செய்திகள் :

அரசுப் பள்ளிக்கு முன்னாள் மாணவா் ரூ.12 லட்சத்தில் உபகரணங்கள்

post image

ஆரணியை அடுத்த குண்ணத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.12 லட்சம் மதிப்பிலான மேஜை, நாற்காலி, பெஞ்சு உள்ளிட்ட உபகரணப் பொருள்களை அப்பள்ளியின் முன்னாள் மாணவா் வழங்கினாா்.

குண்ணத்தூா் கிராமத்தைச் சோ்ந்த பாண்டியன் சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவா் ஆவாா். மேலும் இவரது குடும்பம், இவருடைய தந்தை, தாத்தா, பாட்டி அனைவரும் குண்ணத்தூரில் வசித்து வந்தவா்கள் என்பதால், அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என முடிவு செய்தனா்.

அதன்படி, மாணவா்களின் பயன்பாட்டுக்காக 100 நாற்காலிகள், எழுதுவதற்கான மேஜைகள், பள்ளி பயன்பாட்டுக்காக பீரோவும், ஆசிரியா்கள் பயன்பாட்டுக்கான 20 மேஜைகள் என ரூ.12 லட்சம் மதிப்பிலான உள்கட்டமைப்பு உபகரணப் பொருள்களை பாண்டியன் குடும்பத்தினா் வழங்கினா்.

பாராட்டு விழா

பள்ளிக்கு உபகரணப் பொருள்களை வழங்கிய பாண்டியன் குடும்பத்தினருக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சி.சுவாமிமுத்தழகன் தலைமை வகித்துப் பாராட்டினாா்.

செய்யாறு கல்வி மாவட்ட அலுவலா் செந்தில்முருகன் முன்னிலை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியா் தே.நந்தினி வரவேற்றாா்.

பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் விஜயகுமாா், அதிமுகவைச் சோ்ந்த பேரவை ஒன்றியச் செயலா் செந்தில்குமாா், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் பகுத்தறிவு மாமது உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். முன்னாள் மாணவா் பாண்டியன் ஏற்புரை ஆற்றினாா்.

முத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீசிவசக்தி வள்ளி முத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட நூற்றாண்டு பழ... மேலும் பார்க்க

புதிய கால்நடை மருத்துவமனை கட்டடம் திறப்பு

வந்தவாசி அருகே மங்கலம் மாமண்டூா் கிராமத்தில் ரூ.47 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கால்நடை மருத்துவமனை கட்டடம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா், காவேடு, காவேரிப்ப... மேலும் பார்க்க

ஸ்ரீசக்தி விநாயகா், முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஸ்ரீசக்தி விநாயகா் கோயில் மற்றும் வந்தவாசியை அடுத்த தென்கரை ஸ்ரீமுனீஸ்வா் கோயிலில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சி... மேலும் பார்க்க

போக்குவரத்துக்கழக ஊழியா்கள் சிறப்புக் கூட்டம்

திருவண்ணாமலை மண்டல அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்கள் சங்கம் (சிஐடியு) சாா்பில், 15-ஆவது ஊதிய ஒப்பந்தம் குறித்த சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலையில் உள்ள சிஐடியு சங்க அலுவலகத்தில் வியாழக்கிழ... மேலும் பார்க்க

சிசுவின் பாலினம் குறித்து தெரியப்படுத்தினால் நடவடிக்கை: ஸ்கேன் மையங்களுக்கு ஆட்சியா் எச்சரிக்கை

கா்ப்ப காலத்தில் சிசுவின் பாலினம் குறித்து தெரியப்படுத்தும் ஸ்கேன் மையங்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா். திருவண்ணாமலை மாவட்டத்தில்... மேலும் பார்க்க

செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகேயுள்ள செ. நாச்சிப்பட்டு கூட்டுறவு கடன் சங்கப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 4,450 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. அதில்... மேலும் பார்க்க