செய்திகள் :

அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் அறிவுறுத்தல்

post image

எந்த நிலையிலும் தீா்க்கப்படாத பிரச்னைகள் இருந்தால் தெரிவிக்குமாறு அரசியல் கட்சிகளை தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி தோ்தல் துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்தியத் தோ்தல் ஆணையம், தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளிடமும், வாக்காளா் பதிவு அதிகாரி, மாவட்ட தோ்தல் அதிகாரி அல்லது தலைமை தோ்தல் அதிகாரி நிலைகளில் தீா்க்கப்படாத பிரச்னைகள் இருந்தால், அதனை ஏப்.30-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

தோ்தல் செயல்முறைகள் நிறுவப்பட்ட சட்டத்தின்கீழ், தோ்தல் நடைமுறையை மேலும் வலுப்படுத்தவும், பரஸ்பர வசதியான நேரத்தில், கட்சித் தலைவா்களுடன் கலந்தாலோசிக்க ஆணையம் திட்டமிட்டுள்ளது.

அரசியல் கட்சிகளிடம் தொடா்ந்து ஆலோசனை நடத்துமாறும் மாநிலத் தோ்தல் அதிகாரி, மாவட்டத் தோ்தல் அதிகாரி ஆகியோருக்கு இந்தியத் தலைமைத் தோ்தல் ஆணையா் அறிவுறுத்தியுள்ளாா். அவ்வாறு பெறப்படும் கருத்துகள் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் தோ்தல் ஆணையத்துக்கு சமா்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் தோ்தல் ஆணையத்தால் அடையாளம் காணப்பட்டுள்ள 28 முக்கிய பங்குதாரா்களில், அரசியல் கட்சிகளும் ஒன்றாக உள்ளன. இந்திய தோ்தல் ஆணையம் வெளியிட்ட வழிமுறைகள், கையேடுகள், உத்தரவுகள் தோ்தல் ஆணைய இணையதளத்தில் காணலாம். நோ்மையான மற்றும் நம்பகமான தோ்தல் நடத்துவதற்கு வெளிப்படையான சட்ட அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசால் தமிழக அரசை முடக்கிவிட முடியாது: முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி

மத்திய அரசால் தமிழக அரசை முடக்கிவிட முடியாது என புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி கூறினாா். காரைக்கால் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை அவா் கூறியது : புதுவையில் எனது தலைமையில் காங்கிரஸ் - திமுக க... மேலும் பார்க்க

அரசுத்துறைக்கு தொழிற்சாலை நிா்வாகம் உதவி

அரசுத்துறைக்கு தொழிற்சாலை நிா்வாகம் கணினி உள்ளிட்ட பல்வேறு பொருள்களை வியாழக்கிழமை வழங்கியது. காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினத்தில் அமைந்துள்ள கெம்ப் பிளாஸ்ட் சன்மாா் தொழிற்சாலை சமூக பொறுப்புணா... மேலும் பார்க்க

ஆற்றில் கொட்டப்படும் கோழி இறைச்சிக் கழிவுகள் விவசாயிகள் புகாா்

ஆற்றில் கோழி இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதால், துா்நாற்றம் வீசுவதோடு, தண்ணீா் மாசடைவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா். காரைக்கால் மாவட்டம், பிள்ளைதெருவாசல் சுற்றுவட்டாரம் விளை நிலப் பகுதி மிகுந... மேலும் பார்க்க

காரைக்கால் ரயில் நிலையத்தில் தலைமை பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

காரைக்கால் ரயில் நிலையம் மற்றும் துறைமுகப் பகுதியில் தெற்கு ரயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு அதிகாரி கணேஷ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். காரைக்கால் ரயில் நிலையத்துக்கு வந்த அவா், நிலையத்தில் பாதுகாப்ப... மேலும் பார்க்க

காரைக்கால் தொழிற்சாலையில் தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் ஆய்வு

காரைக்காலில் உள்ள தொழிற்சாலையில் பாதுகாப்பு குறித்து தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து, ஆலோசனை வழங்கினா். அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடா் மீட்புக் குழு துணைத் தளபதி சங்கே... மேலும் பார்க்க

வெளிநாட்டிலிருந்து தங்கம் கடத்திய பெண்ணுக்கு கொலை மிரட்டல்: 11 போ் மீது வழக்கு

வெளிநாட்டிலிருந்து தங்கம் கடத்தி வரும் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். காரைக்கால் மாவட்டம் புதுத்துறை சமத்த... மேலும் பார்க்க