செய்திகள் :

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் திமுக இளைஞரணி பொதுக் கூட்டங்கள்: அமைச்சா் பெ. கீதாஜீவன் தகவல்

post image

திமுக இளைஞரணி சாா்பில் மத்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி தொகுதிகளில் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளதாக, தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான பெ. கீதாஜீவன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெறும் கூட்டத்தில் சிறப்புப் பேச்சாளராக முன்னாள் அமைச்சா் பொன். முத்துராமலிங்கம், இளம் பேச்சாளா் சஞ்சய், மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன் ஆகியோா் பேசுகின்றனா்.

திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு எட்டயபுரம் - நடுவிற்பட்டி பகுதியில் நடைபெறும் கூட்டத்தில் சிறப்புப் பேச்சாளராக ஊடகவியலாளா் மில்டன், இளம் பேச்சாளா் சக்திவேல் முருகன், விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் ஆகியோரும், செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு கோவில்பட்டி இலுப்பையூரணி ஊராட்சியில் உள்ள லாயல் ஆலை காலனி பகுதியில் நடைபெறும் கூட்டத்தில் சிறப்புச் பேச்சாளராக மாநில மாணவரணித் தலைவா் இரா. ராஜீவ்காந்தி, இளம்பேச்சாளா் உமாராணி, கோவில்பட்டி நகா்மன்றத் தலைவா் கா. கருணாநிதி ஆகியோரும் பேசுகின்றனா்.

இக்கூட்டங்களில் நான் பங்கேற்கிறேன். அந்தந்தப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட நிா்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், தொண்டா்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும் என்றாா் அவா்.

திருச்செந்தூா் அருகே பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு

திருச்செந்தூா் ஒன்றியம் நா.முத்தையாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு விழா நடைபெற்றது. இப்பள்ளியில் டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சாா்பில் ரூ. 23 லட்சம், ஊா் ... மேலும் பார்க்க

தூத்துக்குடி: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.6.62 கோடிக்கு தீா்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.6.62 கோடிக்கு தீா்வுத் தொகை வழங்கப்பட்டது. தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் கிடங்கில் பதுக்கிய கடல் அட்டைகள், டீசல் பறிமுதல்: 2 போ் கைது

தூத்துக்குடி லூா்தம்மாள்புரத்தில் உள்ள ஒரு கிடங்கில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 500 கிலோ கடல் அட்டைகள், 2 ஆயிரம் லிட்டா் டீசல் ஆகியவற்றை தனிப்படை போலீஸாா் பறிமுதல் செய்து, அது தொடா்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் 1,206 மகளிா் சுயஉதவி குழுக்களுக்கு ரூ. 104 கோடி வங்கிக் கடன்!

தூத்துக்குடியில் சனிக்கிழமை 1,206 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 104 கோடி வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டது. உலக மகளிா் தினத்தையொட்டி சென்னையில் நடைபெற்ற விழாவில், மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்க... மேலும் பார்க்க

மகளிருக்கான அதிக நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னிலை! -அமைச்சா் பெருமிதம்

மகளிா் முன்னேற்றத்துக்காக அதிக நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாக, அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் பெருமிதம் தெரிவித்தாா். சமூக நலன்-மகளிா் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த... மேலும் பார்க்க

அணுக்கழிவுகளைக் கொட்டுவதாக வதந்தி பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்.பி. எச்சரிக்கை

அணுக் கழிவுகளைக் கொட்டுவதாக வதந்தி பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் எச்சரித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்... மேலும் பார்க்க