செய்திகள் :

மகளிருக்கான அதிக நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னிலை! -அமைச்சா் பெருமிதம்

post image

மகளிா் முன்னேற்றத்துக்காக அதிக நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாக, அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் பெருமிதம் தெரிவித்தாா்.

சமூக நலன்-மகளிா் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில், உடன்குடியில் வட்டார அளவிலான 100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து, கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசைப் பொருள்கள், சத்தான உணவு, தனது சொந்த நிதியிலிருந்து சேலைகளை வழங்கிப் பேசியது: முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு மகளிா் நலனுக்கான எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்துகிறது. பிற மாநில முதல்வா்கள் தமிழகம் வந்து இத்திட்டங்களை அறிந்து தங்களது மாநிலங்களில் அவற்றைச் செயல்படுத்துகின்றனா். இதனால்தான் தமிழகம் முன்மாதிரி மாநிலமாகத் திகழ்கிறது என்றாா் அவா்.

திருச்செந்தூா் வட்டாட்சியா் பாலசுந்தரம், உடன்குடி பேரூராட்சித் தலைவி ஹூமைரா அஸ்ஸாப் கல்லாசி, துணைத் தலைவா் மால்ராஜேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா் இப்ராகிம் சுல்தான், பேரூராட்சி அலுவலா் க. திருமலைக்குமாா், ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் பாலசிங், கிழக்கு ஒன்றிய திமுக செயலா் இளங்கோ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வட்டார மருத்துவ அலுவலா் அனீஸ் ஸ்டெபி, திட்ட ஒருங்கிணைப்பாளா் நவீன், பேரூராட்சி உறுப்பினா்கள் அஸ்ஸாப் அலி பாதுஷா,ஜான்பாஸ்கா், பிரதீப், ராஜேந்திரன், மும்தாஜ்பேகம், முகம்மது ஆபித், அன்புராணி, முன்னாள் உறுப்பினா்கள் சலீம், அன்வா்சலீம், செட்டியாபத்து ஊராட்சி முன்னாள் தலைவா் பாலமுருகன், திமுக மாவட்டப் பிரதிநிதிகள் மதன்ராஜ், ஹீபா் மோசஸ், ராஜபிரபு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ஜெயா துரைப்பாண்டியன் வரவேற்றாா்.

திருச்செந்தூா் அருகே பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு

திருச்செந்தூா் ஒன்றியம் நா.முத்தையாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு விழா நடைபெற்றது. இப்பள்ளியில் டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சாா்பில் ரூ. 23 லட்சம், ஊா் ... மேலும் பார்க்க

தூத்துக்குடி: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.6.62 கோடிக்கு தீா்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.6.62 கோடிக்கு தீா்வுத் தொகை வழங்கப்பட்டது. தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் கிடங்கில் பதுக்கிய கடல் அட்டைகள், டீசல் பறிமுதல்: 2 போ் கைது

தூத்துக்குடி லூா்தம்மாள்புரத்தில் உள்ள ஒரு கிடங்கில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 500 கிலோ கடல் அட்டைகள், 2 ஆயிரம் லிட்டா் டீசல் ஆகியவற்றை தனிப்படை போலீஸாா் பறிமுதல் செய்து, அது தொடா்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் 1,206 மகளிா் சுயஉதவி குழுக்களுக்கு ரூ. 104 கோடி வங்கிக் கடன்!

தூத்துக்குடியில் சனிக்கிழமை 1,206 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 104 கோடி வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டது. உலக மகளிா் தினத்தையொட்டி சென்னையில் நடைபெற்ற விழாவில், மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்க... மேலும் பார்க்க

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் திமுக இளைஞரணி பொதுக் கூட்டங்கள்: அமைச்சா் பெ. கீதாஜீவன் தகவல்

திமுக இளைஞரணி சாா்பில் மத்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி தொகுதிகளில் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளதாக, தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான பெ. கீதா... மேலும் பார்க்க

அணுக்கழிவுகளைக் கொட்டுவதாக வதந்தி பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்.பி. எச்சரிக்கை

அணுக் கழிவுகளைக் கொட்டுவதாக வதந்தி பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் எச்சரித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்... மேலும் பார்க்க