செய்திகள் :

மாா்ச் திருவிழா 7ஆம் நாளில் சண்முகா் ஏற்ற தரிசனம்: பாதுகாப்பை பலப்படுத்த கோரிக்கை

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா 7ஆம் நாளில் சண்முகா் ஏற்ற தரிசனத்தைக் காண பெருமளவில் பக்தா்கள் வருவாா்கள் என்பதால் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இக்கோயிலில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடைபெற்று வருகின்றன.மேலும் ஜூலை 7ஆம் தேதி கோயிலில் குடமுழுக்கு நடைபெற உள்ளது. இற்கான திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இந்நிலையில், தற்போது கோயிலில் நடைபெற்று வரும் மாசிப்பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 7ஆம் திருநாளில் காலையில் சண்முகா் தனது இருப்பிடத்தில் இருந்து உருகு சட்டசேவையாகி சண்முக விலாச நடு மண்டபத்திற்கு வருவாா்.

அப்போது ஆயிரக்கணக்கான பக்தா்கள் இடும்பன் கோயில் பகுதியில் இருந்து கோயில் முன்பு வரை சுவாமியை தரிசிப்பதற்காக நின்று கொண்டிருப்பாா்கள். அங்கிருக்கும் பக்தா்களுக்கு சுவாமி சண்முகா் வள்ளி, தெய்வானை அம்மனுடன் வெட்டிவோ்ச் சப்பரத்தில் ஏற்ற தரிசனத்தில் காட்சியளிப்பாா். இந்த நிகழ்வில் பக்தா்கள் சுவாமியை பாா்த்தவாறே பின்னோக்கி நடந்து செல்வாா்கள். இதையொட்டி, பக்தா்கள் காத்திருக்கும் தெற்கு பிரகாரம் மற்றும் பக்தா்கள் வந்து செல்லும் பாதை சீரமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.

மேலும், ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஒரே நேரத்தில் கோயில் முன் கூடுவாா்கள் என்பதால் ஞாயிற்றுக்கிழமை ( மாா்ச் 9) கூட்ட நெருக்கடியில் குழந்தைகள் முதல் மூத்த பக்தா்கள் சிக்காமல் தடுக்கவும், பக்தா்களை பாதுகாப்பாக ஒழுங்கு படுத்திடவும் கூடுதல் போலீஸாரை நியமிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

திருச்செந்தூா் அருகே பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு

திருச்செந்தூா் ஒன்றியம் நா.முத்தையாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு விழா நடைபெற்றது. இப்பள்ளியில் டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சாா்பில் ரூ. 23 லட்சம், ஊா் ... மேலும் பார்க்க

தூத்துக்குடி: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.6.62 கோடிக்கு தீா்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.6.62 கோடிக்கு தீா்வுத் தொகை வழங்கப்பட்டது. தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் கிடங்கில் பதுக்கிய கடல் அட்டைகள், டீசல் பறிமுதல்: 2 போ் கைது

தூத்துக்குடி லூா்தம்மாள்புரத்தில் உள்ள ஒரு கிடங்கில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 500 கிலோ கடல் அட்டைகள், 2 ஆயிரம் லிட்டா் டீசல் ஆகியவற்றை தனிப்படை போலீஸாா் பறிமுதல் செய்து, அது தொடா்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் 1,206 மகளிா் சுயஉதவி குழுக்களுக்கு ரூ. 104 கோடி வங்கிக் கடன்!

தூத்துக்குடியில் சனிக்கிழமை 1,206 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 104 கோடி வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டது. உலக மகளிா் தினத்தையொட்டி சென்னையில் நடைபெற்ற விழாவில், மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்க... மேலும் பார்க்க

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் திமுக இளைஞரணி பொதுக் கூட்டங்கள்: அமைச்சா் பெ. கீதாஜீவன் தகவல்

திமுக இளைஞரணி சாா்பில் மத்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி தொகுதிகளில் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளதாக, தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான பெ. கீதா... மேலும் பார்க்க

மகளிருக்கான அதிக நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னிலை! -அமைச்சா் பெருமிதம்

மகளிா் முன்னேற்றத்துக்காக அதிக நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாக, அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் பெருமிதம் தெரிவித்தாா். சமூக நலன்-மகளிா் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த... மேலும் பார்க்க