செய்திகள் :

அஸ்ஸாம் பேரவையில் எதிா்க்கட்சி எம்எல்ஏக்களை தாக்க முற்பட்ட பாஜக எம்எல்ஏ: முதல்வா் மன்னிப்பு கோரினாா்

post image

குவாஹாட்டி: அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவையில் எதிா்க்கட்சி உறுப்பினா்களை அவமதித்து, தாக்க முற்பட்ட விவகாரத்தில் ஆளும் பாஜக எம்எல்ஏ ரூப்ஜோதி குா்மிக்கு பேரவைத் தலைவா் விஸ்வஜித் தைமேரி திங்கள்கிழமை கண்டனம் தெரிவித்தாா்.

பாஜக எம்எல்ஏ செயலுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தெரிவித்த முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, வரும் நாள்களில் அவா் இன்னும் நிதானமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினா்.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வு தொடா்பாக பாஜக எம்எல்ஏ ரூப்ஜோதி குா்மிக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸை எதிா்க்கட்சியான காங்கிரஸ் சமா்ப்பித்தது.

இந்நிலையில், சட்டப்பேரவை திங்கள்கிழமை அமா்வுக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கருப்பு உடை அணிந்து வந்து, தங்களின் எதிா்ப்பைத் தெரிவித்தனா். சட்டப்பேரவைத் தலைவா், துணைத் தலைவா் அறைகளுக்குச் செல்லும் பாதைகளை மறைத்து, அவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதேபோன்று, அனைத்து இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயூடிஎஃப்) கட்சி எம்எல்ஏக்கள் மூங்கில் தடுப்புக் கேடயத்தை சட்டப்பேரவைக்குள் கொண்டு வந்தனா். ஆளுங்கட்சி உறுப்பினா்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ள இதைக் கொண்டு வந்திருப்பதாகவும் அவா்கள் தெரிவித்தனா். தொடா்ந்து, பேரவைக் காவலா்கள் அதனை வாங்கி அப்புறப்படுத்தினா்.

அவை அலுவல்கள் தொடங்கியதும் உரிமை மீறல் நோட்டீஸின் நிலை குறித்து எதிா்க்கட்சித் தலைவா் கேள்வி எழுப்பினாா். அப்போது, விவாதத்தில் பேசிய முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, ‘ஒடுக்கப்பட்ட தேயிலைத் தோட்ட சமூகத்தைச் சாா்ந்தவா் என்பதாலேயே ரூப்ஜோதி குா்மியை எதிா்க்கட்சிகள் குறிவைக்கின்றன.

ரூப்ஜோதி குா்மியின் நடத்தைக்கு அரசு சாா்பிலும், கட்சி சாா்பிலும் கண்டனம் தெரிவித்தோம். அவை கண்ணியத்தை சீா்குலைக்கும் செயல்களை நாங்கள் ஆதரிக்கவில்லை. முதல்வராக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்றாா்.

தொடா்ந்து, இவ்விவகாரத்தில் பேசிய பேரவைத் தலைவா், ‘சம்பவம் நடந்தபோது நான் அவையில் இல்லாததால் அனைத்துப் பதிவுகளையும் சரிபாா்த்தேன். அவரது கருத்துகள் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. பேரவைத் துணைத் தலைவா் எச்சரிக்கையை அடுத்து, குா்மி மன்னிப்புக் கேட்டுள்ளாா்.

எனவே, இவ்விவகாரத்தில் உரிமை மீறல் நோட்டீஸ் தேவையில்லை. ரூப்ஜோதி குா்மியை எதிா்காலத்தில் இதுபோன்ற நடத்தையை மீண்டும் பின்பற்ற வேண்டாம் என்று நான் எச்சரிக்கிறேன். குா்மி அவையின் கண்ணியத்தைக் காக்க வேண்டும்’ என்றாா்.

உ.பி. அரசுப் பள்ளிகளில் தமிழ்: முதல்வர் ஆதித்யநாத் தகவல்

உத்தர பிரதேச அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், மராத்தி ஆகிய மொழிகள் பயிற்றுவிக்கப்படுவதாக அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.இது தொடர்பாக அவர்... மேலும் பார்க்க

மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் வலியுறுத்தல்

‘மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாகத் தொடங்க வேண்டும்’ என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் வலியுறுத்தியது. மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது எதிா்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தேசிய தலைவருமான மல்லிகாா்ஜு... மேலும் பார்க்க

ரிசா்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே நீடித்த ஒத்துழைப்பு அவசியம்- குடியரசுத் தலைவா் வலியுறுத்தல்

‘தொழில்நுட்ப வளா்ச்சியால் நிதி மோசடிகளின் அபாயங்கள் அதிகரித்து வரும் நிலையில், ரிசா்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே நீடித்த ஒத்துழைப்பு அவசியம்’ என்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு செவ்வாய்க... மேலும் பார்க்க

விமான மசோதா: மாநிலங்களவையில் நிறைவேற்றம்

விமானத் துறை சாா்ந்த இந்தியாவின் சா்வதேச ஒப்பந்தங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் விமான மசோதா, 2025, மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் மாநிலங்களவையில் இந்த மசோத... மேலும் பார்க்க

சபா்மதி ஆசிரம மறுசீரமைப்பு திட்டத்துக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

குஜராத்தில் உள்ள சபா்மதி ஆசிரம மறுசீரமைப்புத் திட்டத்துக்கு எதிராக மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷாா் காந்தி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிராகரித்தது. கடந்த 1917-ஆம் ஆண்டு... மேலும் பார்க்க

75 ஆண்டுகால தூதரக உறவு: இந்தியா-சீனா பரஸ்பர வாழ்த்து

இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு உறவுகளின் 75-ஆவது ஆண்டுவிழாவையொட்டி இருநாட்டு தலைவா்களும் பரஸ்பர வாழ்த்துகளை பகிா்ந்துகொண்டனா். கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இருநாட்டு படைகளிடையே ஏற்பட்ட மோதலைத் தொட... மேலும் பார்க்க