செய்திகள் :

அளவுக்கு அதிகமாக மது; விமானத்தில் ஜப்பான் தொழிலதிபர் மீது சிறுநீர் கழித்த இளைஞர்!

post image

டெல்லியில் இருந்து பேங்காக் சென்ற விமானத்தில் பயணித்த துஷார் (24) என்ற பயணி, விமானத்தில் இரண்டு கிளாஸ் மது வாங்கிக் குடித்தார். அவர் மது அருந்தியவுடன் அவரால் எழுந்திருக்க முடியவில்லை. சிறுநீர் கழிக்க அவர் இருக்கையில் இருந்து எழுந்தார்.

ஆனால் அவரால் மேற்கொண்டு நகர முடியவில்லை. இதனால் அப்படியே நின்று கொண்டு அருகில் அமர்ந்திருந்த பயணி மீது சிறுநீர் கழித்துவிட்டார். அவர் சிறுநீர் கழித்த நபர் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். அதுவும் ஜப்பானில் கம்பெனி ஒன்றின் உரிமையாளர் ஆவார். இதில் அருகில் இருந்த மற்றொரு பயணியும் பாதிக்கப்பட்டார். இது குறித்து விமான அதிகாரிகளிடம் புகார் கூறப்பட்டது. அவர்கள் பாதிக்கப்பட்ட பயணிக்குத் தேவையான உதவிகள் செய்ய முன்வந்தனர்.

ஆனால் அதனை ஏற்காத பயணி பேங்காக்கில் இறங்கிய பிறகு இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்தார். இதையடுத்து துஷார் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய 30 நாள்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் இது போன்று ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் பயணிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏர் இந்தியா எச்சரித்துள்ளது. இதற்கு முன்பு 2024ம் ஆண்டு குடிபோதையில் ஏர் இந்தியா விமானத்தில் ஒரு பயணி, வயதான பெண் பயணி மீது சிறுநீர் கழித்தார். 2023ம் ஆண்டு ஆர்யா வோரா என்ற மாணவர் அமெரிக்க விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்தார். அவர் அந்த விமானத்தில் பயணம் செய்ய நிரந்தர தடை விதிக்கப்பட்டது.

டெல்லி இளைஞர் படுகொலை; விசாரணை வளையத்தில் `Zikra' - துப்பாக்கியுடன் வலம் வரும் இந்த Lady Don யார்?

டெல்லி ஷீலம்பூர் பகுதியில் சமீபத்தில் குனால்(17) என்ற வாலிபர் பட்டப்பகலில் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். நேற்று முன் தினம் குனால் தனது வீட்டில் இருந்து பால் வாங்குவதற்காக வெளியில் கிளம்பிய போ... மேலும் பார்க்க

மணமேடையில் அதிர்ந்த மணமகன் - மணப்பெண் என காட்டப்பட்டவரின் தாயாரை திருமணம் செய்து வைக்க முயற்சியா?

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள பிரம்புரி என்ற இடத்தைச் சேர்ந்தவர் மொகமத் அசிம்(22). அசிம் பெற்றோர் இறந்துவிட்டனர். இதனால் தனது பூர்வீக வீட்டில் தனது சகோதரர் நதீமுடன் வசித்து வந்தார். இவருக்கு அவ... மேலும் பார்க்க

கேரளா: "பொய்யாக பாலியல் புகார் அளித்தேன்" - 7 ஆண்டுக்குப் பின் மன்னிப்பு கேட்ட மாணவி; நடந்தது என்ன?

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கருநாகப்பள்ளியை அடுத்த குறுப்பந்தறவு பகுதியில் பாராமெடிக்கல் கல்வி நிறுவனம் ஒன்று செயல்பட்டுவந்தது.அந்த கல்வி நிறுவனத்தைக் கோட்டயம் மதுரவேலி பகுதியைச் சேர்ந்த சி.டி.ஜோமோ... மேலும் பார்க்க

பேத்தி மரணத்தில் சந்தேகம்; நடவடிக்கை எடுக்காத போலீஸ்; கலெக்டர் அலுவலகத்தில் புகாரை ஒட்டிய பெரியவர்!

மதுரை பந்தல்குடி பகுதியைச் சேர்ந்தவர் மாயழகன். இவரது பேத்தி ரம்யா கிருஷ்ணன், ரீபன் என்பவரைத் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி வீட்டில் நடந்த வாக்கு... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக ரூ.75 லட்சம் மோசடி; அரசு ஊழியர் சிறைக்குச் சென்ற பின்னணி!

அரக்கோணத்தைச் சேர்ந்த விஜி என்பவர், தொலைதூர தொடர்பு கல்வி மையத்தை நடத்தி வருகிறார். இவரின் கல்வி மையத்துக்கு சென்னை திருநீர்மலை பகுதியில் குடியிருக்கும் செல்வராஜ் என்பவர் கிளாஸ் எடுக்க சென்றிருக்கிறார... மேலும் பார்க்க

சென்னை: இன்ஸ்டா பழக்கம்; ஆன்லைன் நண்பரைச் சந்திக்கச் சென்ற மாணவனுக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவன், குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அந்தப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவனுக்கு இன்ஸ்ட்ராகிராம் மூலம் அமீன் எ... மேலும் பார்க்க