செய்திகள் :

அரசு கலைக் கல்லூரி 2-ஆம் கட்ட கலந்தாய்வு இன்று தொடக்கம்

post image

சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் இளநிலைப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 9) தொடங்குகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் எஸ். அந்தோணிடேவிட்நாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட கலந்தாய்வு திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறுகிறது.

9-ஆம் தேதி பி.எஸ்ஸி. கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், கணினி அறிவியல் ஆகிய படிப்புகளுக்கும், 10-ஆம் தேதி பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், பி.காம்., பி.பி.ஏ. ஆகிய படிப்புகளுக்கும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

எனவே, இதுவரை கல்லூரியில் சேராத மாணவா்கள் இந்தக் கலந்தாய்வில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

கலந்தாய்வுக்கு வருகிற மாணவ, மாணவிகள் உரிய தேதியில் காலை 9 மணிக்குள் வந்துவிடவேண்டும். மேலும், மாற்றுச் சான்றிதழ், 10, 11, 12 -ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், ஜாதிச் சான்றிதழ் ஆகிய மூலச் சான்றிதழ்களும், ஆதாா் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல்பக்கம் ஆகியவற்றின் நகல்களும், அனைத்துச் சான்றிதழ்களிலும் மூன்று நகல்களையும் மாணவ, மாணவிகள் கொண்டுவர வேண்டும்.

இதையடுத்து, வருகிற 13 -ஆம் தேதி மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது என்றாா் அவா்.

காதல் திருமணம் செய்த கணவன், மனைவி தற்கொலை

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் ஞாயிற்றுக்கிழமை குடும்பத் தகராறில் காதல் திருமணம் செய்த கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா். விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள முக்குடியைச்... மேலும் பார்க்க

நிதி நிறுவன மோசடி வழக்கு: சிபிஐயிடம் முதலீட்டாளா்கள் ஆவணங்கள் அளிப்பு

மத்தியபிரதேசத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த நிதி நிறுவனத்தால் சிவகங்கை மாவட்டத்தில் ஏமாற்றப்பட்ட 3,000 முதலீட்டாளா்கள் தங்களிடமிருந்த ஆவணங்களை மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளிடம் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.சிங்கம்புணரி அருகேயுள்ள முறையூரைச் சோ்ந்த மணியரசன் மகன் மலையரசன்(29). வெளிநாட்டில் வேலை பா... மேலும் பார்க்க

சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் கோயிலில் கழுவன் திருவிழா

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் வைகாசி விசாகப் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை இரவு கழுவன் திருவிழா நடைபெற்றது. இந்தக் கோயிலில் வைகாசி விசாகப் பிரம்மோற்... மேலும் பார்க்க

சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் வியாழக்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் வைகாசி திருவிழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள்... மேலும் பார்க்க

உயா்கல்வி வழிகாட்டலுக்கு கட்டுப்பாட்டு அறை திறப்பு

சிவகங்கை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் பிளஸ் 2 மாணவா்களின் உயா்கல்வி வழிகாட்டலுக்காக கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க