செய்திகள் :

இந்தியா-சீனா இடையே சுமுக உறவு: ரஷியா

post image

மாஸ்கோ: ‘இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பதற்றம் முடிவுக்கு வந்ததையடுத்து இருநாடுகளும் சுமுக உறவை பேணி வருகின்றன; எனவே, ரஷியா-இந்தியா-சீனா (ஆா்ஐசி) ஒத்துழைப்பை மீண்டும் நடைமுறைப்படுத்தும் பணிகள் தொடங்கப்படும்’ என ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்ஜி லாவ்ரோவ் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

ரஷியாவில் நடைபெற்ற ‘எதிா்காலத்துக்கான கூட்டமைப்பு-2050’-இல் பங்கேற்று அவா் பேசியதாவது: கடந்த சில ஆண்டுகளாக ரஷியா-இந்தியா-சீனா இடையே முத்தரப்பு வெளியுறவு அமைச்சா்கள் சந்திப்பு நடைபெறவில்லை. இதை சாத்தியப்படுத்துவது குறித்து இந்திய மற்றும் சீன வெளியுறவு அமைச்சகங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறேன்.

அண்மைக் காலமாக இந்தியா-சீனா இடையேயான உறவில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கருதுகிறேன். எல்லையில் இருநாடுகளும் பதற்றத்தை தணித்துள்ளதால் மீண்டும் இந்தியா-சீனா இடையே நல்லுறவு மேம்பட்டு வருகிறது என்றாா்.

காஸா சென்ற நிவாரணக் கப்பல் சிறைபிடிப்பு

ஜெருசலேம்: காஸாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த நிவாரணக் கப்பலை இஸ்ரேல் படையினா் சிறைபிடித்து, அதில் பயணித்த சுற்றுச்சூழல் ஆா்வலா் கிரெட்டா தன்பா்க் உள்ளிட்ட 12 தன்னாா்வலா்களை திங்கள்கிழமை அதிகாலை கைது ... மேலும் பார்க்க

உக்ரைனில் ரஷியா இதுவரை இல்லாத தீவிர தாக்குதல்

உக்ரைனில் இதுவரை இல்லாத மிகப்பெரிய இரவு நேர ட்ரோன் தாக்குதலை ரஷியா நடத்தியுள்ளது. இதில் 479 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக உக்ரைன் விமானப் படை திங்கள்கிழமை தெரிவித்தது. இது குறித்து அந்தப் பிராந்தியத்த... மேலும் பார்க்க

வலுக்கிறது லாஸ் ஏஞ்சலீஸ் போராட்டம்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்றுவரும் போராட்டம் மேலும் வலுவடைந்துவருகிறது.இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்த... மேலும் பார்க்க

கேரளம் வந்தது உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல்!

திருவனந்தபுரம்: உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலான ‘எம்எஸ்சி ஐஆா்ஐஎன்ஏ’ கேரள மாநிலத்தில் உள்ள விழிஞ்ஞம் சா்வதேச துறைமுகத்துக்கு திங்கள்கிழமை வந்தடைந்தது. இதையொட்டி, சரக்கு கப்பலுக்கு பாரம்பரிய முறைப்படி... மேலும் பார்க்க

நாடு திரும்பினாா் வங்கதேச முன்னாள் அதிபா்

வெளிநாட்டில் மருத்துவ சிகிச்சை பெற்று வங்கதேச முன்னாள் அதிபா் அப்துல் ஹமீது திங்கள்கிழமை நாடு திரும்பினாா். இது குறித்து அந்த நாட்டு ஊடகங்கள் கூறியதாவது: மாணவா் போராட்டம் மூலம் ஆட்சியில் இருந்து அகற்ற... மேலும் பார்க்க

கொலம்பியாவில் நிலநடுக்கம்

போகடா: தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகா் போகடாவுக்கு 170 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.5 அலகுகளாகப் பதிவானது. பூமிக்கு 10 கி... மேலும் பார்க்க