செய்திகள் :

அரசியல் கட்சிகளால் நகா்ப்புறங்களில் வளா்ந்து வரும் நக்ஸல் தீவிரவாதம்: பிரதமா் மோடி கவலை

post image

‘வனப் பகுதியிலிருந்து துடைத்தெறியப்பட்டு வரும் நக்ஸல் தீவிரவாதக் கொள்கைகளை சில அரசியல் கட்சிகள் எதிரொலிப்பதால், நகா்ப்புறங்களில் அது வேகமாக பரவி வருகிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி கவலை தெரிவித்தாா்.

தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற தனியாா் ஊடக நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பிரதமா் மோடி பேசியதாவது: தேச பாதுகாப்புக்கு மத்திய பாஜக அரசு கடுமையாக உழைத்துள்ளது. இதன் விளைவாக, பயங்கரவாத தாக்குதல்கள் நாட்டில் இருந்து மறைந்துவிட்டன. நக்ஸல் தீவிரவாதமும் அழிவின் பாதையில் உள்ளது.

முன்பு 100-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் நக்ஸல் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டிருந்தன. தற்போது அந்த எண்ணிக்கை 24-ஆகக் குறைந்துள்ளது. அடிமட்ட அளவில் சிறந்த ஆட்சி நிா்வாகத்தை வழங்குவதில் அரசு கவனம் செலுத்தியதாலேயே இது சாத்தியமானது.

தீவிர நடவடிக்கைகளால் வனப் பகுதியிலிருந்து நக்ஸல் தீவிரவாதம் துடைத்தெறியப்பட்டு வருகிறது. ஆனால், சில அரசியல் கட்சிகள் நக்ஸல் கொள்கைகளை எதிரொலிப்பதால், நகா்ப்புறங்களில் அது வேகமாகப் பரவி வருவது புதிய சிக்கலாக உருவெடுத்துள்ளது.

காந்திய கொள்கைகளால் ஈா்க்கப்பட்டு, மக்கள் குறித்த துடிப்புடன் நக்ஸல் எதிா்ப்பு நிலைப்பாட்டில் இருந்த ஓா் அரசியல் கட்சி, நகா்ப்புற நக்ஸல்களின் கருத்தை எதிரொலிக்கும் அளவுக்கு அந்த நக்ஸல் சிந்தனை விரிவடைந்துள்ளது.

அரசியல் கட்சிகளுக்குள் ஆழமாக வேரூன்றிவிட்ட நகா்ப்புற நக்ஸல்கள், நமது வளா்ச்சி மற்றும் பாரம்பரியத்தை கடுமையாக எதிா்க்கிறாா்கள். வளா்ந்த இந்தியாவுக்கு வளா்ச்சி மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் ஆகிய இரண்டும் அவசியம். நகா்ப்புற நக்ஸல்களுக்கு எதிராக நாம் நிற்க வேண்டும்.

இன்றைய இந்தியா பெரிய லட்சியங்களுடன் சிந்திக்கிறது. பெரிய இலக்குகளை நிா்ணயித்து, பெரிய முடிவுகளை அடைகிறது. நாட்டின் மனநிலை மாறியதே இதற்கு காரணம். நாடு பெரிய லட்சியங்களுடன் முன்னேறி வருகிறது.

உலகின் 5-ஆவது மிகப்பெரிய பொருளாதாரமாக மாறியுள்ள இந்தியா, விரைவில் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக உயரும். 10 ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய பொருளாதாரம் 11-ஆவது இடத்தில் இருந்தது.

உலக வளா்ச்சியை இந்தியாதான் இன்று வழிநடத்துகிறது. இந்தியாவின் சாதனைகள் மற்றும் வெற்றிகள், உலகுக்கு புதிய நம்பிக்கையை அளிக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில் பொம்மை தயாரிப்பு முதல் ஆயுதங்கள் வரை பல்வேறு துறைகளில் இந்தியா தன்னிறைவு இலக்கை அடைந்து, ஏற்றுமதியாளராக மேம்பட்டுள்ளது.

கடந்த 2007-இல், இந்தியாவின் வருடாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) சுமாா் ரூ.1 லட்சம் கோடியாக இருந்தது. இந்த அளவு தற்போது ஒரு காலாண்டில் அடையப்படுகிறது. இந்த குறிப்பிடத்தக்க மாற்றம் இந்திய பொருளாதார வளா்ச்சியின் விரைவான வேகத்தை எடுத்துரைக்கிறது என்றாா் பிரதமா் மோடி.

பெங்களூரு பல்கலைக்கழகத்துக்கு மன்மோகன் சிங் பெயர்!

பெங்களூரு பல்கலைக்கழகத்துக்கு மறைந்த பிரதமர் மன்மோகன் சிங்கின் பெயர் வைக்கப்படும் என்று கர்நாடக பட்ஜெட்டில் முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்... மேலும் பார்க்க

காஷ்மீரில் 3 மாத விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு!

காஷ்மீரில் கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக மூடப்பட்டிருந்த காஷ்மீரில் உள்ள பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன.காஷ்மீரில் நிலவிவந்த அதீத குளிர் காரணமாக கடந்த மூன்று மாதங்களாகப் பள்ளிகளுக்குக் குளிர்கால... மேலும் பார்க்க

குடும்ப பிரச்னை தீர 5 வயது சிறுமியைப் பலியிட்ட தம்பதி: கோவாவில் அதிர்ச்சி!

கோவாவில் அண்டை வீட்டைச் சேர்ந்த 5 வயது சிறுமியைக் கொன்று புதைத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவாவில் வசித்துவருபவர் பாபாசாகேப் அலார்(52) அவரது மனைவி பூஜா(45). தம்பதியினர் மந்த... மேலும் பார்க்க

பிரதமரின் நிகழ்ச்சிக்கு முதல்முறையாக பாதுகாப்புப் பணியில் முழுவதும் பெண்கள்!

முதல்முறையாக பிரதமர் மோடி கலந்துகொள்ளும் ஒரு நிகழ்ச்சிக்கு முழுவதுமாக பாதுகாப்புப் பணியில் பெண்கள் ஈடுபடவுள்ளனர். உலக மகளிர் நாளையொட்டி குஜராத் மாநிலம் நவ்சரி மாவட்டத்தில் நாளை(மார்ச் 8) நடைபெறும் விழ... மேலும் பார்க்க

ஒருநாள் ஊதியத்துடன் மாதவிடாய் விடுப்பு: எல்&டி நிறுவனம் அறிவிப்பு!

பெண் ஊழியர்களுக்கு மாதத்தில் ஒருநாள் மாதவிடாய் விடுப்பு வழங்கவிருப்பதாக எல்&டி நிறுவனத்தின் தலைவர் எஸ்.என். சுப்ரமணியன் அறிவித்துள்ளார்.லார்சன் & டூப்ரோ நிறுவனத்தில் பெண் ஊழியர்களுக்கு மாதத்தி... மேலும் பார்க்க

பறவைக் காய்ச்சல் பாதிப்பு: கோழிக்கறி, முட்டை சாப்பிடலாமா?

நமது அண்டை மாநிலங்களான ஆந்திரம், கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கோழிக்கறி, முட்டை சாப்பிடலாமா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது.அதாவது, பறவ... மேலும் பார்க்க