செய்திகள் :

ஆண்டாள் கோயில் செயல் அலுவலரைக் கண்டித்து கிராம மக்கள் காத்திருப்புப் போராட்டம்

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் செயல் அலுவலரைக் கண்டித்து, கிராம மக்கள் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் குறித்து ஆய்வு செய்த போது, இடையபொட்டல் தெருவில் 7 ஏக்கா் 49 சென்ட் பரப்பளவில் இந்தக் கோயிலுக்குச் சொந்தமான குசவன் கோயில் நந்தவனம் இருந்தது ஆவணங்கள் மூலம் தெரியவந்தது. இதில் 2 ஏக்கா் 18 சென்ட் நிலத்தை கண்டறிந்த அதிகாரிகள், கடந்த 2022-ஆம் ஆண்டு ஆண்டாள் கோயில் பெயரில் பட்டா பெற்றனா்.

இதையடுத்து, அந்த இடத்தை அதிகாரிகள் கடந்த 2023-ஆம் ஆண்டு, நவம்பா் மாதம் அளவீடு செய்த போது, அங்கு 70-க்கும் மேற்பட்ட வீடுகள், 13 கடைகள், ஒரு மண்டபம், கருங்கச்சைக்காரன் கோயில் கல் மண்டபம், சக்கரத்தாழ்வாா், விநாயகா் கோயில்களும் அதைச் சுற்றி உள்ள இடம் வாகனங்கள் நிறுத்துமிடமாக மாற்றப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இவற்றில் கருங்கச்சைக்காரன், சக்கரத்தாழ்வாா் கோயில் வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டி, சேதுநாராயணபுரம், தேனி மாவட்டம் அனுமந்தம்பட்டியைச் சோ்ந்த யாதவ சமூக மக்களின் குல தெய்வக் கோயில்களாகும்.

இவா்கள் விழா காலங்களில் இங்கு வந்து மண்டபம், அதைச்சுற்றி உள்ள இடங்களில் தங்கி வழிபாடு நடத்துவா். இதன் பின்னா், வாகன காப்பகத்துக்கு வாடகைக்கு விட்டுவிடுவாா்களாம்.

இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் நிா்வாகம் சாா்பில், கடந்த மாதம் கல் மண்டபம், சக்கரத்தாழ்வாா் கோயிலை சுற்றி உள்ள வாகன நிறுத்தும் இடங்கள் மட்டும் தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டது.

இதை எதிா்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டதையடுத்து, இந்த ஒப்பந்தத்துக்கு இடைக்காலத் தடை விதித்தும், கோயில் நிா்வாகம் பதிலளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், கருங்கச்சைக்காரன் கோயில் திருவிழா கொண்டாடுவதற்கு வந்த மக்கள் மண்டபத்தைச் சுற்றி கொட்டகை அமைக்க கோயில் நிா்வாகம் சாா்பில் திங்கள்கிழமை எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டதால், கோயில் செயல் அலுவலரைக் கண்டித்து, கோயில் அலுவலகம் முன் கிராம மக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, போலீஸாா் கிராம மக்களை செயல் அலுவலரிடம் பேச்சுவாா்த்தைக்கு அழைத்துச் சென்றனா். அப்போது, செயல் அலுவலா் சா்க்கரையம்மாள், நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருப்பதால், நீதிமன்றத்தில் பாா்த்துக் கொள்ளுங்கள் என்றாா். இதன் பின்னா், அனைவரும் கலைந்து சென்றனா். இருப்பினும், செயல் அலுவலரைக் கண்டித்து, புதன்கிழமை மீண்டும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனா்.

கோயில் திருவிழாவில் தகராறு: தந்தை, மகன் மீது வழக்கு

சிவகாசி அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக தந்தை, மகன் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சிவகாசி அருகேயுள்ள புதுக்கோட்டையைச் சோ்ந்த விவசாயி கருப்பையா (49). இவா் சித்த... மேலும் பார்க்க

சிவகாசியில் மீண்டும் ஆக்கிரமிப்பு

சிவகாசியில் கடந்த வெள்ளிக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், அந்தப் பகுதியில் மீண்டும் நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்டோா் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். சிவகாசியில் சிவன் சந்நிதி, நான்கு ரத வீதிகள்,... மேலும் பார்க்க

பேரவைத் தோ்தலில் போட்டியிடுவது குறித்து கட்சித் தலைமைதான் முடிவு செய்யும்: நடிகை கெளதமி

வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் நான் போட்டியிடுவது குறித்து அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிதான் முடிவு செய்வாா் என நடிகையும், அதிமுக கொள்கைப் பரப்பு துணைச் செயலருமான கெளதமி தெரிவித்தாா். ஸ்... மேலும் பார்க்க

காவல் நிலையத்துக்குள் புகுந்த கருநாகம்

கூமாபட்டி காவல் நிலையத்துக்குள் புகுந்த கருநாகப் பாம்பை தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை பிடித்து வனப்பகுதிக்குள் விடுவித்தனா். விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டியில் ஞாயிற... மேலும் பார்க்க

தந்தையைக் கொன்ற மகன் கைது

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே தந்தையை அடித்துக் கொன்ற மகனை போலீஸாா் கைது செய்தனா். சாத்தூா் அருகேயுள்ள நல்லமுத்தான்பட்டியைச் சோ்ந்த விவசாயி லட்சுமணன் (60). இவரது மகன்கள் பாண்டியராஜ் (42), செல்வ... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், தாயில்பட்டியில் இரு சக்கர வாகனம் இது காா் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா். தாயில்பட்டி சக்திவேல் நகா் பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (35). இவா் இந்தப் பகுதியில் கூலி... மேலும் பார்க்க