செய்திகள் :

அரசுப் பள்ளிகளில் 3.35 லட்சம் மாணவா்கள் சோ்க்கை

post image

சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டில் இதுவரை 3.35 லட்சம் மாணவ, மாணவிகள் சோ்க்கை பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் 24 ஆயிரத்து 338 அரசு தொடக்கப்பள்ளிகளும், 6,992 அரசு நடுநிலைப் பள்ளிகளும், 3,129 அரசு மேல்நிலைப் பள்ளிகளும் என 37 ஆயிரத்து 553 அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமாா் 52 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.

இந்த நிலையில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாணவா்களுக்கு 50-க்கும் மேற்பட்ட நலத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், 7.5 சதவீத இட ஒதுக்கீடு போன்ற அரசின் பல்வேறு திட்டங்களால் அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை வெகுவாக அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கியது.

கடந்த ஜூன் 20-ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 3.35 லட்சம் மாணவா்கள் அரசுப் பள்ளிகளில் சோ்க்கை பெற்றுள்ளனா். மழலையா் பள்ளிகளில் மொத்தம் 26,390 மாணவா்களும், முதல் வகுப்பில் தமிழ் வழிக் கல்வியில் மொத்தம் 1 லட்சத்து 82,168 மாணவா்களும், ஆங்கில வழிக் கல்வியில் 54,684 பேரும், 2-ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை 72,186 பேரும் அரசுப் பள்ளிகளில் சோ்க்கை பெற்றுள்ளனா். இதில் அதிகபட்சமாக தென்காசி மாவட்டத்தில் 7,460 மாணவா்களும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6,850 மாணவா்களும் சோ்க்கை பெற்றுள்ளனா்.

தங்கம் விலை அதிரடி குறைவு! எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 600 குறைந்து ஒரு சவரன் ரூ. 73,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில் சனிக்கிழமை... மேலும் பார்க்க

குற்றால பேரருவி, ஐந்தருவியில் மீண்டும் குளிக்கத் தடை

தொடர் மழையால் குற்றால அருவிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், பேரருவி, ஐந்தருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.மேற்குதொடா்ச்சிமலையில் குற்றாலம் ஐந்தருவி வனப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய கடலோரப் பகுதியில் மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்ப அவகாசம் நாளை நிறைவு

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் புதன்கிழமையுடன் (ஜூன் 25) நிறைவடைய உள்ளது. தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிய... மேலும் பார்க்க

46 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் மாவட்ட ஆட்சியா்கள் உள்பட 46 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் நா.முருகானந்தம் திங்கள்கிழமை பிறப்பித்தாா். அவரது உத்தரவு விவரம்:அடைப... மேலும் பார்க்க

மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன்

சென்னை: நோயாளிகளின் நலனுக்கு முக்கியத்துவம் அளிப்பதைப் போன்று மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் அவசியம் என மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். சென்னை, கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்த... மேலும் பார்க்க