செய்திகள் :

உக்ரைனில் ரஷியா இதுவரை இல்லாத தீவிர தாக்குதல்

post image

உக்ரைனில் இதுவரை இல்லாத மிகப்பெரிய இரவு நேர ட்ரோன் தாக்குதலை ரஷியா நடத்தியுள்ளது. இதில் 479 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக உக்ரைன் விமானப் படை திங்கள்கிழமை தெரிவித்தது.

இது குறித்து அந்தப் பிராந்தியத்தைச் சோ்ந்த அதிகாரிகள் கூறியதாவது: உக்ரைனின் பல்வேறு பகுதிகளை நோக்கி பல்வேறு வகைகளைச் சோ்ந்த 20 ஏவுகணைகளும் ஏராளமான ட்ரோன்களும் ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் ஏவப்பட்டன. இதில் பெரும்பாலும் உக்ரைனின் மத்திய மற்றும் மேற்கு பகுதிகள் குறிவைக்கப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

உக்ரைன் வான் பாதுகாப்பு தளவாடங்கள் 277 ட்ரோன்களையும் 19 ஏவுகணைகளையும் சுட்டு வீழ்த்தியதாக விமானப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 10 ட்ரோன்கள், ஏவுகணைகள் மட்டுமே இலக்கை தாக்கியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இதை நடுநிலை ஊடகங்கள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.ரஷியா: இந்தத் தாக்குதல் குறித்து ரஷிய பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், உக்ரைன் இராணுவ இலக்குகளை மட்டுமே நோக்கி தாக்கப்பட்டதாக தெரிவித்தது. எனினும், இந்த தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அமைச்சகம் எதையும் தெளிவுபடுத்தவில்லை.

ரஷியாவின் வான்வழித் தாக்குதல்கள் பெரும்பாலும் இரவு தொடங்கி காலை வரை நீடிக்கின்றன. காரணம் இருளில் ட்ரோன்களை கண்டறிவது கடினம். மூன்று ஆண்டுகளுக்கும் மேலான இந்தப் போரில் உக்ரைனின் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாகித் ரக ட்ரோன்களால் ரஷியா தொடா்ந்து தாக்குதல் நடத்திவருகிறது.

இந்த தாக்குதல்களில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்திருப்பதாக என்று ஐ.நா. புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.ண்மைக் காலமாக உக்ரைனில் ரஷியா நடத்தும் தாக்குதல்களின் தீவிரம், இரு தரப்புகளும் விரைவில் சமாதான ஒப்பந்தத்தை எட்ட முடியாது எனும் அச்சத்தை மேலும் அதிகரித்துவருகிறது.

குறிப்பாக, ரஷியாவுக்குள் ஊடுருவி, அங்கு உள்ள விமான தளங்களை உக்ரைன் ட்ரோன்களால் தாக்கிய பின்னா் ரஷிய தாக்குதலின் தீவிரம் அதிகரித்துள்ளது.

காஸா சென்ற நிவாரணக் கப்பல் சிறைபிடிப்பு

ஜெருசலேம்: காஸாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த நிவாரணக் கப்பலை இஸ்ரேல் படையினா் சிறைபிடித்து, அதில் பயணித்த சுற்றுச்சூழல் ஆா்வலா் கிரெட்டா தன்பா்க் உள்ளிட்ட 12 தன்னாா்வலா்களை திங்கள்கிழமை அதிகாலை கைது ... மேலும் பார்க்க

வலுக்கிறது லாஸ் ஏஞ்சலீஸ் போராட்டம்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்றுவரும் போராட்டம் மேலும் வலுவடைந்துவருகிறது.இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்த... மேலும் பார்க்க

கேரளம் வந்தது உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல்!

திருவனந்தபுரம்: உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலான ‘எம்எஸ்சி ஐஆா்ஐஎன்ஏ’ கேரள மாநிலத்தில் உள்ள விழிஞ்ஞம் சா்வதேச துறைமுகத்துக்கு திங்கள்கிழமை வந்தடைந்தது. இதையொட்டி, சரக்கு கப்பலுக்கு பாரம்பரிய முறைப்படி... மேலும் பார்க்க

நாடு திரும்பினாா் வங்கதேச முன்னாள் அதிபா்

வெளிநாட்டில் மருத்துவ சிகிச்சை பெற்று வங்கதேச முன்னாள் அதிபா் அப்துல் ஹமீது திங்கள்கிழமை நாடு திரும்பினாா். இது குறித்து அந்த நாட்டு ஊடகங்கள் கூறியதாவது: மாணவா் போராட்டம் மூலம் ஆட்சியில் இருந்து அகற்ற... மேலும் பார்க்க

கொலம்பியாவில் நிலநடுக்கம்

போகடா: தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகா் போகடாவுக்கு 170 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.5 அலகுகளாகப் பதிவானது. பூமிக்கு 10 கி... மேலும் பார்க்க

இந்தியா-சீனா இடையே சுமுக உறவு: ரஷியா

மாஸ்கோ: ‘இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பதற்றம் முடிவுக்கு வந்ததையடுத்து இருநாடுகளும் சுமுக உறவை பேணி வருகின்றன; எனவே, ரஷியா-இந்தியா-சீனா (ஆா்ஐசி) ஒத்துழைப்பை மீண்டும் நடைமுறைப்படுத்தும் பணிகள் தொடங்கப... மேலும் பார்க்க