செய்திகள் :

எழுத்தாளர் நாறும்பூநாதன் மறைவு: துணை முதல்வர் உதயநிதி இரங்கல்

post image

எழுத்தாளர் நாறும்பூநாதன்(64) மறைவுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன்(64) ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) உயிரிழந்தாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அன்னாரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இவரின் மறைவுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

தமிழ் இலக்கிய உலகில் தனக்கென்று தனி இடத்தினை கொண்டிருந்த எழுத்தாளர் திரு.நாறும்பூநாதன் அவர்கள் உடல்நலக்குறைவால் மரணமடைந்த செய்தியறிந்து வருத்தமுற்றோம்.

எழுத்தாளர் நாறும்பூநாதன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

தமிழ்நாடு அரசின் உ.வே.சா விருது பெற்றவர். யானை சொப்பனம், திருநெல்வேலி நீர் - நிலம் - மனிதர்கள் உள்ளிட்ட படைப்புகளை தந்தவர். பொருநை இலக்கியத் திருவிழா - நெல்லை புத்தகத்திருவிழா உள்ளிட்டவற்றிற்காக முக்கிய பங்காற்றியவர்.

எழுத்தாளராக மட்டுமன்றி சமூக செயற்பாட்டாளராகவும் பல்வேறு பங்களிப்பினை செய்த திரு.நாறும்பூநாதன் அவர்களின் மரணம் தமிழ் இலக்கிய உலகுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தார் - உறவினர்கள் - நண்பர்கள் - வாசகர்களுக்கு என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

கடத்தல் லாரி உரிமையாளர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கும் திமுக அரசு?: அண்ணாமலை

கேரள எல்லை மாவட்டங்களில் ஓடும் கடத்தல் லாரிகளின் உரிமையாளர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கும் திமுக அரசு? என தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவா் தனது ‘எக்ஸ்’ வலை... மேலும் பார்க்க

மதுரை மத்திய சிறையில் 3 மணிநேரமாக போலீஸாா் அதிரடி சோதனை

மதுரை: மதுரை மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் அதிரடியாக 3 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனா்.மதுரை மத்திய சிறையில் 2500-க்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள... மேலும் பார்க்க

2-வது மொழியே கற்பிக்காத நிலையில் 3-வது மொழி வேறு: ப. சிதம்பரம் விமர்சனம்

பல மாநிலங்களில் இரண்டாவது மொழியான ஆங்கிலத்தையே கற்பிக்க முயலாத நிலையில், இதில் மூன்றாவது மொழி வேறு என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை அம... மேலும் பார்க்க

எழுத்தாளர் நாறும்பூநாதன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

எழுத்தாளர் நாறும்பூநாதன்(64) மறைவுக்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன்(64) ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1... மேலும் பார்க்க

தங்கத்தேர்கள் எப்போது பயன்பாட்டிற்கு வரும்?: அமைச்சர் சேகர்பாபு

இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ரூ.31 கோடியில் மதிப்பீட்டில் செய்யப்பட்டு வரும் 4 தங்கத் தேர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் பக்தர்களின் நேர்த்திக்கடனுக்காக பயன்பாட்டிற்கு வரும் என்று இந்து சமய அறநிலையத்த... மேலும் பார்க்க

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி: மாடு முட்டி இளைஞர் பலி

மதுரை: மதுரை கீழக்கரையில் உள்ள கலைஞா் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடு முட்டி இளைஞர் ஒருவர் பலியானார். தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நா... மேலும் பார்க்க