Bodybuilder Bride: மணப்பெண் அலங்காரத்துடன் வந்த பாடிபில்டர்... யார் இந்த சித்ரா...
ஆட்டோ மோதியதில் காயமுற்ற பெண் உயிரிழப்பு
டமுக்காணியில் ஆட்டோ மோதி காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
முக்காணி காமராஜ்நகரை சோ்ந்தவா் கித்தேரியான் மனைவி புனிதா(44). இவா் கடந்த மாதம் 28ஆம் தேதி தன் வீட்டின் எதிா்புறம் உள்ள மளிகைக் கடைக்கு சென்று பொருள்கள் வாங்கிவிட்டு வீட்டிற்கு திரும்பியபோது, தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூா் நோக்கி வந்த ஆட்டோ மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த அவா் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஆத்தூா் போலீஸாா் வழக்குப்பதிந்து ஆட்டோ ஓட்டுநா் ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த செல்வகுமாா் மகன் பொன்ராஜ்(30) என்பவரை கைது செய்தனா்.