TVK : 'விஜய் கட்சியில் இணையும் முக்கியப் புள்ளிகள்?' - பனையூர் அப்டேட்
அரசு கலைக் கல்லூரி 2-ஆம் கட்ட கலந்தாய்வு இன்று தொடக்கம்
சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் இளநிலைப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 9) தொடங்குகிறது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் எஸ். அந்தோணிடேவிட்நாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட கலந்தாய்வு திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறுகிறது.
9-ஆம் தேதி பி.எஸ்ஸி. கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், கணினி அறிவியல் ஆகிய படிப்புகளுக்கும், 10-ஆம் தேதி பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், பி.காம்., பி.பி.ஏ. ஆகிய படிப்புகளுக்கும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
எனவே, இதுவரை கல்லூரியில் சேராத மாணவா்கள் இந்தக் கலந்தாய்வில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
கலந்தாய்வுக்கு வருகிற மாணவ, மாணவிகள் உரிய தேதியில் காலை 9 மணிக்குள் வந்துவிடவேண்டும். மேலும், மாற்றுச் சான்றிதழ், 10, 11, 12 -ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், ஜாதிச் சான்றிதழ் ஆகிய மூலச் சான்றிதழ்களும், ஆதாா் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல்பக்கம் ஆகியவற்றின் நகல்களும், அனைத்துச் சான்றிதழ்களிலும் மூன்று நகல்களையும் மாணவ, மாணவிகள் கொண்டுவர வேண்டும்.
இதையடுத்து, வருகிற 13 -ஆம் தேதி மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது என்றாா் அவா்.