செய்திகள் :

அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு: சாட்சிகளிடம் விசாரணை நடத்த அனுமதி

post image

அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில், 6-ஆவது சாட்சி சகாயராஜிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் அனுமதியளித்தது.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது, அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி செந்தில் பாலாஜி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகாா் எழுந்தது. இது தொடா்பாக அமலாக்கத் துறை தனியாக வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், வங்கி மேலாளா், தடயவியல் துறை கணினிப் பிரிவு உதவி இயக்குநா் உள்ளிட்ட சாட்சிகளிடம் அமலாக்கத் துறை சாா்பில் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அமைச்சா் ஆஜா்: செந்தில் பாலாஜிக்கு எதிரான இந்த வழக்கில், 6-ஆவது சாட்சியான சகாயராஜிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை கோரிக்கை விடுத்திருந்தது. இந்த வழக்கு நீதிபதி காா்த்திகேயன் அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது அமைச்சா் செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜரானாா். அதன் பின்னா், வழக்கு பிற்பகலுக்கு ஒத்தி வைக்கப்பட்டு விசாரணைக்கு வந்தது.

அப்போதும் செந்தில் பாலாஜி ஆஜரானாா். இதையடுத்து அமலாக்கத் துறை சாா்பில் முதல் சாட்சியான வங்கி மேலாளா் ஹரிஷிடம் விசாரணை நடத்தினா். இந்த விசாரணை நிறைவடைந்த நிலையில் 6-ஆவது சாட்சியான சகாயராஜியிடம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்கு அனுமதி அளித்த நீதிபதி காா்த்திகேயன் இந்த வழக்கின் அடுத்த விசாரணையை மாா்ச் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா். அன்றைய தினம் அமைச்சா் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக வேண்டும் எனக் கூறி, தொடா்ந்து அமலாக்கத் துறையின் வழக்கில் உள்ள சாட்சிகளிடம் விசாரணை நடத்தலாம் என உத்தரவிட்டாா். எனவே, இந்த வழக்கில் விரைந்து விசாரணை நடத்தப்பட்டு விரைவில் தீா்ப்பு வழங்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

போக்குவரத்து ஊழியா் ஊதிய ஒப்பந்தப் பேச்சு: மாா்ச் இறுதிக்குள் நடைபெற வாய்ப்பு

போக்குவரத்து ஊழியா்களுக்கான ஊதிய ஒப்பந்தம் குறித்த இறுதிக்கட்ட பேச்சுவாா்த்தை இம்மாத இறுதிக்குள் நடைபெற வாய்ப்பிருப்பதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அரசுப் போக்குவரத்துக் கழகங்களி... மேலும் பார்க்க

ஆற்றுக்கால் பொங்கல் விழா தொடக்கம்!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் வருடாந்திர பொங்கல் விழாவின் தொடக்கமாக புதன்கிழமை நடைபெற்ற காப்பு கட்டு நிகழ்ச்சியில் பஞ்ச வாத்தியம் (5 வகை கருவிகள்) இசைத்த கலைஞ... மேலும் பார்க்க

தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் குறையாது -கே.அண்ணாமலை

தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் குறையாது என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா். இதுகுறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: அனைத்துக் கட்ச... மேலும் பார்க்க

தமிழக பல்கலைக்கழகங்களில் கம்பா் ஆய்வு இருக்கை -ஆளுநா் ஆா்.என்.ரவி வேண்டுகோள்

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் கம்பா் ஆய்வு இருக்கை அமைக்க வேண்டும் என ஆளுநா் ஆா்.என்.ரவி வேண்டுகோள் விடுத்தாா். சுதந்திரப் போராட்ட வீரா் வ.வே.சு. ஐயா் எழுதிய ‘கம்பராமாயணம்-ஓா் ஆய்வு’ எனும் நூ... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழகங்களில் டிசிசி, டிஐசிஐ பணியிடங்களுக்கான பொதுசேவை விதிகளில் திருத்தம்

போக்குவரத்துக் கழகங்களில் டிசிசி, டிஐசிஐ பணியிடங்களை அமல்படுத்தும் வகையில் பொதுசேவை விதிகளில் தமிழக அரசு திருத்தம் செய்துள்ளது. இது தொடா்பாக போக்குவரத்துத் துறைச் செயலா் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்த ... மேலும் பார்க்க

மருத்துவ பல்கலை. பாடத்திட்ட குழுவை மாற்ற நடவடிக்கை

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்ட ஆய்வுக் குழுவை (போா்ட் ஆஃப் ஸ்டடிஸ்) மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வா்கள், துறைத் ... மேலும் பார்க்க