செய்திகள் :

தாக்குதல் தொடர்கிறது! காஸாவுக்கான உதவிகளையும் தடுத்து நிறுத்தும் இஸ்ரேல்!!

post image

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போரை நிறுத்த பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் அதற்கிடையே காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்து வருகிறது.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. பாலஸ்தீன ஆதரவு பெற்ற ஹமாஸ் படையினரை காஸாவில் இருந்து முற்றிலுமாக அழிக்கும் நோக்கத்தில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், 68,000 -க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்த நிலையில் மேலும் உணவு, தண்ணீர் இன்றி அங்குள்ள மக்கள் தினமும் செத்துக் கொண்டிருக்கின்றனர்.

மனிதாபிமானமற்ற முறையில் முகாம்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இஸ்ரேல் - ஹமாஸ் படையினர் இடையே போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் , இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு புதிய திட்டத்தை வகுத்துள்ளார். இதற்கு ஹமாஸ் ஒப்புதல் தெரிவிக்கும்பட்சத்தில் விரைவில் போர் நிறுத்தம் அமலுக்கு வர வாய்ப்புள்ளது.

இந்த பேச்சுவார்த்தைக்கு இடையே காஸா நகரம் மீது தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருகிறது.

காஸா மக்களுக்கு கடைசி எச்சரிக்கை என்று கூறி இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. இன்றைய தாக்குதலில் 3 குழந்தைகள் உள்பட 22 பேர் பலியானதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காஸா மக்களுக்கு உணவு, உடைமைகள், மருந்துகள் கொண்டுவரும் சமூக ஆர்வலர்களின் கப்பலை இஸ்ரேல் கடற்படை தடுத்து நிறுத்தி வருகிறது. குளோபல் சுமுத் ஃப்ளோட்டிலா அமைப்பின் கடைசி கப்பலையும் இஸ்ரேல் கடற்படை தடுத்து நிறுத்தியுள்ளது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Israel bombs Gaza homes; military intercepts last flotilla boat

இத்தாலியில் சாலை விபத்தில் 2 இந்தியர்கள் பலி

இத்தாலியில் நிகழ்ந்த சாலை விபத்தில் 2 இந்தியர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியின் க்ராசிட்டோவில் உள்ள ஆரேலியா மாநில சாலையில் ஆசிய சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற வேனும் மினி பேருந... மேலும் பார்க்க

தலிபான் வெளியுறவு அமைச்சர் இந்தியா வருவது உறுதி!

ஆப்கானிஸ்தான் தலிபான் அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் அமிர் கான் முத்தாகி இந்தியா வருவகிறார் என்பதை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் தலைமையிலான ஆட்சி அ... மேலும் பார்க்க

சைபர் தாக்குதல் எதிரொலி: ஜப்பானில் ‘பீர்’ தட்டுப்பாடு!

ஜப்பானின் பழம்பெருமை வாய்ந்த பீர் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான ‘ஆசாஹி’ மீது இணையவழி(சைபர்) தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதால் அந்நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும்(வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

இந்திய படங்களைத் திரையிட மறுக்கும் கனடாவின் திரையரங்குகள்! ஏன்?

கனடாவில் பல்வேறு திரையரங்குகள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, முன்னணி நிறுவனங்கள் இந்திய படங்கள் திரையிடுவதை நிறுத்தியுள்ளன.கனடாவின் டொராண்டோ நகரத்தில் உள்ள ஃபிலிம்.சிஏ சினிமாஸ் நிறுவனத்தின் திரையரங்... மேலும் பார்க்க

மியான்மரில் 2வது நாளாக இன்றும் நிலநடுக்கம்!

மியான்மரில் இரண்டாவது நாளாக இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நிலஅதிர்வு மைய அறிக்கையின்படி, இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 09.54 மணிக்கு நிலநடுக... மேலும் பார்க்க

அமெரிக்காவின் அவமதிப்பை இந்தியர்கள் ஏற்க மாட்டார்கள்! புதின்

அமெரிக்காவின் அவமதிப்பை இந்திய மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்துள்ளார்.ரஷியாவின் சோச்சி நகரில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ... மேலும் பார்க்க