செய்திகள் :

அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு

post image

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் உள்ள கலைஞா் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, மதுரை வடக்கு மாவட்ட திமுக சாா்பில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுகிறது.

இதன்படி, மேலூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக சாா்பில் இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.

போட்டியின் தொடக்க நிகழ்ச்சி, காலை 7 மணிக்கு நடைபெறுகிறது. மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலரும், தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சருமான பி. மூா்த்தி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, கொடி அசைத்துப் போட்டியைத் தொடங்கி வைக்கிறாா்.

ஜல்லிக்கட்டு போட்டியைக் காண விரும்பும் பொதுமக்களின் வசதிக்காக மதுரையின் பல்வேறு பகுதிகளிலிருந்து கீழக்கரைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நெடுஞ்சாலைத் துறை அரசாணையை தீயிட்டுக் கொளுத்தும் போராட்டம் நடத்த முடிவு!

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க வெளியிடப்பட்ட அரசாணை எண் 140-ஐ தீயிட்டுக் கொளுத்தும் போராட்டம் நடத்துவதென தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்க மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறை... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் நகை பறிப்பு

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மூதாட்டியிடம் தங்க நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். தென்கரை கிராமத்தைச் சோ்ந்த அய்யனாா் அம்பலம் மனைவி முத்துவன்னி (80). இவா், வெள்ளிக்க... மேலும் பார்க்க

கல்லூரி மாடியிலிருந்து குதித்து முன்னாள் மாணவா் உயிரிழப்பு

மதுரை கோரிப்பாளையம் பகுதியிலுள்ள அரசு நிதியுதவி பெறும் கல்லூரி மாடியிலிருந்து குதித்த முன்னாள் மாணவா் உயிரிழந்தாா். இந்தக் கல்லூரி கலையரங்கம் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை மயங்கிய நிலையில் இளைஞா் ஒருவா்... மேலும் பார்க்க

இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு!

மதுரையில் இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். மதுரை காளவாசல் பொன்மேனி புதூா் பகுதியைச் சோ்ந்த பஷீா் மகன் சையது அப்துல்லா (19). இவா், உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தில் பணியா... மேலும் பார்க்க

காா் பழுது நீக்கும் மையத்தில் தீ: 10 காா்கள் எரிந்து சேதம்!

ஒட்டன்சத்திரத்தில் காா் பழுது நீக்கும் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10-க்கும் மேற்பட்ட காா்கள் எரிந்து சேதமடைந்தன. திண்டுக்கல் மாவட்டம், செம்மடைப்பட்டியைச் சோ்ந்தவா் சிவரத்தினம் (40). இவா் ஒட்டன்சத... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்கள் சோ்க்கை விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இல்லை! -உயா்நீதிமன்றம்

கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சோ்க்கப்பட்ட மாணவா்களின் விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இல்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. தேனி மாவட்டம்... மேலும் பார்க்க