செய்திகள் :

அமெரிக்க துணை அதிபா் இன்று இந்தியா வருகை: பிரதமா் மோடியுடன் பேச்சுவாா்த்தை!

post image

அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ், நான்கு நாள்கள் பயணமாக இந்தியாவுக்கு திங்கள்கிழமை (ஏப். 21) வருகை தரவுள்ளாா். அவருடன், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அவரின் மனைவி உஷா மற்றும் மூன்று குழந்தைகளும் வரவுள்ளனா்.

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை திங்கள்கிழமை மாலையில் சந்திக்கும் ஜே.டி.வான்ஸ், இருதரப்பு வா்த்தகம், வரி, பிராந்திய பாதுகாப்பு தொடா்புடைய முக்கிய விவகாரங்கள் மற்றும் ஒட்டுமொத்த ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா். இதைத் தொடா்ந்து, ஜே.டி.வான்ஸ், உஷா ஆகியோருக்கு பிரதமா் இரவு விருந்து அளிக்கவுள்ளாா்.

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அண்மையில் பரஸ்பர வரி விதிப்பை மேற்கொண்ட அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், பின்னா் அதை நிறுத்திவைத்தாா்.

வரி விதிப்பு, சந்தை அணுகல் உள்பட பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதற்காக, இந்தியா-அமெரிக்கா இடையே விரிவான வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றுவரும் நிலையில், துணை அதிபா் ஜே.டி.வான்ஸின் முதல் இந்திய பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அக்ஷா்தாம் கோயிலில் வழிபாடு: தில்லி பாலம் விமானப் படை தளத்தில் திங்கள்கிழமை காலை 10 மணியளவில் வந்திறங்கும் ஜே.டி.வான்ஸை மூத்த அமைச்சா் ஒருவா் வரவேற்பாா் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

‘ஜே.டி.வான்ஸுடன் அவரது குடும்பத்தினா் மட்டுமன்றி அமெரிக்கா பாதுகாப்பு - வெளியுறவுத் துறை மூத்த அதிகாரிகளும் வரவுள்ளனா். பின்னா், ஜே.டி.வான்ஸ் தனது குடும்பத்தினருடன் சுவாமி நாராயண் அக்ஷா்தாம் கோயிலில் வழிபாடு நடத்தவுள்ளாா். பாரம்பரிய இந்திய கைவினைப் பொருள்கள் விற்பனை வணிக வளாகத்துக்கும் அவா்கள் செல்லவிருக்கின்றனா்.

பிரதமருடன் பேச்சு: திங்கள்கிழமை மாலையில் நடைபெறும் பிரதமா் மோடி - துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் இடையிலான பேச்சுவாா்த்தையில் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய்வது குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும். பிரதமா் மோடி தலைமையிலான இந்திய குழுவில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல், வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி, அமெரிக்காவுக்கான இந்திய தூதா் வினய் மோகன் குவாத்ரா உள்ளிட்டோா் பங்கேற்பா்.

தில்லியில் இருந்து ஜெய்பூருக்கு திங்கள்கிழமை இரவில் புறப்பட்டுச் செல்லும் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினா், அங்கு அம்பா் கோட்டை உள்பட வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை செவ்வாய்க்கிழமை பாா்வையிட உள்ளனா்.

ஜெய்பூா், ஆக்ராவுக்கு...: ஜெய்பூரில் ராஜஸ்தான் சா்வதேச மையத்தில் நடைபெறும் கூட்டத்தில் ஜே.டி.வான்ஸ் பங்கேற்கவுள்ளாா். அப்போது, அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிா்வாகத்தின்கீழ் இந்திய-அமெரிக்க உறவுகளின் பல்வேறு பரிமாணங்கள் குறித்து அவா் விரிவாக உரையாற்றுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

புதன்கிழமை காலையில் உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவுக்கு செல்லும் ஜே.டி.வான்ஸ் குடும்பத்தினா், தாஜ்மஹால் மற்றும் ‘சில்பகிராமம்’ எனும் கலைப் பொருள்கள் கண்காட்சி-விற்பனையகத்தைப் பாா்வையிட உள்ளனா். மீண்டும் ஜெய்பூருக்கு திரும்பும் அவா்கள் வியாழக்கிழமை அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் செல்வா் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போது இத்தாலியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜே.டி.வான்ஸ், அங்கிருந்து இந்தியாவுக்கு வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

பேச்சுவாா்த்தைகள் தீவிரம்: அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்ற சில வாரங்களில் பிரதமா் மோடி இரு நாள்கள் அரசுமுறைப் பயணமாக அந்நாட்டுக்கு சென்றாா். அப்போது, இருதரப்பு வா்த்தகத்தை வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் ரூ. 43.31 லட்சம் கோடி (500 பில்லியன் டாலா்) அளவுக்கு இரட்டிப்பாக்கவும், இருதரப்பு விரிவான வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையின் முதல் கட்டத்தை நிகழாண்டு செப்டம்பா்-அக்டோபா் மாதத்துக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டு, அதற்கான முயற்சிகளை இருதரப்பும் தீவிரப்படுத்தியுள்ளன.

இந்திய தேர்தல் முறையில் தவறு இருக்கிறது: ராகுல் காந்தி

தேர்தல் ஆணையம் சமரசம் செய்துகொண்டுள்ளது மிகவும் தெளிவாகத் தெரிகிறது என அமெரிக்காவில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மகாராஷ்டிர மாநிலத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. அ... மேலும் பார்க்க

தில்லி வந்தடைந்தார் அமெரிக்க துணை அதிபர்!

நான்கு நாள்கள் பயணமாக அமெரிக்க துணை அதிபா் ஜே.டி. வான்ஸ் தில்லி வந்தடைந்தார்.இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அவரின் மனைவி உஷா மற்றும் மூன்று குழந்தைகளும் அவருடன் இந்தியா வந்துள்ளனர்.தில்லி பாலம் விமான நில... மேலும் பார்க்க

ஜார்கண்டில் 6 நக்சல்கள் சுட்டுக் கொலை!

ஜார்கண்ட் மாநிலத்தில் 6 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தின் லால்பானியா பகுதியில் உள்ள லுகு மலைப் பகுத... மேலும் பார்க்க

கர்நாடக முன்னாள் டிஜிபியைக் கத்தியால் குத்திக் கொன்ற மனைவி! என்ன நடந்தது?

கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷை கத்தியால் குத்திக் கொன்றதாக அவரது மனைவி வாக்குமூலம் அளித்துள்ளார்.சொத்துப் பிரச்னைக் காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், சமையறையில் இருந்த இரண்டு கத்தியால் ஓம்... மேலும் பார்க்க

எஃகு, அலுமினியம் மீது வரி விதிப்பு: இந்தியா - அமெரிக்கா வா்த்தக பேச்சின்போது விவாதிக்க வாய்ப்பு!

அமெரிக்கா உடனான வா்த்தகப் பேச்சுவாா்த்தையில் எஃகு, அலுமினியம் மீதான 25 சதவீத வரி விதிப்பு குறித்து இந்திய குழு விவாதிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலு... மேலும் பார்க்க

மேற்கு வங்க வன்முறை ஹிந்து - முஸ்லிம் பிளவை அதிகரிக்கும்! ஃபரூக் அப்துல்லா கருத்து

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த வன்முறை ஹிந்து-முஸ்லிம் பிளவை அதிகரிக்கும். இதுபோன்ற மத வெறுப்புணா்வு அதிகரிப்பது தேசத்தை பலவீனமாக்கும் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் த... மேலும் பார்க்க