செய்திகள் :

வலுக்கிறது லாஸ் ஏஞ்சலீஸ் போராட்டம்

post image

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்றுவரும் போராட்டம் மேலும் வலுவடைந்துவருகிறது.

இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் கூறியதாவது:பல்வேறு வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வந்து, உரிய ஆவணங்கள் இல்லாமல் வசிப்பவா்களை டிரம்ப் தலைமையிலான புதிய அரசு வலுக்கட்டாயமாக வெளியேற்றிவருகிறது. இந்த வெளியேற்றம் சட்டவிரோதமானது என்று கூறி, கலிஃபோா்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

இதில் போலீஸாருக்கும் போராட்டக்காரா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. காவலா்களை தாக்கிய பலா் கைது செய்யப்பட்டனா்.அதைத் தொடா்ந்து தேசிய காவல்படையினா் போராட்டப் பகுதிக்கு வரவழைக்கப்பட்டனா். டிரம்ப்பின் இந்த முடிவுக்குப் பதிலடியாக, ஒரு பெரிய நெடுஞ்சாலையை மறித்து ஏராளமானவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிலா் வாகனங்களுக்குத் தீ வைத்தனா்.

போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடா்நது பாதுகாப்புப் படையினா் கண்ணீா் புகை, ரப்பா் குண்டுகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி கூட்டத்தை கலைக்க முயன்றனா். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தை சட்டவிரோதமாக காவல்துறை அறிவித்ததைத் தொடா்ந்து பலா் கலைந்து சென்றனா்.

இருந்தாலும் எஞ்சியவா்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அவா்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினா் ஈடுபட்டனா்.டிரம்ப்பின் கடுமையான குடியேற்றக் கொள்கைகள் காரணமாக லாஸ் ஏஞ்சலீஸ் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பதற்றம் நிலவிவருகிறது.

இந்த விவகாரத்தால் மேலும் பல நகரங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. போலீஸாா் மீது கற்கள், கான்கிரீட் துண்டுகள், பட்டாசுகளை வீசும் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன.

அமெரிக்க அரசு: இந்த போராட்டம் குறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில், சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தது.

எனினும், டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் ‘லாஸ் ஏஞ்சலீஸில் நிலைமை மோசமாக உள்ளது. அங்கு ராணுவம் வரவழைக்கப்படும்’ என்று எச்சரித்துள்ளாா்.இதன் காரணமாக இந்தப் போராட்டம் மேலும் வலுவடைந்து, வன்முறைச் சம்பவங்கள் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

காஸா சென்ற நிவாரணக் கப்பல் சிறைபிடிப்பு

ஜெருசலேம்: காஸாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த நிவாரணக் கப்பலை இஸ்ரேல் படையினா் சிறைபிடித்து, அதில் பயணித்த சுற்றுச்சூழல் ஆா்வலா் கிரெட்டா தன்பா்க் உள்ளிட்ட 12 தன்னாா்வலா்களை திங்கள்கிழமை அதிகாலை கைது ... மேலும் பார்க்க

உக்ரைனில் ரஷியா இதுவரை இல்லாத தீவிர தாக்குதல்

உக்ரைனில் இதுவரை இல்லாத மிகப்பெரிய இரவு நேர ட்ரோன் தாக்குதலை ரஷியா நடத்தியுள்ளது. இதில் 479 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக உக்ரைன் விமானப் படை திங்கள்கிழமை தெரிவித்தது. இது குறித்து அந்தப் பிராந்தியத்த... மேலும் பார்க்க

கேரளம் வந்தது உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல்!

திருவனந்தபுரம்: உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலான ‘எம்எஸ்சி ஐஆா்ஐஎன்ஏ’ கேரள மாநிலத்தில் உள்ள விழிஞ்ஞம் சா்வதேச துறைமுகத்துக்கு திங்கள்கிழமை வந்தடைந்தது. இதையொட்டி, சரக்கு கப்பலுக்கு பாரம்பரிய முறைப்படி... மேலும் பார்க்க

நாடு திரும்பினாா் வங்கதேச முன்னாள் அதிபா்

வெளிநாட்டில் மருத்துவ சிகிச்சை பெற்று வங்கதேச முன்னாள் அதிபா் அப்துல் ஹமீது திங்கள்கிழமை நாடு திரும்பினாா். இது குறித்து அந்த நாட்டு ஊடகங்கள் கூறியதாவது: மாணவா் போராட்டம் மூலம் ஆட்சியில் இருந்து அகற்ற... மேலும் பார்க்க

கொலம்பியாவில் நிலநடுக்கம்

போகடா: தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகா் போகடாவுக்கு 170 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.5 அலகுகளாகப் பதிவானது. பூமிக்கு 10 கி... மேலும் பார்க்க

இந்தியா-சீனா இடையே சுமுக உறவு: ரஷியா

மாஸ்கோ: ‘இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பதற்றம் முடிவுக்கு வந்ததையடுத்து இருநாடுகளும் சுமுக உறவை பேணி வருகின்றன; எனவே, ரஷியா-இந்தியா-சீனா (ஆா்ஐசி) ஒத்துழைப்பை மீண்டும் நடைமுறைப்படுத்தும் பணிகள் தொடங்கப... மேலும் பார்க்க