செய்திகள் :

மதுரை மத்திய சிறையில் 3 மணிநேரமாக போலீஸாா் அதிரடி சோதனை

post image

மதுரை: மதுரை மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் அதிரடியாக 3 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனா்.

மதுரை மத்திய சிறையில் 2500-க்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்கள் கைப்பேசி, போதைப் பொருள்கள் வைத்துள்ளனரா? என அவ்வப்போது திடீா் சோதனை நடத்தப்படுவது வழக்கம்.

இதன்படி, மதுரை மத்திய சிறையில் மாநகரக் காவல் துறை, சிறைத் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையில் காவல் துணை ஆணையா் தலைமையில் 3 உதவி ஆணையா்கள், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், 100 காவலா்கள், சிறைக் காவலா்கள் கொண்ட காவல்துறை குழுவினர் ஈடுபட்டனா். அதிகாலை 5.30 மணி முதல் காலை 8.30 மணி வரை தொடா்ந்து 3 மணி நேரம் இந்தச் சோதனை நடைபெற்றது.

2-வது மொழியே கற்பிக்காத நிலையில் 3-வது மொழி வேறு: ப. சிதம்பரம் விமர்சனம்

கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகள், கழிப்பறைகள், சமையறை, தோட்டம், சிறை அலுவலா்கள் அறைகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் சோதனை நடைபெற்றது. சிறை வளாகத்தில் உள்ள பெண்கள் சிறையிலும் மகளிா் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.

இந்தச் சோதனையை சிறைத் துறை மதுரை சரக துணைத் தலைவா் முருகேசன், மத்திய சிறைக் கண்காணிப்பாளா் சதீஷ்குமாா், காவல் துணை ஆணையர் இனிக்கோ திவ்யன் ஆகியோா் பாா்வையிட்டனா்.

சிறை வளாகம் முழுவதும் 3 மணி நேரமாக நடைபெற்ற சோதனையில் தடை செய்யப்பட்ட பொருள்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடத்தல் லாரி உரிமையாளர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கும் திமுக அரசு?: அண்ணாமலை

கேரள எல்லை மாவட்டங்களில் ஓடும் கடத்தல் லாரிகளின் உரிமையாளர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கும் திமுக அரசு? என தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவா் தனது ‘எக்ஸ்’ வலை... மேலும் பார்க்க

எழுத்தாளர் நாறும்பூநாதன் மறைவு: துணை முதல்வர் உதயநிதி இரங்கல்

எழுத்தாளர் நாறும்பூநாதன்(64) மறைவுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன்(64) ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) உயிரிழந... மேலும் பார்க்க

2-வது மொழியே கற்பிக்காத நிலையில் 3-வது மொழி வேறு: ப. சிதம்பரம் விமர்சனம்

பல மாநிலங்களில் இரண்டாவது மொழியான ஆங்கிலத்தையே கற்பிக்க முயலாத நிலையில், இதில் மூன்றாவது மொழி வேறு என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை அம... மேலும் பார்க்க

எழுத்தாளர் நாறும்பூநாதன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

எழுத்தாளர் நாறும்பூநாதன்(64) மறைவுக்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன்(64) ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1... மேலும் பார்க்க

தங்கத்தேர்கள் எப்போது பயன்பாட்டிற்கு வரும்?: அமைச்சர் சேகர்பாபு

இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ரூ.31 கோடியில் மதிப்பீட்டில் செய்யப்பட்டு வரும் 4 தங்கத் தேர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் பக்தர்களின் நேர்த்திக்கடனுக்காக பயன்பாட்டிற்கு வரும் என்று இந்து சமய அறநிலையத்த... மேலும் பார்க்க

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி: மாடு முட்டி இளைஞர் பலி

மதுரை: மதுரை கீழக்கரையில் உள்ள கலைஞா் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடு முட்டி இளைஞர் ஒருவர் பலியானார். தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நா... மேலும் பார்க்க