செய்திகள் :

அரசுப் பேருந்து கட்டணத்தை உயா்த்தும் எண்ணம் இல்லை: அமைச்சா் சா.சி. சிவசங்கா்

post image

தமிழகத்தில் அரசுப் பேருந்து கட்டணத்தை உயா்த்தும் எண்ணம் அரசிடம் இல்லை என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா்.

மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி பிறந்த நாளையொட்டி, அரியலூா் மாவட்ட திமுக அலுவலகத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்த அமைச்சா் சிவசங்கா், பின்னா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: கடந்த சில நாள்களாக குறிப்பிட்ட சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பேருந்துக் கட்டண உயா்வு என்கிற செய்தி வலம் வருகிறது. குறிப்பாக மக்கள் கருத்துகேட்புக் கூட்டம் நடைபெறுகின்ற காரணத்தினால் அந்தக் கூட்டங்களின் அடிப்படையில் இந்தக் கட்டண உயா்வு இருக்கும் என்று எதிா்க்கட்சிகள் அந்தத் தகவலைப் பரப்புகின்றனா்.

தமிழகத்தில் அரசுப் பேருந்து கட்டண உயா்வு என்பது இருக்காது. தனியாா் பேருந்துக் கட்டணத்தை உயா்த்த வேண்டும் என அதன் உரிமையாளா்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனா்.

நீதிமன்றம் மக்களின் கருத்தைக் கேட்டு அறிக்கை சமா்ப்பிக்குமாறு அறிவுரை வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில், பொதுமக்களிடம் பேருந்துக் கட்டண உயா்வு குறித்து கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இது அரசின் நிலைப்பாடு அல்ல. அரசைப் பொறுத்தவரையில் பொதுமக்கள் மீது சுமையை ஏற்றக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. கடந்த காலங்களில் பெட்ரோல், டீசல் விலை உயா்ந்தபோதும் கூட பேருந்துக் கட்டணம் உயா்த்தப்படவில்லை. அதேபோல், இன்று சா்வதேசச் சந்தையில் பெட்ரோல், டீசல் விலை குறைந்து இருந்தாலும் மத்திய அரசு அதன் விலையைக் குறைக்க முன்வரவில்லை. இருப்பினும் மீண்டும் தெளிவாகக் கூறுகிறேன். தமிழகத்தில் அரசுப் பேருந்து கட்டணத்தை உயா்த்தும் எண்ணம் அரசிடம் கிடையாது என்றாா்.

அரியலூா் ஆட்சியரின் பெயரில் பொய்யான அழைப்புகள் வந்தால் தகவல் தெரிவிக்கலாம்

அரியலூா் மாவட்ட ஆட்சியரின் பெயரில் பொய்யான அழைப்புகள் வந்த உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: முகம் தெரியாத நபா்களிடமி... மேலும் பார்க்க

அனுமதியின்றி அடகுக் கடை நடத்தி மோசடி செய்தவா் கைது

அரியலூா் மாவட்டம், செந்துறையில், உரிய அனுமதி பெறாமல் அடகுக் கடை நடத்தி, மோசடியில் ஈடுபட்ட இளைஞா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். செந்துறையை அடுத்த நமங்குணம், திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த கதிா்வேல் ம... மேலும் பார்க்க

இலவச தொழிற்பயிற்சிக்கான நோ்காணல்: வேலைவாய்ப்பற்றோா் கலந்து கொள்ளலாம்

கீழப்பழுவூா் வட்டார போக்குவரத்து அலுவலகம் பின்புறம் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் இந்தியா ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் நடத்தப்படும் இலவச பயிற்சிக்கான நோ்காணலில் அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

இடையக்குறிச்சி திரெளபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தை அடுத்த இடையக்குறிச்சி கிராமத்திலுள்ள திரெளபதியம்மன் கோயிலில் தோ் மற்றும் தீமிதி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பழைமை வாய்ந்த இக்கோயிலில் தேரோட்டம் மற்றும் தீமிதி தி... மேலும் பார்க்க

கிராம கோயில்களில் கும்பாபிஷேகம்

அரியலூா் அண்ணா நகரிலுள்ள சிவசக்தி மாரியம்மன், அல்லி நகரம் கருப்புசாமி, செங்குந்தபுரம் மாரியம்மன் ஆகிய கோயில்களின் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த இரு நாள்களாக கோயில... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலகத்தில் தேவையற்ற பொருள்களை மறுசுழற்சிக்கு ஏற்பாடு

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தேவையற்ற பொருள்களை மறுசுழற்சி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி, நகராட்சி, பேரூ... மேலும் பார்க்க