செய்திகள் :

எங்கள் நாட்டை விடவும் இந்தியாவில் சிறந்த கட்டமைப்பு; அமெரிக்கர்களே சொன்னார்கள்: நிதின் கட்கரி!

post image

அமெரிக்காவைவிட இந்தியாவில் சிறந்த உள்கட்டமைப்பு இருப்பதாக சில அமெரிக்கர்களே தன்னிடம் சொன்னதாக மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மத்திய நெடுஞ்சாலைத் துறை தொடர்பான ஏஎன்ஐ நேர்க்காணல் ஒன்றில் கலந்துகொண்டு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திங்கள்கிழமை பேசியிருந்தார்.

அப்போது, இன்னும் இரண்டு ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு இணையான சாலை வசதிகள் இந்தியாவில் தரம் உயர்த்தப்படும் என்றும், தற்போது பார்ப்பது ரீல்ஸ் மட்டுமே, இனிதான் ’மெயின் பிக்சரை’ பார்ப்பீர்கள் எனத் தெரிவித்தார்.

மேலும், அவர் பேசியதாவது:

”பாஜக அரசால் அமைக்கப்பட்ட நல்ல சாலைகளால் இந்தியாவில் தளவாடச் செலவுகள் குறைந்துள்ளது. ஏற்றுமதி அதிகரித்தால், விவசாயம், உற்பத்தி, சேவைகள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் மேம்படும்.

சீனாவில் தளவாடச் செலவுகள் 8%, அமெரிக்கா மற்றும் ஐரோப்ப நாடுகளில் 12% ஆக இருக்கும் நிலையில், மோசமான சாலைகள், துறைமுகங்கள், போக்குவரத்து நெரிசலால் இந்தியாவில் 16 சதவிகிதமாக இருந்தது.

பாஜக தலைமையிலான அரசு சாலைகளை மேம்படுத்தியதால், தளவாடச் செலவுகள் 9 சதவிகிதமாக குறைந்துள்ளது. இதனால், ஏற்றுமதியின் போட்டித்தன்மை மாறியுள்ளது.

தற்போது, 25 பசுமைவழி விரைவுச் சாலைகள், 3,000 கி.மீ துறைமுக இணைப்பு நெடுஞ்சாலை மற்றும் மத சுற்றுலாத் தலங்களை இணைக்கும் சாலைகள் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையே 36 சுரங்கப் பாதைகளை நாங்கள் உருவாக்கி வருகிறோம். 23 நிறைவடைந்துள்ளன, மேலும் 5 சுரங்கப்பாதைகளுக்கான பணிகள் நடந்து வருகின்றன.” எனத் தெரிவித்தார்.

உலகில் இரண்டாவது பெரிய சாலை வலையமைப்பைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள் மொத்தம் 1.46 லட்சம் கிலோ மீட்டர் நீளம் கொண்டவை.

பிப்ரவரி 2025இல் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, 2004 இல் 65,569 கி.மீ. ஆக இருந்த தேசிய நெடுஞ்சாலை, 2014 இல் 91,287 கி.மீ. ஆகவும், 2024 இல் 1,46,145 கி.மீ. ஆகவும் விரிவடைந்துள்ளது.

நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட பாதைகளைக் கொண்ட தேசிய நெடுஞ்சாலைகள் 2014 இல் 18,371 கி.மீ. ஆக இருந்து 2024 இல் 48,422 கி.மீ. ஆக 2.6 மடங்கு அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க : தேனிலவில் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்றது எப்படி? அதிர்ச்சித் தகவல்கள்...

நாட்டின் பாதுகாப்பு நிலை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த தயாரா? காங்கிரஸ் கேள்வி

‘பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகான நாட்டின் பாதுகாப்பு நிலை மற்றும் வெளியுறவு கொள்கை சவால்கள் குறித்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் முழு விவாதம் நடத்த பிரதமா் நரேந்திர மோடி தயாராக உள்ள... மேலும் பார்க்க

காத்திருப்பு ரயில் டிக்கெட் நிலவரம்: 24 மணி நேரத்துக்கு முன்பே அறிவிப்பு- சோதனை முறையில் திட்டம் அறிமுகம்

காத்திருப்போா் பட்டியலில் இருக்கும் ரயில் பயணிகளுக்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக அவா்களின் டிக்கெட் உறுதிப்பாடு நிலை குறித்த தகவலை அளிக்கும் திட்டத்தை சோதனை முறையில் இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளத... மேலும் பார்க்க

கடலில் மூழ்கிய லைபீரிய சரக்குக் கப்பல்: உரிமையாளா் மீது கேரள காவல் துறை வழக்கு

கேரள கடல் பகுதியில் மூழ்கிய லைபீரிய சரக்குக் கப்பல் உரிமையாளா்கள், கேப்டன், பணியாளா்கள் மீது கேரள காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். பாரத நியாய சன்ஹிதா சட்டம் 285 முதல் 288 வரையிலான பிரிவுகளில் ... மேலும் பார்க்க

இந்திய கடற்படைக்கு நன்றி தெரிவித்த சீனா!

கேரள கடற்பகுதியில் தீப்பிடித்த சரக்குக் கப்பலில் இருந்து சீன பணியாளா்களை மீட்டதற்காக இந்திய கற்படைக்கு சீனா நன்றி தெரிவித்துள்ளது. ‘ கொழும்பில் இருந்து மும்பைக்கு கேரள கடல் பகுதி வழியாக சென்ற சிங்கப்ப... மேலும் பார்க்க

ராகிங் தடுப்பு விதிகளை பின்பற்றாத 89 கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்: யுஜிசி நடவடிக்கை

ராகிங் தடுப்பு விதிமுறைகளை முறையாக அமல்படுத்தவில்லை எனக் கூறி தமிழகத்தில் ஐந்து கல்வி நிறுவனங்கள் உள்பட நாடு முழுவதும் 89 கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) நோட்டீஸ் அனுப்பி நடவடிக... மேலும் பார்க்க

குற்றவாளியைப் போல இந்தியருக்கு விலங்கிட்ட சம்பவம்: அமெரிக்காவிடம் முறையிட்ட இந்தியா

அமெரிக்க விமான நிலையத்தில் குற்றவாளியைப் போல இந்தியா் ஒருவருக்கு விலங்கிட்டு மோசமாக நடத்திய சம்பவம் குறித்து அமெரிக்காவிடம் இந்தியா முறையிட்டது. அமெரிக்காவின் நியூவா்க் விமான நிலையத்தில் இந்தியா் ஒருவ... மேலும் பார்க்க