செய்திகள் :

ஆட்சிப் பணி அதிகாரிகளின் பங்களிப்பு தேச வளர்ச்சிக்கு வித்திட்டது: குடியரசுத் தலைவர்

post image

கொள்கைகளை வகுப்பதில் ஆட்சிப் பணி அதிகாரிகளின் பங்களிப்பானது குடிமக்களின் நலவாழ்வுக்கும் தேசத்தின் வளர்ச்சிக்கும் வித்திட்டதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்தார்.

ஆண்டுதோறும் ஏப். 21 ஆம் தேதி ஆட்சிப் பணிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளையொட்டி குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, எக்ஸ் வலைதளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ஆட்சிப் பணிகள் தினத்தையொட்டி அனைத்து ஆட்சிப் பணி அதிகாரிகளுக்கும் எனது வாழ்த்துக்கள். அரசுப் பணியில் உங்களது பங்கும். கொள்கைகளை வகுப்பதில் உங்களின் பங்களிப்பும் குடிமக்களின் நலவாழ்வுக்கும் தேசத்தின் வளர்ச்சிக்கும் வித்திட்டன.

தேசம் தனது இலக்குகளை நனவாக்கிக் கொள்ளவும் நல்லாட்சியில் புதிய சாதனைகளைப் படைக்கவும் நீங்கள் முக்கிய பங்காற்ற வாழ்த்துகிறேன் என்று குடியரசுத் தலைவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கமும் ஆட்சிப் பணிகள் தினத்தையொட்டி அரசு அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இச்சங்கம், எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் ஆட்சிப் பணிகள் தினத்தில் வலுவான இந்தியா என்ற சர்தார் படேலின் லட்சியக் கண்ணோட்டத்தை அடைய நம்மை நாமே அர்ப்பணிப்போம்.

அவரது கொள்கைகளின்படி தேசத்துக்கு பெருமிதத்துடன் பணியாற்ற உறுதியேற்போம் என்று தெரி வித்துள்ளது.

நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.சாய் சூர்யா, சொர்ணா குரூப்ஸ் ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாகக் கொடுக்கப்பட்ட புகாரின் அ... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் மறைவு: 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் -மத்திய அரசு

புது தில்லி: போப் பிரான்சிஸ் மறைவையொட்டி நாடெங்கிலும் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவரான போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவா... மேலும் பார்க்க

நிஷிகாந்த் துபே மீது அவமதிப்பு வழக்கு எங்கள் அனுமதி தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: ‘பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தங்களின் அனுமதி தேவையில்லை’ என மனுதாரரிடம் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது. அண்மையில் உச்சநீதிமன்றம் மற்றும் தலைம... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையம் பாரபட்சம்: அமெரிக்காவில் ராகுல் குற்றச்சாட்டு

இந்திய தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் செயல்படுகிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும். காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி, பாஸ்டன் நகரில் நடைபெ... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் மறைவுக்கு தலைவா்கள் இரங்கல்

புது தில்லி: போப் பிரான்சிஸ் மறைவுக்கு நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன் மற்றும் அரசியல் கட்சித் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா். நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன் வெளியிட்ட தனது இரங்கல் செய்தியில், ‘வாழ்க்கைய... மேலும் பார்க்க

போதிய ஆதாரங்களின்றி தாக்கல் செய்த மனு: வழக்குரைஞரை சாடிய உச்ச நீதிமன்றம்

புது தில்லி: மேற்கு வங்க மாநிலத்தில் நிகழ்ந்த வக்ஃப் வன்முறை தொடா்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை கோரி தாக்கல் செய்த மனுவில் போதிய ஆதாரங்கள் இடம்பெறாத நிலையில், மனுதாரரான வழக்குரைஞரை உச்சநீதிம... மேலும் பார்க்க