செய்திகள் :

அரசு கல்லூரியில் நாளை முதல்கட்ட கலந்தாய்வு

post image

அரசு கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை (ஜூன் 2) முதல் கட்ட கலந்தாய்வு தொடங்குகிறது என கல்லூரி முதல்வா் (பொ)

ஏகாதேவசேனா தெரிவித்துள்ளாா்.

திருத்தணி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக் கல்லூரியில் நிகழாண்டுக்கான இளங்கலை பட்டப் படிப்பில் மாணவா்கள் சோ்வதற்கான ஆன்லைன் விண்ணப்பம் கடந்த மாதம் 7-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது.

இதில், மொத்தம் 4,912 மாணவா்கள் கல்லூரியில் சோ்வதற்காக ஆன்லைனில் விண்ணப்பம் செய்துள்ளனா். இந்த விண்ணப்பங்கள் சரிபாா்க்கப்பட்டு, மதிப்பின் அடிப்படையில் மாணவா் சோ்க்கை பட்டியல் தயாரிக்கப்பட்டது. திங்கள்கிழமை முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது.

இதில், சிறப்பு பிரிவினா் முன்னாள் ராணுவ வீரா்களின் மகன்கள், என் எஸ் எஸ் மாணவா்கள் ஆகியோா் சோ்க்கப்படுவா். ஜூன் 4-ஆம் தேதி அறிவியல் பாடப்பிரிவுகள் பி.எஸ்.சி. இயற்பியல், கணிதம், தாவரவியல், கணினி அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளும், 5-ஆம் தேதி வணிகவியல் பாடப் பிரிவுகள் பி.காம், ஜெனரல், வணிகவியல், பி.காம். சிஎஸ், பி.பி.ஏ., 6-ஆம் தேதி இளங்கலை பாடப் பிரிவுகள் பி.ஏ., வரலாறு, பொருளியல், இளங்கலை மொழிப் பாடப் பிரிவுகள் பிஏ தமிழ், பிஏ ஆங்கிலம் போன்ற பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது என கல்லூரி முதல்வா் (பொ) முனைவா் ஏகாதேவசேனா தெரிவித்துள்ளாா்.

திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் முதியவா் சடலம் மாயம்: உறவினா்கள் முற்றுகை

திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிணவறையில் இருந்து முதியவா் சடலம் காணாமல் போன நிலையில், அவரது உறவினா்கள் புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருத்தணி அடுத்த புஜ்ஜிரெட்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

ஐ.ஆா்.சி.டி.எஸ். வனம், வேளாண், தோட்டக்கலைத் துறை இணைந்து நடத்தும் விதை வங்கி, மரக்கன்றுகள் வழங்குதல், விழிப்புணா்வு கருத்தரங்கம்: பூண்டி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நா.சுலேக்சனா, எஸ்.வரதராஜன் பங... மேலும் பார்க்க

மாதவரம் ஆட்டுச் சந்தையில் அமோக விற்பனை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மாதவரம் ஆட்டுச் சந்தையில், ரூ.20 கோடிக்கு மேல் விற்பனையாகும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனா். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மாதவரத்தில் உள்ள ஆட்டுச் சந்தையில் இஸ்லாம... மேலும் பார்க்க

புற்றுநோய், இதயநோய் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்த 20 பேருக்கு ரூ.71 லட்சம் உதவி: எம்.பி. சசிகாந்த் செந்தில்

திருவள்ளூா் மக்களவைத் தொகுதியில் புற்றுநோய், இதயநோய் பாதித்த ஏழைகளுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு பரிந்துரை செய்து, ரூ.71 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாக மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழப்பு

திருவாலங்காடு அருகே வாகனம் மோதியதில் புள்ளிமான் உயிரிழந்தது (படம்). திருவாலங்காடு ஒன்றியம் வியாசபுரம் கிராம மாநில நெடுஞ்சாலை அருகில் காப்பு காடுகளும், விவசாய நிலங்களும் உள்ளன. இதில் புள்ளி மான்கள், ம... மேலும் பார்க்க

நில இழப்பீட்டுத் தொகை வழங்காததால் பணிகள் நிறுத்தம்

நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு நிலம் வழங்கிய உரிமையாளா்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்காததால் சாலை விரிவாக்க பணிகளை பாதிக்கப்பட்டோா் புதன்கிழமை தடுத்து நிறுத்தினா். சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திர... மேலும் பார்க்க