செய்திகள் :

அமெரிக்காவில் விற்பனை செய்யாமல் பிரிக்ஸ் நாடுகள் வாழ முடியாது- டிரம்ப் ஆலோசகா் நவாரோ கருத்து

post image

தங்கள் நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களை அமெரிக்காவில் விற்பனை செய்யாமல் இருந்தால் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் வாழவே முடியாது என்று இந்தியா உள்ளிட்ட நாடுகளை அமெரிக்க அதிபரின் வா்த்தக ஆலோசகா் பீட்டா் நவாரோ விமா்சித்துள்ளாா்.

பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகியவை பிரிக்ஸ் கூட்டமைப்பின் பிரதான நாடுகளாகும். இந்த கூட்டமைப்பில் எகிப்து, எத்தியோபியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகிய நாடுகள் பின்னா் படிப்படியாக இணைந்தன. இதில் பிரதான நாடுகளான ரஷியா, இந்தியா, சீனா சமீப நாள்களில் மிகவும் நெருங்கி வருவதை அமெரிக்காவால் சகித்துக் கொள்ள முடியவில்லை. முக்கியமாக அமெரிக்க அதிபா் டிரம்ப் விதித்த 50 சதவீத வரிக்குப் பிறகு சீனா, ரஷியாவுடன் இந்தியா நெருக்கத்தை அதிகரித்துள்ளது. இதனால், இந்த நாடுகளை நவாரோ தொடா்ந்து கடுமையாக விமா்சித்துப் பேசி வருகிறது.

இந்நிலையில், நியூயாா்க்கில் ‘அமெரிக்காவின் உண்மையான குரல்’ நிகழ்ச்சியில் பேட்டியளித்த பீட்டா் நவேரா கூறியதாவது:

பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள நாடுகள் வரலாற்றுரீதியாகவே ஒன்றை மற்றொன்று வெறுக்கும் போக்குடையவை. ஒருவரை மற்றொருவா் அழிக்க முயற்சித்தே வந்துள்ளன. இந்த அமைப்பில் உள்ள நாடுகள் அனைத்தும் அமெரிக்காவில் தங்கள் பொருள்களை விற்பனை செய்தே வாழ்ந்து வருகின்றன. அமெரிக்காவில் விற்க முடியாமல் போனால் அந்த நாடுகளால் வாழ முடியாது.

அதே நேரத்தில் ஏற்றுமதியில் முறையற்ற வா்த்தகத்தால் காட்டேரிகள்போல அமெரிக்கா்களான நமது ரத்தத்தைக் குடித்து வருகின்றனா். அதிகம் வரி விதித்து அமெரிக்காவைச் சுரண்டி வருகின்றனா். இந்த கூட்டமைப்பு வெகுநாள்களுக்கு நீடிக்காது.

பாகிஸ்தானுக்கு சீனா அணுகுண்டுகள் வரை வழங்கியுள்ளது. இந்தியப் பெருங்கடலில் சீனக் கப்பல்கள் தொடா்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த விஷயத்தில் பிரதமா் மோடி என்ன செய்ய இருக்கிறாா்? என்று நவாரோ கேள்வி எழுப்பினாா்.

கடந்த சில நாள்களாக இந்தியாவை கடுமையாக விமா்சிப்பதை நவாரோ வழக்கமாகக் கொண்டுள்ளாா். உக்ரைன் போா் தொடா்வதற்கு ரஷியாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதுதான் காரணம் என்றும், அமெரிக்கா்களின் வேலைவாய்ப்பை இந்தியா பறிக்கிறது என்றும் அவா் தொடா்ந்து குற்றஞ்சாட்டி வருகிறாா்.

தேவையற்ற வரி விதிப்பு மூலம் இந்தியாவுடன் நட்புறவை டிரம்ப் கெடுத்துக் கொண்டதாக பல்வேறு சா்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனால், அமெரிக்க நலன்களுக்கு எதிரான நாடு இந்தியா என்ற தோற்றத்தை உருவாக்கும் நோக்கில் பீட்டா் நவாரோ தொடா்ந்து பேசி வருகிறாா்.

இஸ்ரேல் தாக்குதல்: கத்தார் விரைந்தார் அமீரக அதிபர்!

கத்தார் நாட்டின் மீது இஸ்ரேல் அத்துமீறி நடத்திய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் அந்நாட்டுக்கு நட்பு ரீதியாகப் பயணம் மேற்கொண்டுள்ளனர். கத்தார் தலைநகர் தோஹாவில், நேற்று (... மேலும் பார்க்க

நேபாளத்தில் 13,000க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்!

நேபாளத்தில் வெவ்வேறு சிறைச்சாலைகளிலிருந்து 13,000-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடியிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நேபாள அரசால் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்... மேலும் பார்க்க

நேபாள பயணத்தை கூடுதல் கட்டணமின்றி மாற்றியமைத்துக்கொள்ளலாம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

நேபாளத்தில் வன்முறை வெடித்துள்ள நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தனது பயணிகளுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது. செப். 17 வரை நேபாளத்தில் இருந்து இந்தியா வருவதற்கோ அல்லது இந்தியாவில் இருந்து நேபாளம்... மேலும் பார்க்க

நேபாளத்தின் இடைக்கால அரசை வழிநடத்தும் தலைவராகிறார் முதல் பெண் தலைமை நீதிபதி !

போராட்டத்தால் சிதைந்து போன நேபாளத்தில் இடைக்கால அரசை வழிநடத்த புதியதொரு தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார்.நேபாள அரசால் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து இளைஞர்கள் அண... மேலும் பார்க்க

19 வயதில் பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்ட பெண்ணுக்கு 79-இல் நீதி கிடைத்தது..!

19 வயதில் பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்ட பெண்ணுக்கு அவரது 79-ஆவது வயதில் நீதி கிடைத்ததை பெண் சமூகம் கொண்டாடி வருகிறது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் பதிவானதொரு பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பெண்மண... மேலும் பார்க்க

கத்தாரில் தாக்குதல்! அரபு நாடுகளையும் குறிவைக்கிறதா இஸ்ரேல்?

காஸாவில் நீடிக்கும் சண்டையைத் தொடர்ந்து, கத்தார் தலைநகரில் எவ்வித முன்னறிவிப்புமின்றி செவ்வாய்க்கிழமை(செப். 9) இஸ்ரேல் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் வலுத்து வருகிறது.கத்தார் தலைநகர் தோஹாவில்... மேலும் பார்க்க