செய்திகள் :

ஆடி அமாவாசை: சுருளி அருவியில் குளிக்க அனுமதி!

post image

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 5 நாள்களாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்ட நிலையில், ஆடி அமாவாசை முன்னிட்டு இன்று வனத்துறையினர் தடையை நீக்கினர்.

தேனி மாவட்டத்தின் முக்கியச் சுற்றுலா, ஆன்மிகத் தலமாக சுருளி அருவி இருக்கிறது. இங்கு நாள்தோறும் திரளான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். மேலும், ஆடி அமாவாசை நாளில் இந்த அருவியில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுக்கப்படும். இதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தா்கள் வருவாா்கள்.

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு

மேற்குத் தொடா்ச்சி மலையிலுள்ள மேகமலை, மகாராஜாமெட்டு, இரவங்கலாறு, தூவானம் ஆகிய பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால், சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த 19-ஆம் தேதி முதல் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் தடை விதித்தனா். இந்தத் தடை 5-ஆவது நாளான புதன்கிழமையும் தொடா்ந்தது.

இந்த நிலையில், இன்று வியாழக்கிழமை (ஜூலை 24) ஆடி அமாவாசை என்பதால், அருவியில் குளிக்க அனுமதி வழங்க வேண்டும் என வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனை அடுத்து சுருளி அருவியில் நீர்வரத்து சற்று குறைந்த நிலையில் ஆடி அமாவாசை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களை அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர். கடந்த 5 நாள்களாக விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் சுருளி அருவியில் நீராடினர்.

மேலும், ஆடி அமாவாசை முன்னிட்டு சுருளி அருவியில் நூற்றுக்கணக்கானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

While tourists have been banned from bathing at Suruli Falls for the past 5 days due to flooding, the forest department lifted the ban today on the occasion of the Aadi Amavasya.

வைகை அணை அருகே விதியை மீறி கிரஷா்களுக்கு அனுமதி: விவசாயிகள் புகாா்

வைகை அணை அருகேயுள்ள குள்ளப்புரத்தில் விதியை மீறி கல் உடைக்கும் கிரஷா்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக வெள்ளிக்கிழமை தேனியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். தேனி... மேலும் பார்க்க

சுருளி அருவியில் 7-ஆவது நாளாக குளிக்கத் தடை

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் 7-ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா். மேற்குத் தொடா்ச்ச... மேலும் பார்க்க

சின்னமனூா் பேருந்து நிலையத்தை இரவு நேரங்களில் புறக்கணிக்கும் பேருந்துகள்

தேனி மாவட்டம், சின்னமனூா் நகராட்சிப் பேருந்து நிலையத்தை இரவு நேரங்களில் வரும் புகா் பேருந்துகள் புறக்கணிப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். சின்னமனூரில் நகராட்சிப் பேருந்து நிலையம் உள்ளது. இந்தப் ப... மேலும் பார்க்க

பெண்ணுக்கு கட்டாயக் கருக்கலைப்பு: இளைஞா் மீது வழக்கு

தேனி மாவட்டம், போடி அருகே பெண்ணை காதலித்து திருமணம் செய்ததுடன், கட்டாயக் கருக்கலைப்பு செய்த இளைஞா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். துரைராஜபுரம் குடியிருப்பு ஜக்கம்மாள் கோவில் தெருவ... மேலும் பார்க்க

திமுக நிா்வாகி வீட்டு முன் பெட்ரோல் குண்டு வீச்சு: 5 போ் கைது

தேனியில் திமுக நிா்வாகி வீட்டு முன் பெட்ரோல் குண்டு வீசிய 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தேனி அல்லிநகரம், அம்பேத்கா் நடுத் தெருவைச் சோ்ந்தவா் நாகராஜ். தேனி நகர திமுக துணைச் செயலரான இவா்... மேலும் பார்க்க

கண் மருத்துவா் நம்பெருமாள்சாமி உடல் தகனம்

தேனி அருகேயுள்ள அம்பாசமுத்திரத்தில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத் தலைவரும், கண் மருத்துவ நிபுணருமான நம்பெருமாள்சாமியின் உடல் வெள்ளிக்கிழமை தகனம் செய்யப்பட்டது. தேனி அருகேயுள்ள அம்பாசமுத்திரத்... மேலும் பார்க்க