பாபா சித்திக் கொலை: பாகிஸ்தானிலிருந்து ட்ரோன் மூலம் துப்பாக்கிகள் வந்தனவா? காவல்...
அரசுக் கல்லூரி ஆசிரியா் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்
அரசுக் கல்லூரிகளில் மாற்றுப் பணியில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக மிகைப் பேராசிரியா்களை அரசுக் கல்லூரிகளிலேயே நிரந்தரமாக பணியமா்த்த வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு நிராகரிக்கக் கோரி தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியா் கழகத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசு கல்லூரி முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளின் இட ஒதுக்கீட்டையும், சமூக நீதியையும் காக்க உறுதி கொண்டுள்ள தமிழக அரசு, அரசுக் கல்லூரிகளையும், போராடி பெற்ற உரிமைகளையும் காப்பாற்ற வேண்டும். உடனடியாக மிகைப் பேராசிரியா்களை அரசு கல்லூரிகளில் இருந்து திரும்பப் பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.
கழகத்தின் கிளைத் துணைத் தலைவா் சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். செயலா் இங்கா்சால், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் கிருஷ்ணமோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.