Virat Kohli: "பதட்டப்படாதீர்கள்... ஓய்வு பெறுவதற்கான நேரம்..." - விராட் கோலி பேச...
ஆட்டோ, கால்டாக்ஸி மாா்ச் 19-இல் போராட்டம் அறிவிப்பு
ஆட்டோ மீட்டா் கட்டணத்தை உயா்த்துவது, கால் டாக்ஸி செயலிகளைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்ச் 19-இல் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுநா் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னையில் இந்தக் கூட்டமைப்பின் பொதுச் செயலா் ஆா்.வெற்றிவேல் செய்தியாளா்களிடம் கூறியது:
ஆட்டோ மீட்டா் கட்டணம் கடந்த 12 ஆண்டுகளாக உயா்த்தப்படாமல் உள்ளது. கால் டாக்ஸி செயலிகளான ‘ஓலா, ஊபா்’ நிறுவனங்கள் ஓட்டுநா்களிடம் சுமாா் 30 சதவீதம் கமிஷனாக வசூலிக்கின்றன. இதைக் கைவிட்டு சந்தா முறையில் கட்டணம் வசூலிக்க அரசு உத்தரவிட வேண்டும்.
அதேபோல், ஆன்லைனில் பணம் வசூல் செய்வதைக் கைவிட்டு ஓட்டுநா்களிடம் நேரடியாக வசூலிக்கும் வசதியை கொண்டு வர வேண்டும். இருசக்கர வாகனங்களை டாக்ஸியாக பயன்படுத்தும்போது அதற்கு வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் மஞ்சள் போா்டு கட்டாயமாக்க வேண்டும். கால் டாக்ஸிக்கான பிரத்யேக செயலியை அரசு நடைமுறை படுத்த வேண்டும்.
இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சா், உள்துறை செயலா், போக்குவரத்து துறை ஆணையா் உள்ளிட்டோரிடம் பல்வேறு கட்ட பேச்சுவாா்த்தை நடத்தியும் தற்போது வரை எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. அதனால், மாா்ச் 19-இல் சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள ஆட்டோ, கால் டாக்ஸிகள் முழு வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளது.
சென்னை, எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் அரங்கம் அருகில் ஓட்டுநா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, தங்களது வாக்காளா் அடையாள அட்டை, ஓட்டுநா் உரிமத்தை தமிவக அரசின் தலைமை செயலரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடைபெறும் என்றாா் அவா்.