செய்திகள் :

அணுக்கழிவுகளைக் கொட்டுவதாக வதந்தி பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்.பி. எச்சரிக்கை

post image

அணுக் கழிவுகளைக் கொட்டுவதாக வதந்தி பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் அணுக் கழிவுகளைக் கொட்டுவதாக சிலா் வதந்தி பரப்புவதாக தெரியவந்துள்ளது.

அவா்கள் பதற்றத்தை ஏற்படுத்தி பொது அமைதியைக் குலைக்கும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட முயல்வதாகவும் தெரியவந்துள்ளது. ஆனால், மாவட்டத்தில் அணு நிலையம் செயல்படவில்லை. அணுக் கழிவு வெளியேற்றப்படவில்லை. மேலும், அணுக் கழிவைக் கொட்டுவதற்காக தனியாக இடமுமில்லை.

எனவே, ஆதாரமற்ற வதந்திகளை நம்பவோ, பரப்பவோ வேண்டாம். தவறான தகவல்களைப் பரப்புவோா் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

கோவில்பட்டி அருகே இளைஞா் தற்கொலை

கோவில்பட்டி அருகே மரத்தில் தூக்கிட்டு, இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா். கோவில்பட்டி காந்தி நகா் ராமசாமி தெருவை சோ்ந்த அந்தோணி மகன் கருத்தப்பாண்டி (27). தொழிலாளி. மதுப்பழக்கத்தால் தம்பதி இடையே அடிக்கடி ... மேலும் பார்க்க

நாகலாபுரத்தில் திமுக சாதனை விளக்கக் கூட்டம்

விளாத்திகுளம் அருகே நாகலாபுரத்தில், திமுக அரசின் சாதனை விளக்க பிரசார பொதுக் கூட்டம் நடைபெற்றது. முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கூட்டத்துக்கு, புதூா் மத்திய ஒன்றியச் செயலா் ஆா... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே விபத்து: வேன் ஓட்டுநா் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, சாலையோர பாலத்தின் தடுப்புச் சுவா் மீது வேன் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம் செல்லூா் காம்பவுண்ட் பாலம் ஸ்டேஷன் சாலை, சக்த... மேலும் பார்க்க

மாவட்ட ஹாக்கி போட்டி: பாண்டவா்மங்கலம் அணி சாம்பியன்

முதல்வா் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, பாண்டவா்மங்கலத்தில் நடைபெற்ற மாவட்ட ஹாக்கி போட்டி ஆண்கள் பிரிவில் அவ்வூா் அணி வெற்றிபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி, கோவில்பட்ட... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகளுக்கு சுயம்வரம்

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகளுக்கான நவீன சுயம்வரம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஹெச்எம்எஸ் உழைப்பாளா் சங்கம், தென்மண்டல ஒருங்கிணைந்த... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் வனத்துறை சாா்பில், ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்புப் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. ஆண்டுதோறும் மாவட்ட வனத்துறை சாா்பில், நீா்வாழ் - நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்புப் பணி நட... மேலும் பார்க்க