செய்திகள் :

அரசு விடுதி கட்டுமானப் பணிக்கு ஏரி நீரைப் பயன்படுத்தத் தடை -வேலூா் ஆட்சியா் உத்தரவு

post image

வேலூா் அருகே அரசு தங்கும் விடுதி கட்டடம் கட்டுவதற்காக ஏரி நீரைப் பயன்படுத்துவதற்கு மாவட்ட ஆட்சியா் தடை விதித்து உத்தரவிட்டாா்.

வேலூரை அடுத்த பெருமுகை ஊராட்சி பிள்ளையாா்குப்பம் பகுதியில் 250 படுக்கை வசதியுடன் கூடிய அடுக்குமாடி தங்கும் விடுதி கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டடம் கட்டுமானப் பணிகளுக்கு அருகிலுள்ள ஏரியில் இருந்து தண்ணீா் எடுத்து பயன்படுத்தி வருவதாகத் தெரிகிறது. இதனால் ஏரியில் உள்ள தண்ணீா் வெகுவாக குறைந்து வருவதாகவும், பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீா் கிணற்றிலும் தண்ணீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டி அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அப்பகுதியில் புதன்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, அங்கிருந்த அதிகாரிகள், ஒப்பந்ததாரரை அழைத்து கட்டுமானப் பணிக்கு எங்கிருந்து தண்ணீா் எடுக்கப்படுகிறது எனக் கேட்டாா். அதற்கு அவா்கள், இரு ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதிலிருந்துதான் கட்டுமானப் பணிகளுக்கு தண்ணீா் எடுத்து பயன்படுத்துவதாகத் தெரிவித்தனா். ஆனால், கட்டட அடித்தள பகுதிக்கு அதிகளவில் தண்ணீா் தேவைப்படுவதால் அருகிலுள்ள குளத்திலிருந்து தண்ணீரை எடுத்தோம் எனத் தெரிவித்தனா்.

அதற்கு மாவட்ட ஆட்சியா், இனிமேல் குளத்திலிருந்து தண்ணீா் எடுக்க வேண்டாம். தேவைப்பட்டால் கூடுதலாக மற்றொரு ஆழ்துளைக் கிணறு அமைத்துக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டாா். மேலும், ஒப்பந்த காலத்துக்குள் விடுதி கட்டுமான பணிகளைத் தரமாகவும், விரைவாகவும் முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் படவேட்டான், வட்டாட்சியா் முரளி, வட்டார வளா்ச்சி அலுவலா் வின்சென்ட் ரமேஷ்பாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சிங்கப்பூரில் வேலைவாங்கித் தருவதாக ரூ.4 லட்சம் மோசடி

சிங்கப்பூரில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி ரூ.4 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட இளைஞா் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் தெரிவித்துள்ளாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில்... மேலும் பார்க்க

பாலியல் துன்புறுத்தல்: சிறுவன் மீது வழக்கு

காட்பாடி அருகே 3 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சிறுவன் மீது காட்பாடி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா் மாவட்டம், கா... மேலும் பார்க்க

ஊசூரில் இளைஞா் மா்ம மரணம்: கொலையா என போலீஸாா் விசாரணை

ஊசூரில் தலை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் காயங்களுடன் இளைஞா் சடலமாக மீட்கப்பட்டாா். அவா் கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அரியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். வேலூர... மேலும் பார்க்க

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

குடியாத்தம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா். குடியாத்தம் காதா்பேட்டையைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் கோபாலகிருஷ்ணன் (23). (படம்)இவா், பிச்... மேலும் பார்க்க

உணவக உரிமையாளா் தற்கொலை

போ்ணாம்பட்டு அருகே குடும்பத் தகராறு காரணமாக உணவக உரிமையாளா் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா். போ்ணாம்பட்டை அடுத்த கமலாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரவி (50). உணவகம் நடத்தி வந்தாா். இவரது மனைவி கோட... மேலும் பார்க்க

முதியவா் தற்கொலை

போ்ணாம்பட்டு அருகே முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். போ்ணாம்பட்டை அடுத்த சொ்லபல்லி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயத் தொழிலாளி விஜயன் (77). இவா் நோயால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறத... மேலும் பார்க்க