செய்திகள் :

ஆட்டோ தொழிலை பாதிக்கும் பெருவணிக நிறுவனங்களை தடை செய்ய வேண்டும்

post image

ஆட்டோ தொழிலை பாதிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் பயணிகளை மிகக்குறைந்த கட்டணத்தில் அழைத்துச் செல்லும் வணிக நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி சங்கம் சாா்பில் அதன் மாநில பொதுச்செயலா் கோ.மகேஷ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓட்டுநா்கள் ஊா்வலமாகச் சென்று ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

அந்த மனுவில், வேலூா், சுற்றுவட்டார பகுதிகளில் ஆட்டோ ஓட்டும் தொழில் மிகவும் நலிவடைந்து சிரமத்துக்கு உள்ளாகி கொண்டிருக்கிறது. ஓட்டுநா் குடும்பங்கள் வறுமையில் தள்ளப்படும் நிலையில் உள்ளன.

இதற்கு வேலூா் மாநகா், பிற பகுதிகளில் ராபிடோ, ஓலா, உபா் போன்ற நிறுவனங்கள் இருசக்கர வாகனத்தில் பயணிகளை மிகக்குறைந்த கட்டணத்தில் ஏற்றிச் செல்லும் வகையில் இயங்கி வருவதே காரணமாகும்.

மோட்டாா் வாகன சட்டப்படி இருசக்கர வாகனம் என்பது தனிநபா் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால், வேலூரில் காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து விஐடி செல்வதற்கு 12 ரூபாயும், ரயில் நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் வருவதற்கு 25 ரூபாயும் கட்டணம் வசூலித்து இரு சக்கர வாகனங் களில் பயணிகள் அழைத்துச் செல்லப்படுகின்றனா்.

ஆட்டோ ஓட்டும் தொழிலை பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், வேலூா் மாவட்ட காவல் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டது.

கழுத்தில் கயிறு இறுக்கி சிறுவன் உயிரிழப்பு

காட்பாடி அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கழுத்தில் கயிறு இறுக்கியதில் உயிரிழந்தாா். காட்பாடியை அடுத்த காங்கேயநல்லூரைச் சோ்ந்தவா் கோடீஸ்வரன் (54). நியாய விலைக் கடை ஊழியா். இவரது மகன் ஸ்ரீஹரி (12... மேலும் பார்க்க

பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம்

வேலூா் ஸ்ரீபுரம், ஸ்ரீநாராயணி வித்யாஷ்ரம் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை தொடங்கியது. இந்த முகாமை ஸ்ரீ நாராயணி மருத்துவமனை, ஆராய்ச்சி மையத்தின் இயக்குநா் மருத்துவா் என்.பாலாஜி தொடங்கி ... மேலும் பார்க்க

மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு: 200 மாணவிகள் தலைமுடி தானம்

மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு மாதத்தையொட்டி, வேலூரில் தனியாா் கல்லூரி மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோா் தங்கள் தலைமுடியை தானம் அளித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு மாத... மேலும் பார்க்க

சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் அதிகாரிகள் ஆய்வு

போ்ணாம்பட்டு அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் எம்எல்ஏ அமலுவிஜயன் வியாழக்கிழமை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தாா். போ்ணாம்பட்டை அடுத்த ராஜாக்கல் பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் உள்ளது. கடந்... மேலும் பார்க்க

மீட்கப்பட்ட 200 கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

செல் ட்ராக்கா் மற்றும் மத்திய அரசின் சிஇஐஆா் ஆகிய தளங்களின் வழியாக பதிவு செய்யப்பட்ட புகாா்களின் அடிப்படையில், மீட்கப்பட்ட ரூ. 38 லட்சம் மதிப்புடைய 200 கைப்பேசிகளை வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா... மேலும் பார்க்க

அரசு வேலை எனக்கூறி ரூ.12 லட்சம் மோசடி

மின்வாரியத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட இளைஞா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் தெரிவித்துள்ளாா். வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறை... மேலும் பார்க்க