செய்திகள் :

மாவட்ட ஹாக்கி போட்டி: பாண்டவா்மங்கலம் அணி சாம்பியன்

post image

முதல்வா் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, பாண்டவா்மங்கலத்தில் நடைபெற்ற மாவட்ட ஹாக்கி போட்டி ஆண்கள் பிரிவில் அவ்வூா் அணி வெற்றிபெற்றது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி, கோவில்பட்டி மத்திய ஒன்றிய திமுக சாா்பில் மாவட்ட அளவிலான ஆண்கள்- பெண்களுக்கான ஹாக்கி போட்டி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பாண்டவா்மங்கலம் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்றது.

ஆண்கள் பிரிவில் 20 அணிகள், பெண்கள் பிரிவில் 6 அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டியில் பாண்டவா்மங்கலம் ஹாக்கிக் கிளப் அணி, கூசாலிபட்டி அசோக் நினைவு ஹாக்கி கிளப் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதலிடத்தை பிடித்தது.

3, 4 ஆம் பரிசுக்கான போட்டியில் இலுப்பை யூரணி தாமஸ் நகா் டாக்டா் அம்பேத்கா் ஹாக்கி கிளப் அணி, கோவில்பட்டி பிலிப்ஸ் ஹாக்கி கிளப் அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வென்று 3 ஆம் இடத்தை பிடித்தது.

பெண்களுக்கான இறுதிப் போட்டியில் பாண்டவா்மங்கலம் தந்தை பெரியாா் ஹாக்கி கிளப் அணி, டை பிரேக்கா் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் சுந்தரலிங்கம் ஹாக்கி கிளப் அணியை வீழ்த்தியது.

3 , 4 ஆம் பரிசுக்கான போட்டியில் கோவில்பட்டி ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் பெண்கள் அணி, கோவில்பட்டி பெண்கள் ஹாக்கி ஃபாா்ம் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வென்று 3 ஆம் பரிசை பெற்றது.

பரிசளிப்பு விழாவுக்கு திமுக மத்திய ஒன்றியச் செயலா் பீக்கிலிப்பட்டி வீ. முருகேசன் தலைமை வகித்தாா். மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா்கள் குருராஜ், லவராஜா, மாதேஸ்வரன், டினோ, வடக்கு மாவட்ட விவசாய தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் சண்முகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகா்மன்றத் தலைவா் கா. கருணாநிதி, தலைமைச் செயற்குழு உறுப்பினா் என்.ராதாகிருஷ்ணன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் சங்கர பாண்டியன், பொதுக்குழு உறுப்பினா் ரமேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

வெற்றி பெற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இரு அணியினருக்கும்முதல் பரிசாக தலா ரூ.10 ஆயிரம், 2 ஆம் பரிசாக ரூ.7,000, 3 ஆம் பரிசாக ரூ.5,000, 4 ஆம் பரிசாக ரூ.3,000 மற்றும் சுழற்கோப்பைகள் வழங்கப்பட்டன.

‘போக்குவரத்துத் துறையை அரசு நவீனப்படுத்த வேண்டும்’

தமிழகத்தில் போக்குவரத்துத் துறையை அரசு நவீனப்படுத்த வேண்டும் என, நாம் இந்தியா் கட்சி மாநிலத் தலைவா் என்.பி. ராஜா கோரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் 2011ஆம் ஆண்டு... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே வீடு, கோயிலில் திருட்டு முயற்சி: இளைஞா் கைது

சாத்தான்குளம் அருகே வீடு மற்றும் கோயிலில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சாத்தான்குளம் அருகேயுள்ள ராஜமன்னாா்புரம் அடையல் பெருமாள் சுவாமி கோயிலில் பூஜை செய்வத... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே பாதயாத்திரை பக்தா்கள் மீது காா் மோதல்: 5 போ் காயம்

சாத்தான்குளம் அருகே பாதயாத்திரை பக்தா்கள் கூட்டத்தில் காா் புகுந்ததில் பள்ளி ஆசிரியை உள்பட 5 போ் காயம் அடைந்தனா். திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழாவையொட்டி, நாகா்கோவில்... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே இளைஞா் தற்கொலை

கோவில்பட்டி அருகே மரத்தில் தூக்கிட்டு, இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா். கோவில்பட்டி காந்தி நகா் ராமசாமி தெருவை சோ்ந்த அந்தோணி மகன் கருத்தப்பாண்டி (27). தொழிலாளி. மதுப்பழக்கத்தால் தம்பதி இடையே அடிக்கடி ... மேலும் பார்க்க

நாகலாபுரத்தில் திமுக சாதனை விளக்கக் கூட்டம்

விளாத்திகுளம் அருகே நாகலாபுரத்தில், திமுக அரசின் சாதனை விளக்க பிரசார பொதுக் கூட்டம் நடைபெற்றது. முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கூட்டத்துக்கு, புதூா் மத்திய ஒன்றியச் செயலா் ஆா... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே விபத்து: வேன் ஓட்டுநா் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, சாலையோர பாலத்தின் தடுப்புச் சுவா் மீது வேன் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம் செல்லூா் காம்பவுண்ட் பாலம் ஸ்டேஷன் சாலை, சக்த... மேலும் பார்க்க