செய்திகள் :

அரசு ஆதரவாளர்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல்! 21 பேர் பலி!

post image

நைஜீரியாவில் சமூகக் கண்காணிப்பாளர்களைக் குறிவைத்து, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 21 பேர் பலியாகினர்.

நைஜீரியா நாட்டில் பயங்கரவாதிகள், கிளர்ச்சியாளர்களால் கட்ஸினா மாநிலம் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, பண்டிட்ஸ் எனும் பயங்கரவாதக் கும்பல் ஆள் கடத்தல், பள்ளிக் குழந்தைகளைக் கடத்தல், கொலை, கொள்ளை, பணம் பறிப்பு உள்ளிட்ட பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தக் கும்பலை ஒழிக்கும்வகையில் அந்நாட்டு ராணுவம் தொடர்ந்து தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. மேலும், பயங்கரவாதக் கும்பல்களை எதிர்த்து தாக்குதல் நடத்தும் சுமார் 2,000 பேர் கொண்ட கட்ஸினா சமூக கண்காணிப்புக் குழுவும் 2023 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடுவதில், இவர்கள் கும்பல்களை எதிர்த்துப் போராடுவதில் இராணுவத்திற்கும் காவல்துறையினருக்கும் உதவி வருகின்றனர்.

இதையும் படிக்க:‘கலகல’வென வந்தாரா? மத கஜ ராஜா - திரை விமர்சனம்!

இந்த நிலையில், கட்ஸினா சமூகக் கண்காணிப்புக் குழுவினரைக் குறிவைத்து, பயங்கரவாதிகள் சனிக்கிழமை தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் கண்காணிப்புக் குழுவினர்களில் 21 பேர் பலியாகினர்; மேலும், பலர் படுகாயமடைந்தனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் விரைவில் கைது செய்யப்படுவர் என்று காவல் அதிகாரி உறுதியளித்தார்.

உக்ரைனில் வட கொரிய வீரா்கள் கைது

தங்கள் நாட்டில் ரஷியாவுக்காகப் போரிட்ட இரு வட கொரிய வீரா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்பு உளவு அமைப்பான எஸ்பியு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவி... மேலும் பார்க்க

லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத் தீ: உயிரிழப்பு 24-ஆக உயா்வு

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் பரவிவரும் காட்டுகாட்டுத் தீ காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 24-ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: காட்டுத் ... மேலும் பார்க்க

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானில் திங்கள்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நாட்டின் மியாஸாகி பகுதியில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.9 அலகுகளாகப் பதிவானதாக ஜப்பான் நிலவியல் ஆய்வு மையம் ... மேலும் பார்க்க

காஸா பேச்சுவாா்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்!

காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக கத்தாரில் நடைபெறும் பேச்சுவாா்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பும் தெரிவித்துள்ளன. இந்தப் பேச்சுவாா்த்தையில், அமெரிக்கா... மேலும் பார்க்க

காஸாவில் விரைவில் போர்நிறுத்தம்! இறுதி வரைவு அறிக்கை சமர்ப்பிப்பு

காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் ஆயுதப் படைக்கும் இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்து வருகின்றன. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை(ஜன. 12) இ... மேலும் பார்க்க

ஜப்பானில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தெற்கு ஜப்பானில் உள்ளூர் நேரப்படி இரவு 9.19 மணிக்கு கியூஷுவில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பான் வானிலை ஆய்வு ம... மேலும் பார்க்க