செய்திகள் :

எங்கள் நாட்டை விடவும் இந்தியாவில் சிறந்த கட்டமைப்பு; அமெரிக்கர்களே சொன்னார்கள்: நிதின் கட்கரி!

post image

அமெரிக்காவைவிட இந்தியாவில் சிறந்த உள்கட்டமைப்பு இருப்பதாக சில அமெரிக்கர்களே தன்னிடம் சொன்னதாக மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மத்திய நெடுஞ்சாலைத் துறை தொடர்பான ஏஎன்ஐ நேர்க்காணல் ஒன்றில் கலந்துகொண்டு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திங்கள்கிழமை பேசியிருந்தார்.

அப்போது, இன்னும் இரண்டு ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு இணையான சாலை வசதிகள் இந்தியாவில் தரம் உயர்த்தப்படும் என்றும், தற்போது பார்ப்பது ரீல்ஸ் மட்டுமே, இனிதான் ’மெயின் பிக்சரை’ பார்ப்பீர்கள் எனத் தெரிவித்தார்.

மேலும், அவர் பேசியதாவது:

”பாஜக அரசால் அமைக்கப்பட்ட நல்ல சாலைகளால் இந்தியாவில் தளவாடச் செலவுகள் குறைந்துள்ளது. ஏற்றுமதி அதிகரித்தால், விவசாயம், உற்பத்தி, சேவைகள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் மேம்படும்.

சீனாவில் தளவாடச் செலவுகள் 8%, அமெரிக்கா மற்றும் ஐரோப்ப நாடுகளில் 12% ஆக இருக்கும் நிலையில், மோசமான சாலைகள், துறைமுகங்கள், போக்குவரத்து நெரிசலால் இந்தியாவில் 16 சதவிகிதமாக இருந்தது.

பாஜக தலைமையிலான அரசு சாலைகளை மேம்படுத்தியதால், தளவாடச் செலவுகள் 9 சதவிகிதமாக குறைந்துள்ளது. இதனால், ஏற்றுமதியின் போட்டித்தன்மை மாறியுள்ளது.

தற்போது, 25 பசுமைவழி விரைவுச் சாலைகள், 3,000 கி.மீ துறைமுக இணைப்பு நெடுஞ்சாலை மற்றும் மத சுற்றுலாத் தலங்களை இணைக்கும் சாலைகள் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையே 36 சுரங்கப் பாதைகளை நாங்கள் உருவாக்கி வருகிறோம். 23 நிறைவடைந்துள்ளன, மேலும் 5 சுரங்கப்பாதைகளுக்கான பணிகள் நடந்து வருகின்றன.” எனத் தெரிவித்தார்.

உலகில் இரண்டாவது பெரிய சாலை வலையமைப்பைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள் மொத்தம் 1.46 லட்சம் கிலோ மீட்டர் நீளம் கொண்டவை.

பிப்ரவரி 2025இல் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, 2004 இல் 65,569 கி.மீ. ஆக இருந்த தேசிய நெடுஞ்சாலை, 2014 இல் 91,287 கி.மீ. ஆகவும், 2024 இல் 1,46,145 கி.மீ. ஆகவும் விரிவடைந்துள்ளது.

நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட பாதைகளைக் கொண்ட தேசிய நெடுஞ்சாலைகள் 2014 இல் 18,371 கி.மீ. ஆக இருந்து 2024 இல் 48,422 கி.மீ. ஆக 2.6 மடங்கு அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க : தேனிலவில் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்றது எப்படி? அதிர்ச்சித் தகவல்கள்...

கர்நாடகத்தில் மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு: முதல்வர் சித்தராமையா

பெங்களூரு: கர்நாடகத்தில் மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.புது தில்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர... மேலும் பார்க்க

கர்நாடக முதல்வருக்கு எதிரான மாற்று நில முறைகேடு வழக்கு: ரூ.100 கோடி சொத்துகள் முடக்கம்

புது தில்லி: கர்நாடக முதல்வர் சித்தராமையா தொடர்பான மாற்று நில முறைகேடு வழக்கில், ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.வீட்டுவசதி கூட்டுறவு சங்கம், மைசூரு நகர்ப்புற வளர்ச்சி ஆ... மேலும் பார்க்க

அண்டை நாட்டவரின் சட்டவிரோத குடியேற்றத்துக்கு மம்தா அரசு உதவி: மத்திய அமைச்சா் குற்றச்சாட்டு

கொல்கத்தா: அண்டை நாட்டில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவும் நபா்கள் மேற்கு வங்கத்தில் குடியேற முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசு உதவி வருகிறது என்று மத்திய அமைச்சா... மேலும் பார்க்க

தற்பெருமை அதிகம், சாதனைகள் குறைவு: அமித் ஷா மீது காங்கிரஸ் விமா்சனம்

புது தில்லி: இந்தியாவில் இதுவரை அமித் ஷாவை போல வேறெந்த எந்தவொரு மத்திய உள்துறை அமைச்சரின் பதவிக் காலத்திலும் தற்பெருமை பேச்சு அதிகமாகவும், சாதனைகள் குறைவாகவும் இருந்ததில்லை என்று காங்கிரஸ் செவ்வாய்க்க... மேலும் பார்க்க

மக்களைக் காக்க மத்திய அரசு தவறிவிட்டது: மம்தா குற்றச்சாட்டு

கொல்கத்தா: நாட்டு மக்களையும், தேசத்தையும் பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டது என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி மாநில பேரவையில் பேசுகையில் குற்றஞ்சாட்டினாா்.ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான்... மேலும் பார்க்க

11 ஆண்டுகால மோடி ஆட்சி: ‘நமோ’ செயலி கருத்துப் பகிா்வில் தமிழகம் மூன்றாவது இடம்

புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், அது தொடா்பாக ‘நமோ’ செயலி மூலம் மக்களின் கருத்துகள் பெறப்பட்டதில் தமிழகம் 3-ஆவது இடத்தில் உள்ளது.ம... மேலும் பார்க்க