செய்திகள் :

அமெரிக்காவில் வேலை செய்யும் வெளிநாட்டினருக்கு மீண்டும் மீண்டும் செக் வைக்கும் ட்ரம்ப்

post image

அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினருக்கு மீண்டும் செக் வைத்துள்ளது ட்ரம்ப் அரசாங்கம்.

என்ன அது?

இதுவரை அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினர் தங்களை தொடர்ந்து பணிபுரியும் அனுமதிக்க விண்ணப்பித்தால் போதும். தானாகவே அவர்களுக்கு பணிபுரிவதற்கான அனுமதி புதுப்பிக்கப்பட்டு தரப்படும்.

ஆனால், இனி அப்படி கிடையாது. தொடர்ந்து பணிபுரிவதற்காக விண்ணப்பித்திருப்பவர்களை இனி தேசிய பாதுகாப்பு அடிப்படையில் சோதிக்கப்படுவார்கள். அதில் தேர்வானால் மட்டுமே, அவர்களது பணி புரிவதற்கான அனுமதி நீட்டிக்கப்படும்.

இந்த நடைமுறை இன்று (அமெரிக்க நேரப்படி) முதல் அமலாகிறது. அக்டோபர் 30-க்கு முன்பு, விண்ணப்பித்து, அனுமதி பெற்றவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.

அமெரிக்கா
அமெரிக்கா

முன்பு

அமெரிக்காவில் முன்பிருந்த ஆட்சியில், வேலைக்கான அனுமதி முடிந்த பின்னும், அந்த வேலை நீட்டிப்புக்கான சரியான நேரத்தில் விண்ணப்பித்திருந்தால், அடுத்த 540 நாள்களுக்கு தானாக அனுமதி நீட்டிக்கப்படும். இதற்கு தான் தற்போது தடை விதித்துள்ளது அமெரிக்க அரசு.

இதனால், பல வெளிநாட்டினர் பாதிக்கப்பட்டாலும், குறிப்பாக ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள்.

ஏற்கெனவே ஹெச்-1பி விசா கட்டண உயர்வு விஷயம் இந்தியர்களை பெரிதாக பாதித்த நிலையில், இந்த நகர்வும் அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்களுக்கு பெரிய அடி.

Modi: "திமுக, காங்கிரஸ் பீகார் மக்களை அவமதிக்கிறது" - பீகாரில் பிரதமர் பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 30) இந்தியா கூட்டணி கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் மற்றும் திமுக பீகார் மக்களை அவமானப்படுத்துவதாக பேசி உள்ளார்.பீகார் மாநிலம் சக்கரா பகுதியில் நடந்த பா... மேலும் பார்க்க

'விஜய்யின் விருப்பம்; திமுகவின் நெருக்கடி; அதிமுகவோடு கூட்டணியில்லை!' - உறுதியாக கூறும் அருண் ராஜ்!

கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய்யின் தவெக கட்சி மீண்டும் செயல்பட தொடங்கியிருக்கிறது. கட்சியின் அன்றாட செயல்பாடுகளை கவனிக்க 28 உறுப்பினர்களை கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. முக்கிய நிர்வாகிகள் ... மேலும் பார்க்க

`இவர்கள் திமுக பி டீம்' - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

இன்று (அக்.30) பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குரு பூஜையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் ... மேலும் பார்க்க

பசும்பொன்: தேவர் நினைவிட பூசாரி கன்னத்தில் அறைந்த ஸ்ரீதர் வாண்டையார்; தர்ணாவும் செய்ததால் பரபரப்பு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிட பூசாரியை மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஶ்ரீதர் வாண்டையார்பார்வர்ட் பிளாக் கட்சி... மேலும் பார்க்க

வெற்றிகரமாக முடிந்த ட்ரம்ப் - ஜின்பிங் சந்திப்பு; என்னென்ன முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன?

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில்... கடந்த ஏப்ரல் மாதம் 2-ம் தேதி தான், முதன்முதலாக ... மேலும் பார்க்க

SIR Row : `அதிமுக வரவேற்பதும், திமுக எதிர்ப்பதும் ஏன்?' - முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் | களம் 1

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)முன்னாள் அமைச்சர்கட்டுரையாளர்: முனைவர் வைகைச்... மேலும் பார்க்க