டோவில் உள்ள ஆரேலியா மாநில சாலையில் ஆசிய சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற வேனும் மினி பேருந... மேலும் பார்க்க

தலிபான் வெளியுறவு அமைச்சர் இந்தியா வருவது உறுதி!

ஆப்கானிஸ்தான் தலிபான் அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் அமிர் கான் முத்தாகி இந்தியா வருவகிறார் என்பதை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் தலைமையிலான ஆட்சி அ... மேலும் பார்க்க

சைபர் தாக்குதல் எதிரொலி: ஜப்பானில் ‘பீர்’ தட்டுப்பாடு!

ஜப்பானின் பழம்பெருமை வாய்ந்த பீர் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான ‘ஆசாஹி’ மீது இணையவழி(சைபர்) தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதால் அந்நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும்(வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

தாக்குதல் தொடர்கிறது! காஸாவுக்கான உதவிகளையும் தடுத்து நிறுத்தும் இஸ்ரேல்!!

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போரை நிறுத்த பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் அதற்கிடையே காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்து வருகிறது.இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற... மேலும் பார்க்க

மியான்மரில் 2வது நாளாக இன்றும் நிலநடுக்கம்!

மியான்மரில் இரண்டாவது நாளாக இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நிலஅதிர்வு மைய அறிக்கையின்படி, இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 09.54 மணிக்கு நிலநடுக... மேலும் பார்க்க

அமெரிக்காவின் அவமதிப்பை இந்தியர்கள் ஏற்க மாட்டார்கள்! புதின்

அமெரிக்காவின் அவமதிப்பை இந்திய மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்துள்ளார்.ரஷியாவின் சோச்சி நகரில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ... மேலும் பார்க்க