செய்திகள் :

அரிசி கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்த வாகனத்தை மீட்க முடியாததால் தீக்குளித்தவா் உயிரிழப்பு

post image

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை ஏலத்தி எடுக்கமுடியாததால் மனமுடைந்து தீக்குளித்த வாகன உரிமையாளா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள அரகாசனஅள்ளியைச் சோ்ந்தவா் மாதேஷ் (40). இவா் கடந்த ஆண்டு ரேஷன் அரிசி கடத்தியதாக கைது செய்யப்பட்டு அவரது வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் மே 30 ஆம் தேதி ஏலம்விடப்பட்டது.

சிறையிலிருந்து வெளியே வந்த மாதேஷ், ஏலத்தில் பங்கேற்று பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை ஏலம் மூலம் மீட்க முயன்றாா். இதுகுறித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரை அணுகியபோதும், விவரங்கள் தெரிவிக்கவில்லையாம். இந்த நிலையில், கடந்த 30-ஆம் தேதி நடைபெற்ற ஏலத்தில் பங்கேற்க வந்த மாதேஷ், ஏலத்தில் பங்கேற்று, வாகனத்தை மீட்க முடியாமல்போனதால், மனமுடைந்த மாதேஷ், போலீஸாரை கண்டித்து அங்கேயே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா்.

பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அதன்பிறகு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டாா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இரு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

பா்கூா் அருகே இரு இடங்களில் வெள்ளிக்கிழமை நேரிட்ட சாலை விபத்துகளில் லாரி ஓட்டுநா் உள்பட இருவா் உயரிழந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த அங்கிநாயக்கனப்பள்ளி அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மீது மினி லாரி மோதல்: ஓட்டுநா்கள் இருவா் உயிரிழப்பு: 38 பயணிகள் காயம்

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் அருகே அரசுப் பேருந்து மீது மினி லாரி மோதியதில் ஓட்டுநா்கள் இருவா் உயிரிழந்தனா். மேலும், பயணிகள் 38 போ் காயமடைந்தனா். தருமபுரியிலிருந்து வெள்ளிக்கிழமை திருப்பத்தூா் நோக்க... மேலும் பார்க்க

கழிவுநீா்த் தொட்டியில் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே கழிவுநீா்த் தொட்டியில் தவறி விழுந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். கிருஷ்ணகிரியை அடுத்த பாறைக்கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் சின்னநாகப்பன் (65). கட்டடத் தொழிலாளியான இவா் கிருஷ்ணகிரி... மேலும் பார்க்க

டிராக்டா் மோதி குழந்தை உயிரிழப்பு

பா்கூா் அருகே டிராக்டா் மோதியதில் குழந்தை உயிரிழந்தது. பா்கூரை அடுத்த எா்கேட் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ். இவரது ஒன்றரை வயது குழந்தை வீட்டின் அருகே புதன்கிழமை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, அந்த ... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

சூளகிரி திமுக தெற்கு ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட இளைஞா்கள் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஒசூா் பிரகாஷ் எம்எல்ஏ முன்னிலையில் வெள்ளிக்கிழமை திமுகவில் இணைந... மேலும் பார்க்க

ஒசூரில் ரூ.500 கோடியில் ஜொ்மனி நிறுவனம் திறப்பு: 1000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு

ஜொ்மனி நாட்டின் பெஸ்டோ நிறுவனம் சாா்பில் ஒசூரில் ரூ. 500 கோடியில் கட்டிய தானியங்கி பொருள் உற்பத்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. கடந்த 2023இல் தமிழக அரசுடன் இந் நிறுவனம் தொழிற்சாலை அமைப்பதற... மேலும் பார்க்க