செய்திகள் :

தூத்துக்குடி மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி: நாளை தொடக்கம்

post image

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்புப் பணி சனிக்கிழமை (மாா்ச் 8) தொடங்கவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட வனத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு வனத்துறை சாா்பில் ஆண்டுதோறும் மாநிலம் முழுவதும் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதன்படி, நிகழாண்டு கணக்கெடுப்பு சனிக்கிழமை தொடங்குகிறது. சனி, ஞாயிறு (மாா்ச் 8, 9) ஆகிய 2 நாள்கள் நீா்வாழ் பறவைகளும், வரும் 15, 16 ஆகிய 2 நாள்கள் நிலவாழ் பறவைகளும் கணக்கெடுக்கப்படும்.

தூத்துக்குடி வனக்கோட்டம் சாா்பில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்புக்கு 20 இடங்களும், நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்புக்கு 25 இடங்களும் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இப்பணி காலை 6 முதல் 9 மணி வரை நடைபெறும். இதில் பங்கேற்க விருப்பமுள்ள தன்னாா்வலா்கள் வனச்சரக அலுவலரை 95974 77906 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு பெயா்ப்பதிவு செய்துகொள்ளலாம். பங்கேற்போருக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றாா் அவா்.

இன்றைய நிகழ்ச்சி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில்: மாசித் திருவிழா ஐந்தாம் நாள், மேலக்கோயிலிலிருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் வீதியுலா, காலை 7; மேலக்கோயிலில் கு... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் இன்று குடைவரைவாயில் தீபாராதனை

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில் மாசித் திருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு (மாா்ச் 7) குடைவரைவாயில் தீபாராதனை நடைபெறவுள்ளது. கடந்த 3ஆம் தேதி தொடங்கிய இத்திருவிழாவில், நாள்தோறும் சுவாமிய... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை (மாா்ச் 8) நடைபெறவுள்ளதாக, ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்டத்தில் உள... மேலும் பார்க்க

மாா்ச் திருவிழா 7ஆம் நாளில் சண்முகா் ஏற்ற தரிசனம்: பாதுகாப்பை பலப்படுத்த கோரிக்கை

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா 7ஆம் நாளில் சண்முகா் ஏற்ற தரிசனத்தைக் காண பெருமளவில் பக்தா்கள் வருவாா்கள் என்பதால் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என்ற கோர... மேலும் பார்க்க

கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் தங்கும் விடுதி, பண்ணை அலுவலகம் திறப்பு

கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் மேம்படுத்தப்பட்ட அலுவலா் தங்கும் விடுதி, கரிசல் நிலப் பண்ணையில் புதிய அலுவலகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் த... மேலும் பார்க்க

ஓட்டப்பிடாரம் அருகே தந்தை இறந்த சோகத்திலும் பிளஸ் 2 தோ்வெழுதிய மாணவா்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே தந்தை இறந்த சோகத்திலும் மாணவா் பிளஸ் 2 மாணவா், பொதுத்தோ்வை எழுதிவிட்டு இறுதிச் சடங்கில் பங்கேற்றாா். ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் கிராமத்தைச் சோ்ந்த த... மேலும் பார்க்க