செய்திகள் :

`அரசுப் பள்ளிக்கு என்ன குறைச்சல்?' - அரசுப் பள்ளியில் மகளைச் சேர்த்த மாவட்ட நீதிபதி!

post image

'தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்த்தால், அவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்கும். அவர்களின் எதிர்காலம் பிரகாசமாக மாறும்' என்று நம்மில் பலரும் தவறான கற்பிதத்தை மனதில் கொண்டு, கடனை வாங்கியாவது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கிறோம். பக்கத்திலேயே இருக்கும் அரசுப் பள்ளிகளை பரிசீலிக்கக்கூட மறந்து, ஒதுக்குகிறோம்.

government school

ஆனால், உண்மையில் பல அரசுப் பள்ளிகளில் தனியார் பள்ளிகளைத் தாண்டி மிகச்சிறப்பாக கல்வி போதிக்கப்படுகிறது. பல அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அர்ப்பணிப்போடு பாடம் நடத்தி, மாணவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்கிறார்கள். இதை உணர்ந்ததால் என்னவோ புதுக்கோட்டை மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட மாவட்ட நீதிபதி ஒருவர், தனது மகளை அரசுப் பள்ளியில் சேர்த்து, அசரடித்திருக்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டம், திருக்கட்டளையைச் சேர்ந்த முருகேசன் என்பவர்தான் அந்த அற்புத நீதிபதி. இவர், செங்கல்பட்டு மாவட்டம், ஆலந்தூரில் உள்ள முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இந்த ஊரில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 2025- 2026 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையில் முருகேசன் தனது மகள் புவனேஸ்வரியை எல்.கே.ஜி வகுப்பில் சேர்த்துள்ளார். அதன் பின்னர், அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களிடம் கலந்துரையாடிய நீதிபதி முருகேசன், "அரசுப் பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல. நம் பெருமையின் அடையாளம் என்பதை நிரூபிக்கும் விதமாக நம் பள்ளியில் இன்று சேர்க்கை நடைபெற்றுள்ளது. தாய் மொழியில் கற்கும் கல்வியால் மட்டுமே எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிப்பதற்கும், இக்கட்டான நேரங்களில் சரியான முடிவை தானே எடுப்பதற்கும் உறுதுணையாக இருக்கும். அதனால், என் மகளை அரசுப் பள்ளியில் சேர்த்துள்ளேன்.

government school

மற்றவர்களும், தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும்" என்று கூறினார். 'உங்களைப் பார்த்து உங்களை போன்று உயர் பதவிகளில் இருக்கும் பலரும் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க, உங்கள் செயல் ஊக்கமாக இருக்கும். உங்கள் பிள்ளையை எங்கள் பள்ளியில் சேர்த்தற்கு நன்றி' என்று ஆசிரியர்களும் நீதிபதியின் செயலுக்கு மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர். மாவட்ட உரிமையியல் நீதிபதி ஒருவர் தனது பிள்ளையை அரசுப் பள்ளியில் சேர்த்திருப்பது, பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

JEE: முதன்முறையாக ஐஐடியில் படிக்கத் தகுதிபெற்ற பழங்குடி மாணவி; இந்தியளவில் சாதனை படைத்த கதை!

சேலம் மாவட்டம், கல்வராயன் மலை, கருமந்துறை கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவரது தந்தை ஆண்டி.கடந்த 2023 ஆம் ஆண்டு புற்றுநோய் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். தாய் கவிதா கூலித்தொழில் செய்து வருகிறார... மேலும் பார்க்க

ஐஐடி தகுதித் தேர்வில் கல்வராயன் மலை பழங்குடி மாணவி சாதனை - முழு கல்விச் செலவையும் ஏற்கும் தமிழக அரசு

கல்வராயன் மலைப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மாணவி ராஜேஷ்வரி, ஐஐடி தகுதித் தேர்வான ஜேஇஇ அட்வான்ஸ்ட் 2025 (JEE Advance 2025) தேர்வில் தேர்ச்சி பெற்று தேசிய அளவில் 417-வது இடம்பிடித்து சாதனை படைத்திருக்... மேலும் பார்க்க

`அரசுப் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பினால், சொத்து வரி ரத்து' - மகாராஷ்டிரா கிராமத்தில் புது திட்டம்

கிராமங்களுக்கு வருவாய் கொடுப்பதில் சொத்து வரி முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த சொத்து வரியை வசூலிக்க பஞ்சாயத்து ஊழியர்கள் போராடுவதுண்டு. அதே போன்று கிராமங்களில் இருக்கும் அரசுப் பள்ளிக்கு குழந்தைகளை படி... மேலும் பார்க்க

கேரளா: "அங்கன்வாடியில் உப்புமாவுக்குப் பதில் முட்டை பிரியாணி" - சிறுவன் கோரிக்கையை ஏற்ற அரசு

கேரளாவைச் சேர்ந்த சங்கு என்ற சிறுவன் அங்கன்வாடிகளில் பிரியாணி வழங்க வேண்டும் எனப் பேசும் வீடியோ ஒன்று கடந்த ஆண்டு வைரலானது.கேரள பெண்கள், குழந்தைகள் வளர்ச்சித்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், அப்போது அதற்குப... மேலும் பார்க்க

ஊட்டி: ``அட்மிஷன் போட்டால் ரூ.5000 டெபாசிட்!'' - அரசுப் பள்ளியில் அடேங்கப்பா பிளான்!

கோடை விடுமுறை நிறைவடைந்திருக்கும் நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டு நடப்பு கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் நேற்றிலிருந்து தொடங்கியிருக்கிறது. பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கீள... மேலும் பார்க்க