செய்திகள் :

அமெரிக்கா செல்ல உங்களுக்கு ஐடியா இருக்கிறதா? - விசாவிற்கு 'இந்த' தகவல் கட்டாயம்! - புது ரூல்

post image

அமெரிக்கா தன் நாட்டுக்குள் வெளிநாட்டினர் அதிகம் குடியேறாமல் இருக்க, பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. மேலும், அந்த நாட்டுக்குள் குடியேறுபவர்கள் அரசுக்கு எதிரான எந்தப் பிரச்னை மற்றும் போராட்டத்திலும் ஈடுபட்டு விடக் கூடாது என்பதிலும் தெளிவாக இருக்கிறது.

புது கண்டிஷன் என்ன?

அதற்கேற்ற மாதிரி, விசா நடைமுறைகளைக் கடினமாக்கி வருகிறது, அமெரிக்கா. அதில் ஒன்றாக தற்போது அமெரிக்க தூதரகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி...

"அமெரிக்க விசாவிற்கு (DS-160 விசா) விண்ணப்பிப்பவர்கள், கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர்கள் பயன்படுத்தும் அனைத்து சமூக வலைதளங்களின் பயனர் ஐ.டிகளின் பெயர்களை சமர்பிக்க வேண்டும்.

விசா
விசா

மேலும், அந்தத் தரவுகள் சரியானது தான் என்று விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு தர வேண்டும்.

இந்த சமூக வலைதள தகவல்களைத் தராமல் தவிர்த்தால், அவர்களது விசா விண்ணப்பம் ஏற்றக்கொள்ளப் படாமலும் போகலாம். மேலும், எதிர்காலத்தில் குறிப்பிட்ட நபர் விண்ணப்பிக்கும் விசாக்களும் கிடைக்காமலும் போகலாம்".

எதற்காக இது?

அமெரிக்க தூதரகத்தை சேர்ந்தவர்கள், விண்ணப்பதாரர்கள் அமெரிக்காவின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டிருக்கிறார்களா என்பதை இந்த ஐடிகளில் பரிசோதிப்பார்கள். அதன் பின்னரே, விசா வழங்கப்பட வேண்டுமா என்பது முடிவு எடுக்கப்படும்.

DS 16 விசாவை சுற்றுலா செல்பவர்கள், பிசினஸ் செய்ய செல்பவர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் தான் விண்ணப்பிப்பார்கள். அதனால், இந்தக் கண்டிஷனைக் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள் மக்களே.

விழுப்புரம்: பள்ளிக் குழந்தைகளுக்கு பரிமாறப்பட்ட உணவில் பல்லி வால்! - மருத்துவர்கள் பரிசோதனை

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே அமைந்துள்ள ஆணைவாரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டத்தில் பல்லி விழுந்த சத்துணவை சாப்பிட்ட 52 மாணவ மாணவிகளிடம் மருத்துவர்கள் பரிசோதனை ... மேலும் பார்க்க

'அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதி மகனுக்கு கொஞ்சமாவது அருகதை இருக்கிறதா?' - இ.பி.எஸ் காட்டம்

கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22), மதுரையில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்பட்டது. அந்த மாநாட்டில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டவர்களின் முன்னிலையில்... மேலும் பார்க்க

தஞ்சை: ”சாலையில் ஓடும் பாதாள சாக்கடை கழிவு நீர்”- அதிமுக, பாஜக கவுன்சிலர்கள் சாலை மறியல் போராட்டம்!

தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட 31 வது வார்டில் உள்ளது செண்பகவள்ளி நகர். இப்பகுதியில் பாதாள சாக்கடை மெயின் குழாய் பதிக்கும் பணி கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இந்த பணிகள் இன... மேலும் பார்க்க

'இனி எங்களை சீண்டினால், பெரிய விலை கொடுக்க வேண்டியதாக இருக்கும்' - அமெரிக்காவை எச்சரிக்கும் காமேனி

கடந்த சனிக்கிழமை (ஜூன் 21) நள்ளிரவில், ஈரானின் அணு ஆயுதத் திட்டப் பகுதிகளைத் தாக்கியது அமெரிக்கா. இது இஸ்ரேலுக்கு ஆதரவான செயலாக பார்க்கப்பட்டது. இந்தத் தாக்குதல்கள் குறித்து ஈரான் உச்சத் தலைவர் காமேனி... மேலும் பார்க்க

'சியோனிச ஆட்சியை வீழ்த்தி... நசுக்கி'- இஸ்ரேல் - ஈரான் தாக்குதலுக்கு பிறகு காமேனியின் முதல் கமென்ட்!

இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் நிறுத்தத்தை அடுத்து, ஈரான் நாட்டிற்குள் எழுந்த மிகப்பெரிய கேள்வி, 'ஈரானின் உச்சத் தலைவர் காமேனி எங்கே?' இந்தத் தாக்குதல் தொடங்கியதில் இருந்து அவரை வெளியிடங்களில் காணவே முடியவ... மேலும் பார்க்க

`இந்திரா காந்தி சுயநலத்துகாகவே அவசர நிலையை அறிவித்தார்!’ – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

இந்தியாவில் அவசர நிலையை பிரகடனப்படுத்திய 50-வது ஆண்டை நினைவுகூறும் விதமாக, அரசியலைப்பு படுகொலை தினமாக அனுசரிக்க மத்திய அரசு பரிந்துரைத்திருக்கிறது. அதனடிப்படையில் புதுச்சேரி கலைப் பண்பாட்டுத் துறை சார... மேலும் பார்க்க