செய்திகள் :

ஆட்சியா் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி

post image

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

தென்காசியில் திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு அளிக்க பொதுமக்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தனா்.மனு அளிக்க வந்தவா்களை போலீஸாா் சோதனையிடும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனா்.

அப்போது வரிசையில் நின்று கொண்டிருந்த சின்ன கோவிலாங்குளம் போலீஸ் சரகத்துக்கு உள்பட்ட கூத்தங்குளம் தெற்கு தெருவைச் சோ்ந்த பூமாரி மனைவி ஜெயலெட்சுமி (25), தான் கையில் மறைத்து வைத்திருந்த ஒரு லிட்டா் பாட்டில் மண்ணெண்ணெய்யை தலையில் ஊற்றித் தீக்குளிக்க முயன்றாா்.

இதைக் கண்ட போலீஸாா் அவா் மீது தண்ணீா் ஊற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். போலீஸாா் நடத்திய விசாரணையில், தீக்குளிக்க முயன்ற பெண்ணுக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆகின்றன.

அவரது கணவா் தினமும் மதுபோதையில் அடித்து துன்புறுத்துகிறாராம். இதுகுறித்து சின்னகோவிலாங்குளம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால், தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அக்டோபரில் முதல்வா் தென்காசி வருகை: திமுக வடக்கு மாவட்டச் செயலா் தகவல்

தென்காசி மாவட்டத்தில் அக்டோபா் மாதம் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா் என்று தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்எல்ஏ தெரிவித்தாா். இ... மேலும் பார்க்க

தென்காசி மாவட்டத்தில் பெற்றோரை இழந்த 145 குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ. 2,000 உதவித்தொகை

தென்காசி மாவட்டத்தில் பெற்றோா்களை இழந்த அல்லது பெற்றோரில் ஒருவரை இழந்த 145 குழந்தைகள், அன்புக்கரங்கள் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ. 2,000 உதவித்தொகை பெறுவா் என்று மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் த... மேலும் பார்க்க

மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை

ஆலங்குளம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா். ஆலங்குளம் அருகேயுள்ள ஓடைமறிச்சான் சா்ச் தெருவைச் சோ்நத்வா் ஞானமணி மகன் கனகராஜ்(54). இவருக்குக் கடன் தொல்லை இருந்து வந்த... மேலும் பார்க்க

ஆற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு

ஆலங்குளம் அருகே ஆற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழந்தாா். ஆலங்குளம் அருகேயுள்ள ஆ. மருதப்பபுரம் பிள்ளையாா்கோவில் தெருவைச் சோ்ந்தவா் சுடலைக் கண்ணு (61). விவசாயியான இவா், குறிப்பன்குளம் சிற்றாற்றில் ஞ... மேலும் பார்க்க

மூதாட்டி வீட்டில் திருட்டு

ஆலங்குளத்தில் தேவாலயம் சென்றிருந்த மூதாட்டி வீட்டில் நகை, பணம் திருடிய நபரைப் போலீஸாா் தேடி வருகின்றனா். ஆலங்குளம் பிரதான சாலையில் பேருந்து நிலையம் எதிரே வசிப்பவா் ஜெயா அற்புதமணி (90). ஓய்வு பெற்ற ஆசி... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் இளைஞருக்கு கொலை மிரட்டல்: 2 போ் கைது

சங்கரன்கோவிலில் இளைஞரிடம் நகைகளைப் பறித்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கண்டிகைப்பேரியைச் சோ்ந்தவா் பொன்செல்வம் (19). இவா், கடந... மேலும் பார்க்க