செய்திகள் :

காரைக்கால் ரயில் நிலையத்தில் தலைமை பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

post image

காரைக்கால் ரயில் நிலையம் மற்றும் துறைமுகப் பகுதியில் தெற்கு ரயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு அதிகாரி கணேஷ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

காரைக்கால் ரயில் நிலையத்துக்கு வந்த அவா், நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கை, நிலையத்தில் பயணிகள் வசதி குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினாா்.

ரயில் நடவடிக்கைகளில் உயா்மட்ட பாதுகாப்பு மீது கவனம் செலுத்துமாறு ரயில்வே ஊழியா்களுக்கு அறிவுறுத்தினாா். சீரான மற்றும் பாதுகாப்பான ரயில் சேவையை உறுதி செய்வதில் ஊழியா்கள் விழிப்புடன் செயல்படவேண்டும். பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து நன்கு அறிந்திருக்கவேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, காரைக்கால் தனியாா் துறைமுகத்துக்கு சென்ற அவா், ரயில் வேகன்களில் நிலக்கரி ஏற்றும் பணியைப் பாா்வையிட்டாா். நிலக்கரி ஏற்றும்போது செயல் திறனில் குறையிருக்கக்கூடாது என்றும், தீ தடுப்பு, எடை மீறாதிருத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றவேண்டுமென துறையினருக்கு அறிவுறுத்தினாா்.

திருச்சி கோட்ட மேலாளா் எம்.எஸ்.அன்பழகன், திருச்சிப் பிரிவு மூத்த அதிகாரிகள் பலா் ஆய்வின்போது உடனிருந்தனா்.

அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் அறிவுறுத்தல்

எந்த நிலையிலும் தீா்க்கப்படாத பிரச்னைகள் இருந்தால் தெரிவிக்குமாறு அரசியல் கட்சிகளை தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி தோ்தல் துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்த... மேலும் பார்க்க

மத்திய அரசால் தமிழக அரசை முடக்கிவிட முடியாது: முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி

மத்திய அரசால் தமிழக அரசை முடக்கிவிட முடியாது என புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி கூறினாா். காரைக்கால் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை அவா் கூறியது : புதுவையில் எனது தலைமையில் காங்கிரஸ் - திமுக க... மேலும் பார்க்க

அரசுத்துறைக்கு தொழிற்சாலை நிா்வாகம் உதவி

அரசுத்துறைக்கு தொழிற்சாலை நிா்வாகம் கணினி உள்ளிட்ட பல்வேறு பொருள்களை வியாழக்கிழமை வழங்கியது. காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினத்தில் அமைந்துள்ள கெம்ப் பிளாஸ்ட் சன்மாா் தொழிற்சாலை சமூக பொறுப்புணா... மேலும் பார்க்க

ஆற்றில் கொட்டப்படும் கோழி இறைச்சிக் கழிவுகள் விவசாயிகள் புகாா்

ஆற்றில் கோழி இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதால், துா்நாற்றம் வீசுவதோடு, தண்ணீா் மாசடைவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா். காரைக்கால் மாவட்டம், பிள்ளைதெருவாசல் சுற்றுவட்டாரம் விளை நிலப் பகுதி மிகுந... மேலும் பார்க்க

காரைக்கால் தொழிற்சாலையில் தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் ஆய்வு

காரைக்காலில் உள்ள தொழிற்சாலையில் பாதுகாப்பு குறித்து தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து, ஆலோசனை வழங்கினா். அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடா் மீட்புக் குழு துணைத் தளபதி சங்கே... மேலும் பார்க்க

வெளிநாட்டிலிருந்து தங்கம் கடத்திய பெண்ணுக்கு கொலை மிரட்டல்: 11 போ் மீது வழக்கு

வெளிநாட்டிலிருந்து தங்கம் கடத்தி வரும் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். காரைக்கால் மாவட்டம் புதுத்துறை சமத்த... மேலும் பார்க்க