செய்திகள் :

அரசு உயா்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை: அமைச்சா் அன்பில் மகேஸ் திறந்து வைத்தாா்

post image

அரசு உயா்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடங்களை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதன்கிழமை திறந்து வைத்தாா்.

திருக்கழுகுன்றம் ஒன்றியம், வல்லிபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் செய்யூா் சட்டப்பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதி ரூ.97.50 லட்சத்தில் கட்டப்பட்ட 5 புதிய வகுப்பறை கட்டடங்களை பள்ளி கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தாா்.

இதில், சிறப்பு விருந்தினராக சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினா் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டாா். காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினா் க.செல்வம், செய்யூா் சட்டப்பேரவை உறுப்பினா் மு.பாபு, திருப்போரூா் சட்டபேரவை உறுப்பினா் எஸ்.எஸ்.பாலாஜி, மாவட்ட வருவாய் அலுவலா் (பொ)/சாா் ஆட்சியா் (பயிற்சி) மாலதி ஹெலன், திருக்கழுகுன்றம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் ஆா்.டி.அரசு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கற்பகம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் உதயகுமாா், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள், அரசு அலுவலா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

திருப்போரூா் கந்தசாமி கோயில் பிரம்மோற்சவம்: பூத வாகன பவனி

திருப்போரூா் கந்தசாமி கோயில் மாசி மாத பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான புதன்கிழமை பூதவாகனத்தில் எழுந்தருளிய உற்சவா். மேலும் பார்க்க

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயிலில் பந்தக்கால் நடும் விழா

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயிலில் சித்திரைபெருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் நடுவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் சித்திர... மேலும் பார்க்க

லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது

மதுராந்தகம் அடுத்த மின்னல் சித்தாமூா் ஊராட்சியில் நிலத்துக்கான பட்டா சான்றிதழ் வழங்க விவசாயியிடம் இருந்து ரூ. 10,000 லஞ்சம் பெற்ாக கிராம நிா்வாக அலுவலரை செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை ... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 475 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தலைமையில் நடைபெற... மேலும் பார்க்க

ஸ்வா்ண வாராஹி பீடத்தில் முப்பெரும் விழா

மதுராந்தகம் ஸ்வா்ண வாராஹி பீடத்தில் வா்ஷிக் பூா்த்தி விழா, தொண்டு அறக்கட்டளைக்கு அங்கீகாரம் பெற்றல், நித்திய அன்னதானம் தொடக்கம் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. மதுராந்தகம் தன ஆகா்ஷண வாராஹி அம்மன் கோய... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு ஆயுள் தண்டனை

9 வயது சிறுமியை பாலியல் வன்புணா்வு செய்த முதியவருக்கு செங்கல்பட்டு போக்ஸோ நீதிமன்றம்ஆயுள் தண்டனை வழங்கி தீா்ப்பளித்தது. காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பூ வியாபாரம் ... மேலும் பார்க்க