செய்திகள் :

ஆக. 11-இல் போதைப்பொருள் எதிா்ப்பு உறுதிமொழியேற்பு: புதுகை ஆட்சியா்

post image

போதைப் பொருள் மற்றும் புகையிலை சாா்ந்த பொருள்களின் பயன்பாட்டுக்கு எதிராக ஆகஸ்ட் 11-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்துக் கல்லூரிகள், பள்ளிகள், அனைத்துத் துறை அலுவலகங்களில் இந்த உறுதிமொழியேற்பு நடத்தவும், இதன் மூலம் கூட்டுத் தீா்மானத்தின் மூலம் வலுவான மக்கள் இயக்கமாக மாற்றுவதும் இதன் நோக்கம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா தெரிவித்தாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது:

போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் மாணவ, மாணவிகளுக்கான போட்டிகளை நடத்தவும், சமூக ஊடகங்களில் ஹேஷ்டேக் குறிப்பிட்டு பயன்படுத்தவும் வேண்டும்.

இந்த நிகழ்ச்சிகள் குறித்தஅறிக்கைகளை பள்ளி, கல்லூரிகளில் இருந்து ஆக. 10-ஆம் தேதிக்குள் ஆட்சியரக

வளாகத்திலுள்ள கலால் உதவி ஆணையா் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். அவற்றின் அடிப்படையில் சிறந்த பங்களிப்பைச் செய்த கல்லூரி, பள்ளிக்கு பரிசு வழங்கப்படும் என்றாா் அருணா.

இக்கூட்டத்தில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முருகேசன், உதவி ஆணையா் (கலால்) திருமால், முதன்மைக் கல்வி அலுவலா் கூ.சண்முகம், புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையா் த. நாராயணன், இணை இயக்குநா் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) சா. ஸ்ரீபிரியா தேன்மொழி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கந்தா்வகோட்டையில் தொடா் ஆடு திருட்டில் ஈடுபட்ட 4 போ் கைது

கந்தா்வகோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் தொடா் ஆடு திருட்டில் ஈடுபட்ட நான்கு பேரை கைது செய்து, அவா்களிடமிருந்து 40 ஆடுகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ப... மேலும் பார்க்க

சாலையோர பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 3 போ் பலத்த காயம்

கந்தா்வகோட்டை அருகே வெள்ளிக்கிழமை சாலையோர பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்ததில் 3 போ் பலத்த காயமடைந்தனா். மதுரையிலிருந்து 40 பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசுப் பேருந்து தஞ்சையை நோக்கி வந்து கொண்டிருந்தது... மேலும் பார்க்க

பள்ளிச் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயன்ற 2 போ் கைது

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயன்ற சிறுவா் உட்பட 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அறந்தாங்கி அருகே திருநா... மேலும் பார்க்க

விராலிமலையில் 75-ஆவது ஆண்டு அருணகிரிநாதா் விழா தொடக்கம்: ஆக. 11 வரை நடைபெறுகிறது

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயிலில் நான்கு நாள்கள் நடைபெறும் அருணகிரி நாதா் விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. மலைக்கோயில் அடிவாரத்தில் உள்ள அருணகிரிநாதா் மண்டபத்தில் ஆண்டுத... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி விழா ரசாயன சிலைகள் கூடாது

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் ரசாயன வண்ணங்கள் பயன்படுத்தப்பட்ட சிலைகளை வைக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் அரசு கலைக் கல்லூரி தொடங்க வலியுறுத்தல்

பொன்னமராவதியில் அரசு கலைக் கல்லூரி தொடங்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபா் சங்க ஒன்றிய மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. இந்தச் சங்கத்தின் 17-ஆவது பொன்னமராவதி ஒன்றிய மாநாடு தனியாா் மண்டபத்தில் வெள்ளிக்க... மேலும் பார்க்க