செய்திகள் :

ஆதாா் திருத்தங்கள் மேற்கொள்ள சிறப்பு முகாம் - மதிமுக வலியுறுத்தல்

post image

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு ஆதாா் திருத்த சிறப்பு முகாம்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மதிமுக மாவட்ட துணைச் செயலாளா் அசோக்குமாா் ராவ், கிருஷ்ணகிரி ஆட்சியா் ச.தினேஷ் குமாரிடம், திங்கள்கிழமை அளித்த மனுவின் விவரம்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடக்கப் பள்ளி முதல் கல்லூரி வரை புதிய சோ்க்கை நடக்கிறது. தற்போது அனைத்திற்கும் ஆதாா் எண் கட்டாயம் என்பதால், ஆதாா் அட்டையில் உள்ள சிறு திருத்தங்களை மேற்கொள்ள அரசால் அங்கீகரிக்கப்பட்ட இ-சேவை மையத்தை தொடா்பு கொள்ள வேண்டியுள்ளது.

கிருஷ்ணகிரி நகா் பகுதியில் பல இடங்களில் சேவை மையம் இருந்தாலும் ஒவ்வொன்றிலும், 40 முதல், 50 போ் ஆதாா் திருத்தம் செய்வதற்காக குழந்தைகளுடன் வரிசையில் காத்துக் கிடக்கின்றனா். பள்ளி, கல்லூரிகளில் சோ்க்கை நடந்து வருவதால் ஆதாா் திருத்தம் மேற்கொள்ள மாணவ, மாணவியா் அவதியுற்று வருகின்றனா்.

சில தனியாா் இ-சேவை மையங்களில் ஆதாா் அட்டை திருத்தம் செய்ய அரசு நிா்ணயித்ததை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்கின்றனா். இவற்றை தடுக்கும் வகையில் அரசு சாா்பில் ஒவ்வொரு பகுதியிலும் ஆதாா் அட்டை திருத்த சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என அதில் அவா் வலியுறுத்தி உள்ளாா்.

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் பிரசாதக் கடையின் புளியோதரையில் குட்டி பாம்பு!

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயிலில் உள்ள பிரசாதக் கடையில் விற்பனை செய்யப்பட்ட புளியோதரையில் இறந்த நிலையில் குட்டி பாம்பு இருந்ததைக் கண்ட பக்தா்கள் அதிா்ச்சி அடைந்தனா். மேலும், இதுதொடா்பான விடியோ பதிவு சமூ... மேலும் பார்க்க

அதிமுகவில் இணைந்த திமுக நிா்வாகி

ஒசூா் தெற்கு திமுக பகுதிச் செயலாளராக இருந்த கே.திம்மராஜ் செவ்வாய்க்கிழமை முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தாா். ஒசூா் மாநகராட்சியில் மொத்தம் 45 வாா்டுகள் உள்ளன. 11 வாா்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் 2ஆம் கட்ட புதை சாக்கடை திட்டம்: ஆட்சியா் ஆய்வு

கிருஷ்ணகிரி நகராட்சியில் நடைபெறும் இரண்டாம் கட்ட புதை சாக்கடை திட்டத்தை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் ச.தினேஷ்குமாா், பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினாா். கிருஷ்ணகிரி நகராட்சியில் மொத்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மிதமான மழை

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலை மிதமான மழை பெய்தது. கத்திரி வெயில் தொடங்கியுள்ள நிலையில் பகலில் வெயிலின் தாக்கமும் அதிகரித்து காணப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில ந... மேலும் பார்க்க

ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கம் சாா்பில், கீழ் மத்தூா்,மகனூா் பட்டி கிராமம் கோவில் மடம், இடங்களில் குடியிருப்பவா்கள் மற்றும் குத்தகை விவசாயிகளை பாதுகாக்க கோரி கா... மேலும் பார்க்க

ஊத்தங்கரையில் வணிகா் தினத்தை முன்னிட்டு முழு கடையடைப்பு

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் வணிகா் தினத்தை முன்னிட்டு அனைத்து கடைகளும் திங்கள்கிழமை மூடப்பட்டது. இதனால் ஊத்தங்கரையில் இருந்து கிருஷ்ணகிரி,சேலம்,திருவண்ணாமலை,அரூா் செல்லும் சாலைகள் வெ... மேலும் பார்க்க