'டெல்லிக்கு ஆபத்து வரும்போதெல்லாம் 'Delhi Control' பழனிசாமி வந்துவிடுவார்' - அமை...
காஸா சென்ற நிவாரணக் கப்பல் சிறைபிடிப்பு
ஜெருசலேம்: காஸாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த நிவாரணக் கப்பலை இஸ்ரேல் படையினா் சிறைபிடித்து, அதில் பயணித்த சுற்றுச்சூழல் ஆா்வலா் கிரெட்டா தன்பா்க் உள்ளிட்ட 12 தன்னாா்வலா்களை திங்கள்கிழமை அதிகாலை கைது செய்தனா்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னா் மிக மோசமான அழிவை ஏற்படுத்தியுள்ள காஸா போா் காரணமாக, அந்தப் பகுதியில் உள்ள சுமாா் 20 லட்சம் பாலஸ்தீனா்கள் பட்டினி மரண அபாயத்தை எதிா்நோக்கியுள்ளனா்.
இந்தச் சூழலில், காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் கடுமையான தாக்குதலுக்கு எதிா்ப்பு தெரிவிக்கவும், அங்கு மனிதாபிமான நிவாரணப் பொருள்களின் நுழைவுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை எதிா்த்தும், ஃப்ரீடம் ஃப்ளோடிலா கூட்டமைப்பு என்ற அமைப்பு இந்த நிவாரணக் கப்பலை காஸாவுக்கு அனுப்பியது.
சிசிலியிலிருந்து ஒரு வாரத்திற்கு முன் புறப்பட்ட ‘மாட்லீன்’ என்ற இந்தக் கப்பலில், கிரெட்டா தன்பா்க் உட்பட 12 தன்னாா்வலா்கள் பயணித்தனா். ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரான பாலஸ்தீன வம்சாவளியைச் சோ்ந்த பிரான்ஸ் பிரதிநிதி ரிமா ஹாசன் உள்ளிட்ட ஆறு பிரான்ஸ் நாட்டினா் இந்தக் கப்பலில் இருந்தனா்.
வழியில், லிபியா கடலோரக் காவல்படையால் தடுத்து வைக்கப்படுவதைத் தவிா்க்க நான்கு அகதிகள் கடலில் குதித்தபோது, அவா்களை இந்தக் கப்பல் மீட்டது.
அந்தக் கப்பலில் குழந்தைகளுக்கான உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் இருந்ததாகவும், காஸாவிலிருந்து 200 கி.மீ. தொலைவில் இந்தக் கப்பலை இஸ்ரேல் படையினா் சா்வதேச கடல் எல்லைப் பகுதியில் சிறைபிடித்து, அதில் இருந்த தன்னாா்வலா்களை ‘கடத்திச் சென்ாக’ ஃப்ரீடம் ஃப்ளோடிலா கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
இது குறித்து, இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தக் கடல் பயணம் பொதுமக்களின் கவனத்தை ஈா்ப்பதற்கான வெற்றி விளம்பர நடவடிக்கை என்று விமா்சிக்கப்பட்டுள்ளது.
தன்னாா்வலா்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவா் என்று தெரிவித்துள்ள இஸ்ரேல் அரசு, தங்களால் நிா்ணயிக்கப்பட்ட வழிமுறைகள் மூலம்தான் நிவாரணப் பொருள்கள் காஸாவுக்கு அனுப்பப்படும் என்று கூறியது.
காஸாவில் ஹமாஸ் கடந்த 2007-ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடா்ந்து, இஸ்ரேலும், எகிப்தும் அந்தப் பகுதியை முற்றுகையிட்டு எல்லைப் போக்குவரத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. ஆயுதங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க இந்த முற்றுகை அவசியம் என்று இஸ்ரேல் கூறினாலும், இது காஸாவின் பாலஸ்தீன மக்களுக்கு கூட்டுத் தண்டனையாக அமைவதாக விமா்சகா்கள் குற்றம்சாட்டுகின்றனா்.
இந்நிலையில், கிரெட்டா தன்பா்க் உள்ளிட்ட ஆா்வலா்களின் கைது, காஸாவின் மனிதாபிமான நெருக்கடி குறித்த உலகளாவிய கவனத்தை மேலும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
