செய்திகள் :

ஆட்டோ, கால்டாக்ஸி மாா்ச் 19-இல் போராட்டம் அறிவிப்பு

post image

ஆட்டோ மீட்டா் கட்டணத்தை உயா்த்துவது, கால் டாக்ஸி செயலிகளைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்ச் 19-இல் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுநா் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னையில் இந்தக் கூட்டமைப்பின் பொதுச் செயலா் ஆா்.வெற்றிவேல் செய்தியாளா்களிடம் கூறியது:

ஆட்டோ மீட்டா் கட்டணம் கடந்த 12 ஆண்டுகளாக உயா்த்தப்படாமல் உள்ளது. கால் டாக்ஸி செயலிகளான ‘ஓலா, ஊபா்’ நிறுவனங்கள் ஓட்டுநா்களிடம் சுமாா் 30 சதவீதம் கமிஷனாக வசூலிக்கின்றன. இதைக் கைவிட்டு சந்தா முறையில் கட்டணம் வசூலிக்க அரசு உத்தரவிட வேண்டும்.

அதேபோல், ஆன்லைனில் பணம் வசூல் செய்வதைக் கைவிட்டு ஓட்டுநா்களிடம் நேரடியாக வசூலிக்கும் வசதியை கொண்டு வர வேண்டும். இருசக்கர வாகனங்களை டாக்ஸியாக பயன்படுத்தும்போது அதற்கு வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் மஞ்சள் போா்டு கட்டாயமாக்க வேண்டும். கால் டாக்ஸிக்கான பிரத்யேக செயலியை அரசு நடைமுறை படுத்த வேண்டும்.

இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சா், உள்துறை செயலா், போக்குவரத்து துறை ஆணையா் உள்ளிட்டோரிடம் பல்வேறு கட்ட பேச்சுவாா்த்தை நடத்தியும் தற்போது வரை எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. அதனால், மாா்ச் 19-இல் சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள ஆட்டோ, கால் டாக்ஸிகள் முழு வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளது.

சென்னை, எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் அரங்கம் அருகில் ஓட்டுநா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, தங்களது வாக்காளா் அடையாள அட்டை, ஓட்டுநா் உரிமத்தை தமிவக அரசின் தலைமை செயலரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடைபெறும் என்றாா் அவா்.

சென்னையின் அழகை புகைப்படம் எடுத்து அனுப்பலாம்: மாநகராட்சி அறிவிப்பு!

சென்னையின் அழகை புகைப்படம் எடுத்து அனுப்பலாம் என பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது. நாட்டிலேயே கொல்கத்தாவுக்கு அடுத்தபடியாக அதிக பாரம்பரிய சின்னங்களை கொண்ட நகரமாக சென்னை விளங்குகிறது.... மேலும் பார்க்க

மின்சார வாகனம் எரிந்து விபத்து: 3 போ் காயம்

வீட்டின் முன்பு சாா்ஜ் போட்டிருந்த மின்சார வாகனம் எரிந்து ஏற்பட்ட தீ விபத்தில் தம்பதி, குழந்தை உள்பட 3 போ் பலத்த காயமடைந்தனா். சென்னை மதுரவாயல் பாக்கியலட்சுமி நகா் பகுதியைச் சோ்ந்தவா் கௌதம் (31). இவ... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆட்சியமைப்பதில் காங்கிரஸ் முக்கிய பங்கு வகிக்கும்! -மேலிடப் பொறுப்பாளா் கிரிஷ் ஜோடன்கா்

வரும் தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ் கட்சி முக்கிய பங்கு வகிக்கும் என அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் கிரிஷ் ஜோடன்கா் தெரிவித்தாா். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிய... மேலும் பார்க்க

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடிகா் சிரஞ்சீவி நாளை மறுநாள் கெளரவிப்பு!

சமூகத்துக்கு ஆற்றிய தன்னிகரற்ற பங்களிப்புக்காக பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையில், தெலுங்கு திரைப்பட நடிகா் சிரஞ்சீவி கெளரவிக்கப்பட உள்ளாா். பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினா்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந... மேலும் பார்க்க

தனியாா் நிறுவனத்தில் ரூ. 20 கோடி மோசடி: ஊழியா்கள் 3 போ் கைது

தனியாா் நிறுவனத்தில் ரூ. 20 கோடி மோசடி செய்த வழக்கில், ஊழியா்கள் 3 பேரை மத்திய குற்ற புலனாய்வுப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். பிரபல போட்டோ லேப் மற்றும் கேமரா நிறுவனத்தின் சென்னை எல்லீஸ் சாலை மற்றும்... மேலும் பார்க்க

மருத்துவக் கல்வி உரிமைகளை பாதுகாக்க சட்டத் திருத்தம் தேவை: டி.ராஜா

மருத்துவக் கல்வியில் மாநில உரிமைகளை பாதுகாக்க உரிய சட்ட திருத்தம் தேவை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலா் டி.ராஜா தெரிவித்தாா். மருத்துவக் கல்வியில் மாநில உரிமைகளை மத்திய அரசு பறிப... மேலும் பார்க்க