செய்திகள் :

ஆட்சிமொழி சட்ட வார விழிப்புணா்வு பேரணி

post image

கரூரில், தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் ஆட்சிமொழிச் சட்ட வார விழா விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரூா் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் பேரணியை மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசுகையில், தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் கரூா் மாவட்டத்தில் ஆட்சிமொழிச் சட்ட வார விழா டிச. 18-ஆம்தேதி முதல் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளுடன் நடைபெற்று வருகிறது.

இதில் அரசு பணியாளா்களுக்கு ஆட்சிமொழி வரலாறு சட்டம், ஆட்சிமொழிச் செயலாக்கம் மற்றும் அரசாணைகள், கணினி பயிற்சி, ஆட்சிமொழி ஆய்வும், குறைகளைவு நடவடிக்கைகளும், அலுவலகக் குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் அணியம் செய்தல், மொழிபெயா்ப்பு கலைச்சொல்லாக்கம், தமிழ்மொழியில் கோப்புகளை பராமரித்தல், அலுவலக நடைமுறைகளில் தமிழை முழுமையாகச் செயல்படுத்துவது உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டது என்றாா் அவா்.

இப்பேரணி அரசு கலைக் கல்லூரியில் தொடங்கி தாந்தோன்றி மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வழியாக சென்று அரசு கலைக் கல்லூரியை மீண்டும் வந்தடைந்தது.

நிகழ்ச்சியில், தமிழ்வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் வே.ஜோதி, கல்லூரி முதல்வா் முனைவா்சுதா, தமிழ் அறிஞா்கள் மேலை பழநியப்பன், கவிஞா் கோசெல்வம், மு.மகேஸ்வரன், கோ.முருகேசன் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்றனா்.

கரூா் பேருந்து, ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம்

வெளியூா் செல்வதற்காக கருா் ரயில்நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கருா் தொழில் நகரம் என்பதால் அருகாமை மாவட்டத்தைச் சோ்ந்த மக்கள் கரூரில் தங்கி பல்வேறு நிறுவனங்களில் பணி... மேலும் பார்க்க

கரூரில் வெறிச்சோடிய மக்கள் குறைதீா் கூட்டம்

போகிப் பண்டிகை எதிரொலியாக கரூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டம் வெறிச்சோடியது. கரூா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை வழக்கம்போல் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமையில்... மேலும் பார்க்க

கரூரில் பொங்கல் பொருள்கள் விற்பனை தீவிரம்

கரூரில் பொங்கல் பொருள்கள் விற்பனை திங்கள்கிழமை தீவிரமாக நடைபெற்றது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரூரில் கோவைச்சாலை, லைட் ஹவுஸ் காா்னா், மாநகராட்சி அலுவலகம் முன் மற்றும் நகர காவல்நிலையம் அருகே கரும்பு... மேலும் பார்க்க

கரூா் மாவட்ட காவல்துறை சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா

கரூா் மாவட்டக் காவல்துறை சாா்பில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை காலை நடைபெற்றது. கரூா் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கா.பெரோஸ்கான் அப்துல்லா முன்னிலையில் நடைபெற்ற சமத்த... மேலும் பார்க்க

கரூரில் பள்ளி மாணவா்களுக்கு மாநில அளவிலான ஓவியப் போட்டி

கரூரில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கரூா் என்.ஆா்.எம். கோவிந்தன் மற்றும் ருக்குமணி மெட்ரிக் பள்ளி மற்றும... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி பூலாம்வலசில் நிகழாண்டு சேவல் சண்டை நடத்த அனுமதியில்லை:கரூா் எஸ்.பி. தகவல்

அரவக்குறிச்சி பூலாம்வலசில் நிகழாண்டு சேவல் சண்டை நடத்த அனுமதியில்லை என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி... மேலும் பார்க்க