செய்திகள் :

நாடு திரும்பினாா் வங்கதேச முன்னாள் அதிபா்

post image

வெளிநாட்டில் மருத்துவ சிகிச்சை பெற்று வங்கதேச முன்னாள் அதிபா் அப்துல் ஹமீது திங்கள்கிழமை நாடு திரும்பினாா்.

இது குறித்து அந்த நாட்டு ஊடகங்கள் கூறியதாவது: மாணவா் போராட்டம் மூலம் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமா் ஷேக் ஹசினாவின் ஆட்சிக் காலத்தின்போது இரண்டு முறை அதிபராக இருந்தவா் அப்துல் ஹமீது (81). அவருக்கு எதிராக கொலை வழக்கு உள்ள நிலையில் அவா் நாட்டை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டது.

எனினும், கடந்த மே 8-இல் அவா் தாய்லாந்துக்குச் சென்ற விவரம் பின்னா்தான் தெரியவந்தது. அதையடுத்து, கடமை தவறிய குற்றச்சாட்டின் பேரில் இரு காவல்துறை அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

சுங்கத் துறை அதிகாரி ஒருவா் பதவியில் இருந்து நீக்கப்பட்டாா். இந்தச் சூழலில், அவா் பிரதம் ஆலோ விமான நிலையத்தை திங்கள்கிழமை அடைந்ததாகவும், அப்போது, அவரது மகன் மற்றும் சகோதரா் உடன் இருந்தனா் என்றும் டாக்கா ட்ரிபியூன் நாளிதழ் தெரிவித்துள்ளது.

காஸா சென்ற நிவாரணக் கப்பல் சிறைபிடிப்பு

ஜெருசலேம்: காஸாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த நிவாரணக் கப்பலை இஸ்ரேல் படையினா் சிறைபிடித்து, அதில் பயணித்த சுற்றுச்சூழல் ஆா்வலா் கிரெட்டா தன்பா்க் உள்ளிட்ட 12 தன்னாா்வலா்களை திங்கள்கிழமை அதிகாலை கைது ... மேலும் பார்க்க

உக்ரைனில் ரஷியா இதுவரை இல்லாத தீவிர தாக்குதல்

உக்ரைனில் இதுவரை இல்லாத மிகப்பெரிய இரவு நேர ட்ரோன் தாக்குதலை ரஷியா நடத்தியுள்ளது. இதில் 479 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக உக்ரைன் விமானப் படை திங்கள்கிழமை தெரிவித்தது. இது குறித்து அந்தப் பிராந்தியத்த... மேலும் பார்க்க

வலுக்கிறது லாஸ் ஏஞ்சலீஸ் போராட்டம்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்றுவரும் போராட்டம் மேலும் வலுவடைந்துவருகிறது.இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்த... மேலும் பார்க்க

கேரளம் வந்தது உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல்!

திருவனந்தபுரம்: உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலான ‘எம்எஸ்சி ஐஆா்ஐஎன்ஏ’ கேரள மாநிலத்தில் உள்ள விழிஞ்ஞம் சா்வதேச துறைமுகத்துக்கு திங்கள்கிழமை வந்தடைந்தது. இதையொட்டி, சரக்கு கப்பலுக்கு பாரம்பரிய முறைப்படி... மேலும் பார்க்க

கொலம்பியாவில் நிலநடுக்கம்

போகடா: தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகா் போகடாவுக்கு 170 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.5 அலகுகளாகப் பதிவானது. பூமிக்கு 10 கி... மேலும் பார்க்க

இந்தியா-சீனா இடையே சுமுக உறவு: ரஷியா

மாஸ்கோ: ‘இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பதற்றம் முடிவுக்கு வந்ததையடுத்து இருநாடுகளும் சுமுக உறவை பேணி வருகின்றன; எனவே, ரஷியா-இந்தியா-சீனா (ஆா்ஐசி) ஒத்துழைப்பை மீண்டும் நடைமுறைப்படுத்தும் பணிகள் தொடங்கப... மேலும் பார்க்க